பாஸ்கர்

 

எவ்வளவு பெரிய மரம்அது ?

கோடாலி கொண்டு வெட்டவே வாரம் ரெண்டாகும்

கனிகள் பொறுக்க கால் நோவும்

சருகு இலையை எரித்தால் பகல் இருட்டாகும்

கிளைகள் தூக்க யானை கூலி கேட்கும்

கூழ் செய்தால் காகிதம் சரியாய் மூன்று டன்

கூடு கட்டிய பறவைகளுக்கு பதில் சொல்ல வேண்டாம்

காற்று ஏன் இல்லையென கோபித்து கொள்ளலாம்

நிழல் வேண்டுவோர் வெளியே வராதீர்.

மரம் என்ன திட்டவா செய்யும்?

இல்லை கை நீட்டி காயம் செய்யுமா?

தினம் ஒரு மரம் வெட்டுவோம்

வெட்டிய பின் ஓய்வெடுக்க எந்த மரம் செல்வது ?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *