கண்ணீரும் கலக்கட்டும்விடு
ஜீவா நாராயணன்
விடு விடு
நீரை திறந்துவிடு – அது
உங்கள் காவேரியே ஆனாலும்
அணைகளில் இருந்து திறந்துவிடு
மகிழ்ச்சியில் கரை
புரண்டோடவிடு
எங்கள் மண்ணை
தழுவவிடு
ஆனந்த கண்ணீரை
சிந்தவிடு
எங்கள் பயிரும்
செழிக்கட்டும்விடு
எங்கள் உள்ளமும்
குளிரட்டும்விடு
எங்கள் வயலுக்கு
தாய்ப்பால் கொடு
எங்கள் விவசாயிக்கு
உயிரை கொடு
சுயநல எல்லைகள்
உடைத்துவிடு
மனிதநேய எல்லைகள்
பரவவிடு
விடு விடு
நீரை திறந்துவிட்டு
எங்கள் கண்ணீரும் – அதில்
கலக்கட்டும் விடு