நலுங்கு மணம்
நான்கு காலிடா பந்தலில்
நடந்த திருமணம் – இல்லை
நான்கு சுற்றிற்குள் மாலை மாற்றிய
நலுங்கு மணம்…
கருப்பனைச் சாட்சியாக வைத்து நடந்த
சாதியம் மில்லா முதல்மணம்…..
கருக்கலைப்பு நிகழ முடியாததால்
கண்டுணராத புது மணம்
மாலை மாற்று இல்லை – ஆனால்
தாலி மாற்று அவசியம்….
மாதம் நான்கை விழுங்குவதால்
தாயின் தாலியே
தான மிடுகிறது..
காவல் எப்போது காலை
கவ்வும் என்பதற்காக…
நாங்கள்
வீடு இல்லா வானம்பாடி பறவைகள்
வாடகைக்கு வீடு தேடுகிறோம்
வெளியேற மனமில்லாமல்….
வாரிசு எங்களுடையது
வயிற்றுக்குள் இருந்தாலும் – நீ
வயிற்று எரிச்சல் பட்டாலும்,
வாயும் வயிரும் எங்க
வகையறா தானே?
வெண்மை நிறத்தில்.
மூன்று திங்களுக்கு முன்பு நிகழ்ந்த
முரசறையா திருமண மாச்சே….
உறவுகள் உதாசினப் படுத்தவில்லை – ஆனால்
ஊருக்குள் வராதே என்கிறது.
ஓரிரு திங்களும்
ஒரு சுவற்றுக்குள்ளே
முகம் பார்த்தேன்.
பஞ்ச பாண்டவா்கள்
படுத்திருந்த படுக்கையை
பாதி இரவுக்கு பழக்கப்படுத்தினேன்
படுக்கையும் எலிக்குஞ்சு
சத்தமே எதிர்ப்பட்டன.
அவ்வப்போது பகலும் இரவாகின
பாண்டவா்கள் இல்லா நிலையில்.
காதல் எனும் புனிதத்தில்
காமம் இழந்து
நலுங்கு மணத்தில் தாலி ஏற்கிறேன்
தாய்மை எனும் பெயரோடு….
முனைவர். இரா. மூர்த்தி
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020.
E-Mail : ramvini2009@gmail.com