–மீ.விசுவநாதன்
இதோ இதோ சிவலோகம் – என்
இதயம் அவனின் பனிமேகம்
நிதானமாய் ஓங்காரம் – அதில்
நின்று காண்பேன் சிவரூபம்.
மின்னலை வீசிடுவான் – கார்
மேக மாகப் பொழிந்திடுவான்
என்னிலைத் துடிப்பறிந்து – மன
இம்சை அலம்பித் துடைத்தெறிவான்
நந்தியை நகரவைத்து – சிவ
நடனம் காண அருள்புரிவான்
புந்தியில் புரியவைத்து – என்
பொல்லா “நானை” விரட்டிடுவான்.


Leave a Reply