சற்றே சிந்தித்துப்பார் மனிதா

சற்றே சிந்தித்துப் பார் மனிதா !

பலத்த காற்றிலும் நாணல் வளைந்து கொடுக்கின்றதே
மனிதா வளைந்து கொடுக்க கற்றுக்கொள் !

காகங்கள் கற்றுக்கொடுக்கின்றன ஒற்றுமையுடன் கூடி வாழ
எறும்புகள் கற்றுக்கொடுக்கின்றன சேமிப்பின் சிறப்பை !

தேனீக்கள் கற்றுக்கொடுக்கின்றன சுறு சுறுப்பின் சூட்சமத்தை
ஆமைகள் கற்றுக்கொடுக்கின்றன விடாமுயற்சி எனும் பண்பை !

நாயும், பசுவும் செய்ந்நன்றி என்ன என்பதை அறிவுறுத்துகின்றன
எருதுகள் தனது கடினஉழைப்பை உதாரணமாக காட்டுகின்றது!

சிங்கமும்,யானையும், வீரத்திற்கும்,பலத்திற்கும் உவமையாகின்றன
மயிலும், குயிலும் அழகுக்கும், குரலுக்கும் எடுத்துக்காட்டாகின்றன!

ஐந்தறிவு ஜீவன்களே நமக்கு நல்லவைகளையே கற்றுக்கொடுக்கின்றன
ஆறறிவு உள்ள மனிதனே, நீ மட்டும் கெட்டதையே கற்றுக்கொடுக்கின்றாய்!

ரா.பார்த்தசாரதி

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *