சி. ஜெயபாரதன், கனடா

(பாவை விலக்கு)

ஆணும் பெண் இருபாலாரும்
பேணுவது சமத்துவம்
சட்ட விதிப்படி!
கட்டமைப்பில்,  உடல் உறுப்பில்,
உள்ளத்து இயக்கத்தில்
சிந்தனையில், செயலில்,
ஆண் வேறு! பெண் வேறு!
மாறுபடுவையே.

கல்விக் கூடத்தில் மாணவர்
ஒரு விரல் காட்டினால்
சிறுநீர் கழிப்பு.
இரு விரல் காட்டினால்
மலநீர்க் கழிப்பு.
மூவிரல் காட்டினால்
மாத விலக்கு! மன விலக்கு!
மாணவிக்கு!
பருவப் பெண்ணுக்கு அப்போது
தனிமை தேவை
தனிச் சலுகை தேவை.

ஓய்வு தேவை
பருவ மங்கைக்கு.
தாய்மைச் சுரப்பி தரும் துயர்!
தனிமை விலக்கு
பெண்ணுக்குப் புரியாத,
ஆணுக்கும் தெரியாத
உடல் தளர்ச்சி அது
பாவை விலக்கு அது!
சிவப்பு விலக்கு!

பருவ மங்கைக்கு
மாதா மாதம் தவறாது மீளும்
தவிர்க்க முடியாத
உடலியல்  இயற்கை நிகழ்ச்சி!
கடமை விலக்கு.
தாய்மைப் பொறுப்பு,
வேதனை! வேதனை!
மூன்று நாள் படும் வேதனை!
ஓய்வு தேவை.

மூன்று நாள் வெளியே
தனிமைக் குடிலில் அடைபட்ட
வனிதாவுக்கு மரணம்
பாம்பு கடித்து!
நடந்த மெய்க்கதை இது!
எச்சரிக்கை
இப்போது ஆணுக்கு!
உடல் உறவுத் தடுப்பை
ஏற்றுக்கொள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *