பி.தமிழ்முகில் நீலமேகம்

 

வானுயர்ந்த மரத்தின் மலர்கள்
பூமியின் மடியில் மலர் மஞ்சமாக
சுற்றிலும் படர்ந்திருந்த
புல்வெளி வெண்சாமரம் வீச
ஓடையின் சலசலப்பும்
வேணுகானமாய் இசைக்க
தென்றலும் தன் பங்கிற்கு
தண்மையை பரப்பிட
ஆனந்தமாய் சயனித்திருந்த
வேளையில் – சடாரென்று
காதைக் கிழித்துக் கொண்டு
ஒலித்தது – வாகனங்களின்
ஹாரன் ஒலிகள் ……
திடுக்கிட்டு வாரிச்
சுருட்டிக் கொண்டு
எழுந்தபோது தான்
உணர்ந்தேன் – படுத்திருந்தது
நெடுஞ்சாலையில் அமைந்திருந்த
தங்கும் விடுதியின்
ஐந்தாவது மாடியிலென்று !!!

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “கனவா ?? நினைவா ??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *