மயக்கம் எனது தாயகம்!

பாஸ்கர் சேஷாத்ரி

பழங்கதை எல்லாம் பேசியாச்சு
ஆரவார நாட்களை அசை போட்டாச்சு
செய்த தியாகங்களை எல்லாம் பட்டியல் செய்தாயிற்று
வஞ்சம் பேசி வீழ்த்தியவர்கள் கணக்கில் அடங்கா
பெருமை என நினைத்ததெல்லாம் மண்ணோடு போயிற்று
சுயமே தான் வாழ்க்கையெனச் சுழன்று வந்து சுட்டாலும்.
உதறத்தான் முடியவில்லை – உயிர் தான் பாரமிங்கே
தத்துவங்கள் தவறில்லை – தாத்பர்யம் தவறில்லை
கற்றவன் தான் மூடனிங்கே, காலத்தை தொலைத்த பின்னே!


Photo courtesy: https://www.maxpixels.net

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *