Tag: பி.தமிழ்முகில் நீலமேகம்

  • கனவா ?? நினைவா ??

    பி.தமிழ்முகில் நீலமேகம்

     

    வானுயர்ந்த மரத்தின் மலர்கள்
    பூமியின் மடியில் மலர் மஞ்சமாக
    சுற்றிலும் படர்ந்திருந்த
    புல்வெளி வெண்சாமரம் வீச
    ஓடையின் சலசலப்பும்
    வேணுகானமாய் இசைக்க
    தென்றலும் தன் பங்கிற்கு
    தண்மையை பரப்பிட
    ஆனந்தமாய் சயனித்திருந்த
    வேளையில் – சடாரென்று
    காதைக் கிழித்துக் கொண்டு
    ஒலித்தது – வாகனங்களின்
    ஹாரன் ஒலிகள் ……
    திடுக்கிட்டு வாரிச்
    சுருட்டிக் கொண்டு
    எழுந்தபோது தான்
    உணர்ந்தேன் – படுத்திருந்தது
    நெடுஞ்சாலையில் அமைந்திருந்த
    தங்கும் விடுதியின்
    ஐந்தாவது மாடியிலென்று !!!

    Share
  • நம்பிக்கை

     

    தமிழ்முகில் நீலமேகம்

     

    விழுந்து விடுவோம் என்று

    ஓர் நாளும் வித்துக்கள்

    வீண் பயம் கொள்வதில்லை !!!

    எழும் போது விருட்சமாய்

    வீரியத்துடனே எழுவோம் என்ற

    நம்பிக்கையுடனே  மண்ணில்

    தம்மை ஐக்கியமாக்கிக் கொள்கின்றன !!!

    படத்திற்கு நன்றி:

    http://www.hgtv.com/landscaping/tips-for-growing-plants-from-seed/index.html

    Share
  • பெண்ணை வாழ விடுங்கள் !!!!


    பி.தமிழ்முகில் நீலமேகம்

     

    அடுக்களையும் அரிகரண்டியும்

    மாதருக்கே பாத்யதை என்று

    பட்டயம் ஏதும்

    எழுதப் பட்டிருக்கிறதோ ??

     

    கல்வி கேள்வி தனில்

    தனித் திறமை இருந்தாலும்

    கறி சமைக்கத் தெரியாதவள்

    ஏளனப் படுவதும் ஏனோ ??

     

    புது வாழ்க்கைக்கும் சூழலுக்கும்

    தன்னைப் பக்குவப்படுத்திக்

    கொள்ள வேண்டியது பெண்ணெனில்

    பக்குவமென்பது ஆண்கட்கு தேவையில்லையா ??

     

    தட்சணை கொடுத்து மரு”மகளாய்”

    சென்றவள் – பசிக்குப் புசிப்பது கூட

    அனுமதி பெற்று தான் எனில்

    இது என்ன நியாயம் ??

     

    எக்காலத்திலும் பெண்ணின் திறமை

    குப்பையில் கிடக்கும் குன்றிமணி !!

    ஆணின் அதிகாரம் மட்டும் என்னவோ

    கம்பீரமான கோட்டை மணி !!!

     

    அடக்கி ஆள்தலும் அடிபணியச் செய்தலும்

    நீங்களடைந்த வெற்றி என்ற எண்ணம்

    மனதிலிருந்தால் – மன்னிக்கவும் !

    நீங்கள் தோல்விப் பாதையில்

    வெகுதூரம் பயணப்பட்டு விட்டீர்கள் ! – நாளை

    துவண்டு விழப்போவது நீங்கள்தான் !!!

     

    பொன்னும் பொருளும் உங்களுக்கு

    காணிக்கை தராதவளை ஏளனமாய்ப்

    பார்ப்போரே ! – அவளது

    சேவைக்கும் தியாகத்துக்கும் உங்களால்

    கைமாறு செய்திடல் இயலுமோ ??

    அது அவளது கடமையென

    சூளுரைப்போரே !

    நீங்கள் என்றுமே

    கடமை தவறிய

    கனவான்கள் தாம் !

    மறந்திடாதீர்கள் !!

    மறுக்க எத்தனிக்காதீர்கள் !

     

    பெண்ணுக்கெதிராய்

    பலாத்காரத்தை ஆயுதமாய்

    கையிலெடுப்போரே !

    நீங்களென்ன மனிதர்களா ?

    அன்றி மாக்களா ?

    நீங்கள் மனித உருவில்

    உலவும் மாக்களெனில்

    உங்களை வழிநெறிப் படுத்த

    தார்க் குச்சியும் சாட்டை வாரும்

    தயாராய் உள்ளது –

    மறவாதீர்கள் !!

     

    பெண்ணைப் போற்றி

    வணங்கச் சொல்லவில்லை !!!

    அவளை உயர்த்தித்

    தாங்கவும் கேட்கவில்லை !!!

    உங்கள் சகமனுஷியாய்

    உயிருள்ள ஓர்

    ஜீவனாய் பாருங்கள் !!!

     

    பெண்ணை நிம்மதியாய்

    வாழ விடுங்கள் !!!

    அவளது மகிழ்வில்

    உங்களது வாழ்வு என்றென்றும்

    வளமாகவும் !!! நலமாகவும் !!!

     

    படத்திற்கு நன்றி:

    http://www.free-photos.biz/photographs/society/photos_of_social_groups/

    Share
  • Carnivorous Plants – Sundew

    P.Tamizhmuhil Neelamegam

    Droseras, Commonly called as Sundews.They have gummy tentacles which attracts the insects by their bright colour and smell. Sundew is named because of the dew drops at the end of their tentacles which glitter when exposed to sunlight. They primarily grow on acidic bogs and moist sandy areas.

    How does it captures its prey?

    Once an insect lands on the leaf, the tentacles begin to wrap around the prey and the Sundew produces more digestive fluid. More tentacles wrap around the bug, and the digestive process begins. Within hours the Sundew has ingested its catch, leaving only the skeletal remains. Sundews have one of the more powerful digestive systems in the carnivorous plant world.

    This video shows a Drosera plant trapping a midge with its mobile tenticles and rolling its leaf.

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=cZ7Fws1HaL0

    The researchers have found that the secret of the quick tentacles involves the releasing of pent-up hydraulic pressure in a sudden burst, and it happens fast.The sundew takes about 75 milliseconds to capture its prey with snap tentacles. These snap tentacles are  one-shot weapons.Once they capture a prey, these tentacles  break off.The sundew grows fast, developing new leaves every three to four days, so losing a snap tentacle does not affect the plant.

    Medicinal uses of the sundew:

    These sundews provide an effective remedy for respiratory ailments and chest problems including coughs, asthma,woophing cough, arteriosclerosis and bronchitis.The plant contains an antibiotic substance that, in pure form, is effective against Streptococcus, Staphylococcus, and Pneumococcus. In European folk medicine, the fresh juice is used for warts and corns, and is taken internally as an aphrodisiac.

    References:

    http://medicinalherbinfo.org/herbs/Sundew.html

    http://www.livescience.com/23488-carnivorous-plants-sundew-tentacles-prey.html

    http://www.gublers.com/Pages/Carnivorous%20Tabs/sundew.html

    To be Continued…

    Share
  • தமிழ்முகிலின் பொன்வண்டு கதைக்கான இறுதிப் பகுதி

    பி. தமிழ்முகில் நீலமேகம்

    பொன் வண்டு சிறுகதையின் முதல் பகுதி

    மருத்துவமனையை அடைந்ததும் அவசர அவசரமாய் ஓடிச் சென்று அங்கிருந்த மருத்துவர் ஒருவரிடம் நடந்ததைக் கூறினார் நடத்துனர். உடனே, ஒயிலாவை அவசர சிகிச்சைப் பிரிவிற்கு கொண்டு வருமாறு அங்கிருந்த செவிலியரிடம் சொல்லிவிட்டு வேகமாக அவசரப் பிரிவு நோக்கிச் சென்றார்.இதற்குள் விஷயம் கேள்விப்பட ஒயிலரசியின்  தாய் தந்தையர் மற்றும் அவளது பாட்டி அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தனர்.

    யாரிடம் என்ன கேட்பது என்று புரியாமல் நின்று விழித்துக் கொண்டிருந்த அவர்களை, ஓர் செவிலி எதிர்கொண்டாள். “நீங்க தான் அந்த காலேஜ் பொண்ணப் பெத்தவங்களா? அதோ, அந்த ரூம்ல தான் டாக்டர் உங்க பொண்ணப்  பாத்துட்டு இருக்காரு.சத்தம் போடாம அங்க இருக்க பெஞ்ச்ல போய் உக்காந்திருங்க.டாக்டர் வந்துடுவாரு” என்று சொல்லிவிட்டு அவளும் அவசர அவசரமாய் சென்று விட்டாள். மிரண்ட பார்வையுடன் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு மனது ஒரு நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தனர் மூவரும்.
    “ஐயோ….எம்புள்ளைக்கு என்னாச்சோ …..அம்மா !!! பண்ணாரி மாரியாத்தா !!! எம்புள்ளைய காப்பாத்தி எங்கிட்ட கொடுத்துப்போடு தாயே !!! உனக்குப் பட்டுச்சேலை சாத்திப் பொங்கப் படையல் வைக்கிறேன்” என்று அழுது  அரற்றிக் கொண்டிருந்தாள் ஒயிலரசியின்  தாய்.சற்று நேரத்தில், ஒயிலரசியின் தங்கையும் பள்ளியிலிருந்து வந்து விட்டாள்.  அவளைக் கண்டதும் அந்தத் தாயின் அழுகை மேலும் அதிகமாயிற்று.”மஞ்சு கண்ணு !!! அக்காவுக்கு என்னாச்சுன்னே தெரியலடி.டாக்டரும் உள்ள போயி ரொம்ப நேரம் ஆச்சுது.எனக்கு என்னமோ பயமா இருக்குடி கண்ணு ” என்றாள்.”அக்காவுக்கு ஒன்னும் ஆகாதும்மா. கவலைப் படாதீங்க” என்று மஞ்சு அம்மாவுக்கு ஆறுதல் கூறினாலும், அவளது நெஞ்சுக்கும் வயிற்றுக்கும் இடையே பயப் பந்து உருண்டோடி அவளது இதயத் துடிப்பை அதிகமாக்கிக் கொண்டிருந்தது.

    சற்று நேரத்தில் வெளியே வந்த மருத்துவர் ” உங்க பொண்ணுக்கு Posterior epistaxis.அதாவது, மூக்கோட பின் பகுதியில இருந்து ரத்தம் வந்திருக்கு.இந்த மாதிரி ஏற்கனவே வந்திருக்கும் போல.ஏன் நீங்க முன்னாடியே வரல? ” என்று கேட்ட மருத்துவரின் முகத்தை மிரட்சியுடன் பார்த்தனர் தாய்தந்தையர்.இருவரும் ஒருவரது முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.அவர்கள் இருவருக்கும் அப்படி ஒன்று நடந்ததை அறிந்திருக்கவில்லை.ஆம்.ஒயிலா அதற்கு முன் சில முறை அங்ஙனம் இரத்தம் வந்ததை சாதாரணமாய் எடுத்துக் கொண்டு விட்டிருந்தாள். பெற்றவர்களிடம் சொன்னால் பயந்து விடுவார்கள்.”சாதாரணமாய் மூக்கிலிருந்து இரத்தம் வடிகிறது தானே.சில்லு மூக்கு உடைந்திருக்கும் என்றெண்ணி உங்க பொண்ணு  அதை பெரிதாக எடுத்துக்  கொள்ளாததால், அது இன்னைக்கு  அவரது உயிருக்கே ஆபத்தாய் ஆகியிருக்கு .ரொம்ப கவலைக்கிடமான நிலைல தான் இருக்காங்க.நாங்க எங்களால முடிஞ்ச அளவு உயிரை காப்பாத்த முயற்சிக்கிறோம்.அதற்கு மேல ஆண்டவனைத் தான் நம்பணும்.” என்று மருத்துவர் சொல்வதைக் கேட்டதும் ஒயிலாவின் தாய் மயக்கமுற்று கீழே சரிந்தாள்.

    ஒரு மணி நேரம் சென்றிருக்கும். வெளியே வந்த மருத்துவரின் முகத்தைப் பீதியுடன் பார்த்தனர் அனைவரும். ” Posterior epistaxis னால மரணம் ஏற்படுவது என்பது ரொம்ப அபூர்வம் தான்.ஆனாலும் நடக்க வாய்ப்பிருக்கு. அது தான் உங்க மகள் விஷயத்துலயும் ஏற்பட்டிருக்கு.என்னை மன்னிச்சிடுங்க.என்னால உங்க மகளைக் காப்பாத்த முடியல” என்ற மருத்துவரின் காலடியில் மீதும் மயக்கமுற்று சரிந்தாள் ஒயிலாவின் தாய்.அவ்விடமே சோகமும் அழுகையுமாய் நிறைந்திருந்தது.

    சில நிமிடங்கள் பிரமை பிடித்தவராய் அமர்ந்திருந்த ஒயிலாவின் தந்தை, மெல்ல எழுந்து மருத்துவரிடம் சென்றார். “அய்யா, எம் மகள் இந்த உலகத்துல மீண்டும் வாழ வழி செய்வீங்களா? ” என்றவரின் முகத்தை ஆச்சர்யத்துடன் பார்த்தார் மருத்துவர். ” எம் மகளோட உடல் உறுப்புகள் எதெல்லாம் தானம் பண்ண முடியுமோ, அதெல்லாம் தேவையானவங்களுக்கு எடுத்துப்  பொருத்துங்க அய்யா. அவங்க மூலியமா எம்மக இந்த உலகத்துல உசுரோட உலவிட்டு இருப்பா.” என்று சொல்லிவிட்டு மௌனமாய் நின்றார் அத்தந்தை. ” நீங்க கையெழுத்து போட சொல்ற எடத்துல கையெழுத்து போடறேன்.சீக்கிரம் உறுப்பு தானத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க” என்று கூறிவிட்டு சுவற்றில் சாய்ந்தார்.

    இறுதிச் சடங்குகள் அனைத்தும் முடித்து அழுகையுடன் தரையில் சாய்ந்தாள் ஒயிலாவின் தாய். ஒயிலாவின் அலமாரியை திறந்த மஞ்சு, அங்கு ஒயிலாவிற்குப் பிடித்த பொன்வண்டு அவள் போட்டு வைத்திருந்த தீப்பெட்டியை விட்டு வெளியே வர எத்தனித்துக் கொண்டிருந்ததைக் கண்டாள். மஞ்சு பெட்டியை எடுத்துத் திறந்தது தான் தாமதம், அது விர்ரென்று பறந்து வந்து வீட்டிலிருந்த அனைவரையும் சுற்றிச் சுற்றி வந்தது. அது ஒயிலா ” நான் சாகவில்லை. உங்களோடு தான் இருக்கிறேன்” என்று சொல்வது போலிருந்தது. ஆம். ஒயிலா மீண்டும் இவ்வுலகில் உயிரோடு தான் உலவுகிறாள். தன் உறுப்புகளால் பலரை வாழ வைத்ததன் மூலம்.

    Share
  • Carnivorous Plants

    P.Tamizhmuhil Neelamegam


    We all know that plants prepare their food by the process called Photosynthesis. But there are certain plants which depend on living organisms for their livelihood.Such plants are called Carnivorous Plants.

    Carnivorous Plants are the plants which capture, kill and digest the insects and other small organisms.These carnivorous plants live in a soil that is deficient in Nutrients.So,they supplement their diet with nutrients obtained by digesting the  insects. These plants have some specialized leaves or flowers or tentacles to capture the prey and digest them.

    A plant is said to be carnivore, if they possess the following characteristics:

    • The plant must have certain adaption to capture the prey. For example, a trap.
    • The plant should be able to digest the prey. It may produce certain digestive enzymes or it may rely on certain bacteria or other organisms for digestion.
    • The plant must be able to absorb the nutrients and it should be benefited by them.

    The Plants must possess certain adaptations to capture the prey.The adaptations include trap type and certain modifications in the trap that improve the efficiency of the plant in prey capture.The trapping mechanism always involves certain leaf modifications, in which the leaves acts as a trap.

    The different trap types include

    • Pitfall traps
    • Sticky traps
    • Lobster pot traps
    • Suction traps
    • Snap traps

    Certain examples for the modifications that improve the efficiency may include

    • The plant may produce an attractive smell
    • The trap will be more attractive and colorful
    • The surface of the trap may be waxy or slippery
    • The insects may get stuck to the hairs present
    • The trap fluids may be sticky
    • The plant may produce nectar which tempts the prey

    Sundew, Pitcher plant/Nepenthes,Butterworts are certain examples of carnivorous plants.

    To be continued….

    Share
  • சில மலர்கள் இரவில் மலர்வது ஏன்?

     

    பி. தமிழ்முகில் நீலமேகம்

    சில மலர்களில் மகரந்தச் சேர்க்கை பூச்சிகளால் ஏற்படுகின்றது.அத்தகைய மலர்கள் இரவில் மட்டுமே மலர்கின்றன. அம்மலர்களின் வாசனை அபாரமாக இருக்கும்.மேலும், இரவில் மலரும் மலர்கள் வெண்மை நிறத்திலேயே இருக்கின்றன.இது அவற்றின் மரபணு தனிப்பண்பு ஆகும்.பகலில் மலரும் மலர்கள் பல்வேறு வண்ணங்களில் இருக்கின்றன.அதனால், வண்டுகள்,தேனீக்கள் போன்றவை அவைகளால் எளிதில் கவரப்படுகின்றன.வெண்ணிற மலர்கட்கு பகலில் வண்டுகள்,வண்ணத்துப் பூச்சிகளைக் கவரும் தன்மை குறைவு. எனவே, அவை இரவில் மலரும் தழுவலைப் (adaption) பெற்றுள்ளன. வெண்மை நிற மலர்கள் இருளில் நன்கு தெரிவதால், அவை பூச்சிகள்,வௌவால்கள் ஆகியவற்றை எளிதில் கவர்கின்றன.மேலும், இவற்றின் அபார வாசனை பூச்சிகளை தன்வசம் இழுக்கின்றன.மகரந்தச் சேர்க்கை நிகழ்கிறது.

    இரவில் மலரும் மலர்கள் சில: மல்லிகை, செம்பகம்,சம்பங்கி, மனோரஞ்சிதம்,வெண்தாமரை,நிஷாகந்தி.

    Share
  • குப்பை

     

    தமிழ்முகில்

     

                                         அதிகாலையில் எழுந்து, கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, அவசர அவசரமாய் குளித்து விட்டு வந்த ராமாயி, அடுப்பு மேட்டில் இருந்த முந்தின நாள் சாதத்தில், சிறிது மோர் கலந்து அவசர அவசரமாய் குடித்து விட்டு, ஒரு  கலயத்தில், தன் மகனுக்கும் எடுத்து வைத்தாள். சுவற்றோரமாய், குளிருக்கு இதமாய், போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு சுருண்டு படுத்திருந்தான், அவளது பத்து வயது மகன், மணிமாறன். அவனிடம்,                   “ அப்பா, மணிமாறா, நான் வேலைக்கு கிளம்பறேன். உனக்கு கலையத்துல பழையது எடுத்து வெச்சிருக்கேன், சாப்டுட்டு, பள்ளிக்கோடத்துக்கு கிளம்பு.” என்றாள். அவள் குரலைக் கேட்டதும், கண் திறந்து பார்த்த மணிமாறன், “அம்மா, எனக்கு புது நோட்டும், பென்சிலும் வேணும்மா. நான் பேப்பர்ல எழுதி, நோட்ல ஒட்டி வெச்சிருந்தத டீச்சர் பாத்துட்டாங்க, திங்கட்கிழமை வரும் போது, புது நோட்டோட வரணும், இல்லைன்னா கிளாஸ்க்குள்ள விடமாட்டேன்னு சொல்லிட்டாங்கம்மா” என்றான். “சரிப்பா, வாங்கித் தர்ரேன்.” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள். இன்று முதலாளி அம்மாவிடம், சிறிது பணம் கேட்டு வாங்க வேண்டும் என்றெண்ணியவாறு வேகமாக நடந்தாள்.  

                         அந்த பங்களாவின் கேட்டினைத் திறந்து கொண்டு, வீட்டின் பின்கட்டு வழியாக சமையற்கட்டினை அடைந்தவளை, கோபத்துடன் எதிர்கொண்டாள் எஜமானி அம்மாள் சுகன்யா. “ வங்கம்மா, வாங்க. இப்பத்தான் வர்றீங்களா? காபி குடிங்க” என்று நக்கலாய், அவள் வேலைக்குத் தாமதமாய் வந்ததை இடித்துரைத்தாள். “இல்லீங்கம்மா……..” என்று ஆரம்பித்த ராமாயியை,              “ வேலைக்கு   வர்ற நேரத்தைப் பாரு. ஆறு மணிக்கு வரணும்னு சொல்லி இருக்கேண்ல, இப்ப மணி ஆறரை ஆகப் போகுது. இனிமேல் வேலையை ஆரம்பிச்சு, எப்ப முடிக்கறது??? சீக்கிரம் ஆரம்பி “ என்று சிடுசிடுத்து விட்டுச் சென்றாள்.

                                                 பரபரவென்று அங்கு குவிந்திருந்த வேலைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாய் செய்ய ஆரம்பித்தாள் ராமாயி. பாத்திரங்கள் துலக்கி, வீடு முழுவதும் பெருக்கி துடைத்து விட்டு, கொல்லைப் புறத்தில் மலையென குவித்து வைக்கப் பட்டிருந்த துணிகளை எல்லாம் துவைத்து காயப் போட்டுவிட்டு நிமிர்ந்தாள். நான்கு மணிநேர ஓய்வில்லா வேலைகட்குப் பின், அப்பாடா என்று அயர்ந்து ஓரமாய் அமர்ந்தவளை, சுகன்யாவின் அதட்டும் குரல் விரட்டியது. ”வேலை எல்லாம் முடிஞ்சதா?? மாடியில சின்னையா ரூம் ரொம்ப தூசியா இருக்கு, அதைப் பார்த்து பெருக்கி சுத்தம் பண்ணி வை. வேண்டாதது எல்லாம் ரூம் வாசல் கிட்ட இருக்கற ஷெல்ஃப்ல இருக்கு. ரூமை கூட்டி பெருக்கி சுத்தம் பண்ணிட்டு, தேவை இல்லாததுன்னு ஷெல்ஃப்ல இருக்கறதெல்லாம் கொண்டு போய் தெருவோர குப்பைத் தொட்டில போட்டுடு” என்று கட்டளையிட்டாள்.

                                    எஜமானி அம்மாள் ஏவலிட்ட பணிகளை செய்ய எத்தனித்தாள். அவளால் செய்ய இயலவில்லை. ஓய்வின்றி வேலை செய்தவளுக்கு, பசி வயிற்றைக் கிள்ளியது. ”அம்மா, பசியாயிருக்குங்க. பழையது இருந்தா சாப்டுட்டு செய்யட்டுங்களா ??” என்றாள் ராமாயி. “சரி…சரி.. அந்த அடுப்பு மேடைக்கு கீழ இருக்கற பழைய சாதத்த சாப்டுட்டு வேலைய பாரு” என்று கூறி விட்டுச் சென்றாள். சாதத்தினை எடுத்து வந்து, ஓர் ஓரமாய் அமர்ந்து உண்டு விட்டு, பாத்திரங்களை துலக்கி வைத்துவிட்டு, அடுத்த வேலையை பார்க்கக் கிளம்பினாள்.

                                  மாடிப்படி ஏறி, அந்த அறையைத் திறந்தவளுக்கு மலைப்பாக இருந்தது. ஆம்….. அறை முழுவதும், புத்தகங்களும், பேப்பரும், பேனாக்களுமாய் இறைந்து கிடந்தன. சாப்பிட்ட தட்டுகளும்,காபி தம்ளர்களும் டேபிளின் மீது அப்படியே கிடந்தன. ஒவ்வொன்றாக எடுத்து சீர்படுத்திவிட்டு, அறையினை சுத்தம் செய்தாள். பின், இறுதியாக, எஜமானி அம்மாள் சொன்ன வேண்டாதவற்றை எடுத்துப் பார்த்தாள். அது முழுவதும், சில பக்கங்களே எழுதிய நோட்டுக்களும், எழுதாத முழு நீள தாட்களும், பேனாக்களும், பென்சில்களுமாய் நிறைந்திருந்தது. “ இவ்வளவு இருக்கு. இது எல்லாமே  வேண்டாததா என்ன?“ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள், அவற்றை எடுத்து, குப்பைக் கூடையில்  போட எத்தனித்தாள். அப்போது தான் அவள் அதை கவனித்தாள், அதில் நிறைய நோட்டுகள் சில பக்கங்கள் மட்டுமே பயன் படுத்தப்பட்டு இருந்தன. மற்ற பக்கங்கள் எல்லாம் ஏதும் எழுதா வெள்ளைத் தாட்களாகவே இருந்தன. “ இவ்வளவு பக்கங்கள் இருக்கே, இதைப் போயி குப்பைல போடச் சொல்றாங்களே. நம்ம பிள்ளைக்கு வேணும்னா கேட்டு எடுத்துட்டு போகலாமா “ என்றெண்ணியவள், அவற்றை அள்ளிக் கொண்டு கீழே வந்தாள்.

