மீ.விசுவநாதன்

உனக்கும் எனக்கும் தெரியுமா? – அந்த
   உயர்ந்த துறவிப் பெருமைகள் ?
கனக்கும் மனத்து கவலையை – அவர்
   கரைத்து விடுவார் புரியுமா?
சினத்தை அடக்கி சிவனையே – தவம்
   செய்யும் சிறந்த தவசியாம் !
தினத்தை அறிந்து உலகினை – நல்ல
   திசைக்குத் திருப்பி விடுவராம்.

கருங்கற் சிலைக்குள் கடவுளை – நாம்
   காணும் வழியை உரைப்பராம்
சிருங்க கிரியில் இருப்பினும் – நம்
   சிறிய உளத்தும் நிறைவராம் !
பெருங்கு ணத்த பிநவரே – எளிய
   சீடர் நமக்கே அருள்வராம்
நெருங்கி யவரை நினைவிலே – ஒரு
   நிமிடம் இருத்தப் பழகுவோம்.

(இன்று 06.11.2018 தீபாவளித் திருநாள்.
ஜகத்குரு அனந்த ஸ்ரீ விபூஷித
ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்தரின் ஜெயந்தி தினம்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *