பெருவை பார்த்தசாரதி

 

 

 

 

 

 

 

 

வரைமுறை ஏதுமிலையெல்லாம் வல்ல இறைவனுக்கு

……….வகையாய் அனைத்தையும் படைத்தே ஆளுகிறான் *

கரையிலாக் கடல்போல் பரந்த(அ)வன் படைப்பிலே

……….காணுகின்ற அற்புதத்தில் ஒன்றுதான் பறவையினம் *

இரைதேடவே வாழ்வில் பெரும்பகுதி கழிந்துவிடும்

……….இதற்கொரு ஈடிணையான படைப்பிலை யெனலாம் *

வரைவியலோடு நாமிதை ஆராய்ந்தால்? நமக்குமே

……….வரும் பொறாமை! வாழ்விலது வாராதிருக்கவேணும் *

 

 

மண்டலத்தில் உலவு முயிரினத்தில் பறவையுமொன்று

……….ஒவ்வொன்றுக்கும் ஒப்பிலாத தனித் திறமையுண்டு *

உண்டழிவென்று தெரிந்தாயிவை? ஓராயிரம் மைல்

……….நீண்டதூரம் ஓய்வின்றிப் பறக்கிறது! வியப்புதானே *

கண்டம்விட்டுக் கண்டம் தாண்டியும் பறக்குமாமது

……….கொண்ட கொள்கையால் சேருமிடம் சென்றுவிடும் *

பண்டைக் காலமுதலே பறவையதன் குணமறிந்து

……….படைப்பின் பயனையறிந்து கொண்டார் பாமரரும் *

 

 

புரையோடிக் கிடக்கும் லஞ்சஊழல் உலகினில்

……….புரிந்துகொள்ள வேண்டிய தென ஏராளமுண்டாம் *

வரையிலாமல் படித்தது வாழ்வில்செய்த பிழையா?

……….வளர்த்த தகுதிக்கு தகும்வேலை தரணியிலில்லை *

அரைப்படிப்பு படித்து அரங்கத்தில் அமர்ந்தவரோ

……….ஆயிரம் கேள்விகேட்பார் வேலையென வந்தால் *

நரைமுடியும் தோன்றி ரத்தநாளமும் சுருங்கியது

……….இரைதேடும் பறவைபோல இன்றும் அலைகிறேன் *

============================================================

நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு:: 26 March’2018

படம் நன்றி:: கூகிள் இமேஜ்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *