ஒரே நாடு! ஒரே சட்டம்! வரவேற்கிறோம்!

0

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சிவ சேனை, இலங்கை

மேதகு குடியரசுத் தலைவர் கோதபய இராசபட்சர், நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் ஆற்றிய உரையில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையை முன் வைத்துள்ளார்கள்.

சைவர்கள் ஆகிய நாங்கள், இந்தக் கொள்கையை முழுமனதோடு வரவேற்கிறோம். ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையால் இலங்கையின் வேரோடும் வேரின் மண்ணோடும் கூர்ந்து கிளர்ந்த பண்பாடும் வாழ்வு முறையும் செழிக்கும்.

பல்லாயிரம் ஆண்டுகளாக, தொடர்ச்சியாக இலங்கையில் சைவத் தமிழர் தமக்கெனப் படிப்படியாகக் காலங்கள் ஊடாகத் திருத்தியும் சேர்த்தும் நீக்கியும் உருவாக்கிச் சட்டமாக்கிய தேசவழமைச் சட்டத்தின் கூறுகள், புத்த சிங்கள மக்களிடையேயும் வேரூன்றிப் பரவியுள்ளன.

தேசவழமைச் சட்டத்தையே நடைமுறைப்படுத்துவேன் என விடாப்பிடியாகக் கூறிய சங்கிலி மன்னனை வீழ்த்தியவர்கள் வந்தேறிகளான கத்தோலிக்கப் போர்த்துக்கேயர்.

தேசவழமைச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனத் தங்களுக்கு தாமே சட்டங்களை எழுதி வாழ்வாகக் கொள்பவர்கள் வந்தேறிகளான முகமதியர்கள்.

தென்னிந்தியாவில் தமிழர், வடுகர், கன்னடர், கேரளர் என நான்கு இனத்தாரும் தேசவழமைச் சட்டத்தினைக் கைக் கொள்வதில்லை. ஆனால் தெற்கே வாழும் சிங்கள புத்த மக்கள் பலர் தேசவழமைச் சட்டத்தின் கூறுகளையே வாழ்வியல் ஆக்கியுள்ளார்கள்.

மேலைத்தேய மற்றும் முகமதியச் சட்டக் கூறுகள், இலங்கை மண்ணுக்கு முற்றிலும் பொருந்தாதவை. அவை இங்கு உருவாகியவை அல்ல. இலங்கையின் மண், காற்று, வானம், பகல், இரவு, காடுகள், மரங்கள் என மண்ணின் மக்களின் பூமி புத்திரரின் வாழ்வியலோடு கலந்தவை அல்ல.

உரோம ஒல்லாந்த ஆங்கிலேயர் முகமதிய வந்தேறிச் சட்டங்களின் நற்கூறுகளை உள்வாங்கித் தேசவழமைச் சட்டத்தின் அடித்தளத்தில் ஒரே நாடு ஒரே சட்டம் உருவாகுவதை மேதகு குடியரசுத் தலைவரின் கடந்த வார நாடாளுமன்ற உரையில் கூறியதை, சைவ மக்களின் சார்பில் சிவசேனை வரவேற்கிறது. இந்த முயற்சியை வாழ்த்துகிறது, பாராட்டுகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *