ஓடிப்போய் திறந்த கதவால் கொஞ்சம் காற்று எட்டி பார்த்தது
அழைப்பு மணி சப்தமெல்லாம் எதிர் இல்லத்தில்
தவறி வந்த தபாலும் கடைசியில் அண்டை வீட்டுக்கு
சிணுங்கும் தொலைபேசி எடுக்கும் முன் அடங்கி விடுகிறது
ஊஞ்சலை ஆட்டி விட்டு காற்றில் கரைந்தாலும்
கடிகாரம் மட்டும் என்னை சப்தத்தால் உயிர்ப்பிக்கிறது
ஜன்னல் விளிம்பு மைனாவுக்கு தான் இது தெரியும்
நான் சென்னை வாசி . ஆனால் வாசிப்பதில்லை . தொலை காட்சி தான் வாழ்க்கை . படித்தது பட்டம் . எல்லாம் மறந்து விட்டது .
வயது அம்பத்து நான்கு . சு ரவி வாழ்ந்த மயிலை எனக்கு மூச்சு . கிரேசி மோகன் வாழும் மந்தவெளி எனக்கு சிந்து வெளி .
சொந்தமாய் தொழில் . போட்டியான வாழ்க்கை . சிவாஜி பிடிக்கும் . மெல்லிசை மன்னர் என்றால் உயிர் . சுஜாதா எனக்கு பக்கத்து தெரு . பாலகுமாரன் கூப்பிடு தூரத்தில் . மணமானவன் . மனைவி தனியார் நிறுவனத்தில் பணி . விளக்கேற்றுவது நான் தான் ஒரு மகன் . கல்லூரியில் . கர்நாடக சங்கீதம் பயின்று கச்சேரியும் செய்து வருகிறான் .எழுத்து எனக்கு பிடிக்கும் .