சி. ஜெயபாரதன், கனடா

ஆற்றை நோக்கிப் போனேன்
அழுக்கு மூட்டை துவைக்க,
நேற்று ஓடிய  வைகை ஆறு
நீர் வெள்ளம் எங்கே போச்சு ?

கல்விப் பட்டம் வாங்க பல்கலைக்
கழகம் நோக்கிப் போனேன்.
எந்தப் பட்டம் வேணும், சொல்
எட்டு லட்சம் கட்டு முதலில் !

காற்று வாங்கப் போனேன்
கடற்கரைத் தென்றலிலே.
நாற்ற நச்சு வாயுக் களால்
நாசி அடைச்சுப் போச்சு!

உன் வாயிதழ் ஒன்று சொல்லும்
உன் விழிகள் வேறு சொல்லும்
அங்க அசைவு மாறாய்ச் சொல்லும்
ஆத்மா வேறு திசை செல்லும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *