பாஸ்கர் சேஷாத்ரி
 
ஒவ்வொரு முறை காற்றடிக்கையில் ஒரு துடிப்பு .
இப்போது எதிர்த் திசையில்
படபடப்பு அதிகம் ..
ஒவ்வொரு தாக்குக்கும் ஓர் எதிர்மறை சப்தம் .
எத்தனை நாள் சிறைப்பிடிப்பு ?
விடுதலை வேட்கை என்ன பெரிய சுகம்?
ஆதாரம் ஏதுமில்லை -அவஸ்தைகள் அந்தரத்தில் .
யாருடைய கனவோ ஆகாசம் நோக்கி .
ஆனாலும் இம்முறை காற்றால் விடுதலை .
மெல்ல தவழ்ந்து , தவழ்ந்து .. என்ன சுதந்திரம் .
ஆனாலும் துக்கம் என் மனத்தின் ஓரத்தில் .
இலக்கிலா வாழ்வு பரம சுகம்
நானும் நூல் அறுந்த காற்றாடியாய் அலைகிறேன் …

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *