திருப்பூர் சக்தி விருது 2019 விருது

0

“பெண்ணுரிமை என்பது கேட்டுப் பெறுவதல்ல. ஆண்கள் இயல்பாகவே தருவது. கிடைக்காத போது பெண்ணுரிமையை இலக்கியப் படைப்புகளிலும் வலியுறுத்த வேண்டியிருக்கிறது. அதைத்தான் இன்றைய பெண்கள் தங்களின் சமையல் காரியங்களோடும், வீட்டுக் காரியங்களோடும் சேர்ந்து எழுதுவதையும் செய்து வருகிறோம். பெண்கள் பல துறைகளில் முன்னேறியிருக்கிறோம்.” என்றார் சக்தி விருது 2019 பெற்ற கவிஞர் உமாமகேஸ்வரி. அவரோடு சேர்த்து மொத்தம் 21 பெண்களுக்கு இலக்கியம், கல்வித்துறை, ஓவியம், சமூகப்பணி சார்ந்தவர்களுக்கு ஞாயிற்றுக் கிழமை வழங்கப்பட்டன.

“இரு கைதட்டினால்தான் ஓசை கிடைக்கும். பெண், ஆண் என்ற பேதமில்லாமல் படைப்பாளிகள் படைப்புகளில் ஈடுபட்டுச் சமூக மேம்பாட்டிற்கான கருத்துக்களைப் படைப்புகளில் வெளிப்படுத்த வேண்டும். வாசிப்பும், புத்தகப் பதிப்பும் இன்றைக்கு பின்னுக்குத் தள்ளப்படும் சூழலில், புத்தகங்களை முன் நிறுத்தி படைப்பாளிகளைக் கொண்டாட வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்காகவே புத்தகக் கண்காட்சிகளும் இலக்கிய பரிசுகளும் தேவைப்படுகின்றன“ என்றார் விழாவில் கலந்து கொண்ட பதிப்பாளர் ரவி தமிழ்வாணன் அவர்கள்.

திருப்பூர் சக்தி விருது 2019

திருப்பூர் சக்தி விருதுகளை ஆண்டுதோறும் சிறந்த பெண் படைப்பாளிகளுக்கு 20 ஆண்டுகளாக வழங்கி வருவதன் தொடர்ச்சியாக இவ்வாண்டும் 2/6/19 அன்று இடம்: பிகேஆர் இல்லம் , மில்தொழிலாளர் சங்கம், ஊத்துக்குளி சாலையில் விழா நடைபெற்றது .

இவ்வாண்டு திருப்பூர் சக்தி விருது 2019 விருது பெற்றோர் : உமா மகேசுவரி, கோவை; தனசக்தி, நாமக்கல்; நா. நளினிதேவி, மதுரை; பரிமளாதேவி, திண்டுக்கல்; செல்வகுமாரி, புதுவை; தமிழரசி, விழுப்புரம்; ந.கிருஷ்ணவேணி, காங்கயம்; செல்வசுந்தரி, திருச்சி; நர்கீஸ்பானு, தஞ்சை; பூங்குழலி, பழனி; சிந்துஜா, சென்னை; ஷோபா பன்னீர் செல்வம், அரியலூர்; இரா. மேகலா, காரைக்கால்; ரத்னமாலா புருஷ், நாகர்கோவில்; கமலதேவி, உறையூர்; தீபா, கோவை; ஜி ஏ பிரபா, கோபி; வி. ஆனந்தி, தில்லி; மணிமாலா மதியழகன், சிங்கப்பூர்; மரிய தெரசா, சென்னை; இறை நம்பி, வேலூர்

தோழர் பி ஆர். நடராஜன் (திருப்பூர் மாவட்ட செயலாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்) தலைமை வகித்தார், வழக்கறிஞர் இரவி பரிசு பெற்றப்படைப்பாளிகளின் படைப்புகளை அறிமுகப்படுத்தினார்.எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் திருப்பூர் சக்தி விருதுகளை வழங்கினார். ஓவியக்கண்காட்சியில் இயற்கை ஓவியங்கள் “மரம் அறிய..” .என்றத் தலைப்பில் ஓவியர்கள் தூரிகை சின்ராஜ், ஏ .தர்ஷணி ஆகியோரின் ஓவியங்கள் இடம்பெற்றன.

எழுத்தாளர் சுப்ரபாரதி மணியனின் “திருப்பூர்” (திருப்பூரை மையமாகக் கொண்ட சிறுகதைகள் தொகுப்பு – நிவேதா பதிப்பகம் சென்னை வெளியீடு , ரூ125) நூலினைக் கல்வியாளர் ஜெயா மோகன் வெளியிட பேரா. செல்வகுமாரி, கவிஞர் அம்பிகா குமரன் பெற்றுக்கொண்டனர்.

பாரதி வாசன், அம்பிகா,கனல் , அருணாசலம், துருவன் பாலா, துசோபிரபாகர் கவிதைகள் வாசித்தனர்

தோழர் சண்முகம் ( திருப்பூர் மாவட்டத் தலைவர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ) நன்றியுரை வழங்கினார்.

படங்கள் கீழே….

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.