செண்பக ஜெகதீசன்

குடிக்கத் தண்ணீர் வைத்தால்

கிடக்குது ஆகாசம்

குடத்துக்குள்ளே,

கூடக் கிடக்கும்

குட்டிக் குட்டியாய் நட்சத்திரங்கள்..

 

கொட்டிப் பார்த்தது குழந்தை-

குடித்தது பூமி..

குழந்தைக்கு வந்தது

குதூகலமா..

ஏமாற்றமா?

பெரும்பாலும் நம்மில்

பலரும் பிள்ளைகளாய்…!

 

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “குழந்தைக்கு

  1. .கவிதைக்கு புதிய கோணமும், பூமிக்கு நீரும், மனதுக்கு சந்தோஷமும் தந்த கவிஞருக்கு நன்றி.

  2.       An encouraging comment by Baagampiriyal…!
                 
                                                                  Nantriyudan,
                                                                         -SJ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.