                                “அம்மா, இதிலே எழுதாத நோட்டுகள், கொஞ்ச பக்கம் மட்டும் எழுதுன நோட்டுகள் எல்லாம் நிறைய இருக்கும்மா” என்றவளை ஓர் அலட்சியப் பார்வை பார்த்தாள் சுகன்யா. “ அதான், எல்லாம் வேண்டாம்னு தான எடுத்து வெச்சிருக்கு. குப்பைல எடுத்து போட வேண்டியது தானே, அதை விட்டுட்டு என்ன பேசிட்டு இருக்க?? ” என்றதட்டினாள் சுகன்யா. “சரிங்கம்மா” என்று கூறிவிட்டு, ஏதோ கேட்க எத்தனித்தவள், ஏதாவது கேட்டால், மீண்டும் திட்ட ஆரம்பித்து விடுவாளோ என்றெண்ணி மவுனம் ஆனாள்.

                                       குப்பைகள் என்று அவர்கள் ஒதுக்கியவற்றை எடுத்துக் கொண்டு வந்தவள், “ அவங்க தான் வேண்டாம்னு சொல்லிட்டாங்கள்ல, நாம இதுல இருக்கற நல்ல நோட்டுப் புத்தகங்கள நம்ம பிள்ளைக்கு எடுத்துகிட்டா என்ன….இவங்களும் நான் நோட்டு வாங்க பணம் கேட்டா, இன்னைக்கு குடுக்கப் போறதில்ல” என்றெண்ணியவள் கேட்டின் அருகில் அமர்ந்து, தன் மகனுக்கு பயன்படும் என்று தோணிய நோட்டுகளை எடுத்துக் கொண்டிருந்தாள். இதனை தற்செயலாக கவனித்துவிட்ட சுகன்யா, விறுவிறுவென்று ராமாயியிடம் வந்தாள். “என்ன பண்ற இங்க?” என்று கேட்டுவிட்டு, ராமாயியின் பதிலுக்குக்கூட காத்திராமல்,                          “ வீட்டிலிருந்து  என்ன திருடிட்டு போகப் பாக்கற? ” என்று காரசாரமாய் கத்தத் துவங்கி விட்டாள். அவ்வளவு நேரம் அவளிட்ட ஏவல்கட்கும், அதட்டல்கள் எதற்கும் பேசாது, வேலைகளை கவனித்து வந்த ராமாயி, “அம்மா, கொஞ்சம் பொறுமையா பேசுங்க. நீங்க சுத்தப் படுத்த சொன்னீங்க, நான் செஞ்சேன். அங்க, உபயோகமான பொருட்கள் நிறைய குப்பைல கிடந்தது. உங்க கிட்ட சொன்னதுக்கு, அதெல்லாம் குப்பைல போடச் சொல்லீட்டிங்க. நான், அதில என் பிள்ளைக்கு பயன்படலாமேனு தோணுன பொருட்கள குப்பைல இருந்து எடுத்தேன். எதையும் சந்தேகத்தோடயும், அதிகாரச் செருக்கோடயும் பாக்கற நீங்க, முதல்ல உங்க மனச சுத்தப் படுத்திக்கோங்க. உங்க கிட்ட இனி நான் வேலை பாக்கறதா இல்ல. நான் வரேன்” என்று கூறி விடுவிடுவென்று வெளியேறினாள் ராமாயி.

     

    Share