தொலைத்ததும் .. கிடைத்ததும் ..!
ஜெயஸ்ரீ ஷங்கர்
யம்மா……நான் பாசாயிட்டேன் …..நான் பி.எஸ்.ஸி பாசாயிட்டேன்…..என்று சந்தோஷமாக குதித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழையும் தன மகள் மலர்விழியைப் பார்த்ததும் இட்டிலிக்கு மாவு அரைத்துக் கொண்டிருந்த மங்களவல்லிக்கு, தான் என்றைக்கோ பார்த்த 16 வயதினிலே படத்தின் கதாநாயகி மயிலு தான் டக்கென்று நினைவுக்கு வந்தாள் .
“அதுக்கென்ன இப்போ?”
என்ற அதே குருவம்மாளின் பதில் வாய்வரை வந்தும் அடக்கிக் கொண்டு…
“ம்ம்…ம்ம்…அது சரி….உள்ளார போயி உப்பு ஜாடிய எடுத்தா….” என்று இயந்திர கதியாக மாவுரலை சுற்றிக் கொண்டிருந்த அம்மாவைப் பார்த்து,
“ஒனக்கு சந்தோஷப் படவே தெரியாதா?”
சிடு சிடுத்து விட்டு தனது சுடிதாரின் துப்பட்டாவை ஓங்கி உதறி சரி செய்து மேலுக்குப் போர்த்திக் கொண்டபடியே அடுக்களைக்குள் நுழைகிறாள் மலர்விழி.
அவளது வனப்பில் அவளுக்கே கர்வம் உண்டு.
இறைவன் அவளது குடும்பத்தில் ஏழ்மையைக் கொடுத்த அதே அளவுக்கு அவளிடம் அழகையும் அள்ளிக் கொடுத்திருந்தான்.
“எம்மாவ் …உப்பு ஜாடிய நீ எங்கிட்டு வெச்சிருக்கே…இங்கன ஒரே இருட்டாவுல்ல இருக்குது…..வெச்சவுங்களுக்குத் தானே இருக்குற எடம் தெரியும்…நீயே வந்து எடேன் ….அலிபாபா குகை மாதிரி ஒரு அடுக்களை….இதுல எதுக்குள்ளார என்ன இருக்குமுன்னு எனக்கு சோசியமாத் தெரியும்…”
ரெண்டு நாளு முன்னாடி ரேசன் கடைக்கிப் போயி சீமத்தண்ணி ஊத்தறாண்டு சொல்லி அம்பது ரூவாவ புளி வெச்சிருந்த ஜாடிக்குள்ளார போட்டு வெச்சிருக்கேன் எடுடீண்டு சொன்னே….அதுக்குள்ளார கைய விட்டா…..அப்பா ஓடியாந்து எடுக்காதே…எடுக்காதேன்னு ஒடியாந்தாரு ….என்னான்னு ஒரு வார்த்தை கேட்டியா அதுக்குள்ளார அம்பது ரூபா குவாட்டர் பாட்டிலா மாறிக் கெடந்துச்சு…..இதெல்லாம் நீ கண்டுகிடவே கண்டுகிடாத…..ஆமா…..நீயா தண்ணியடிக்கிற? என்று எடக்கு மடக்காக பதில் சொல்கிறாள் மலர்.
அடி கூறுகெட்ட சிறுக்கிடி நீ….ஒண்ணு கேட்டா ஒன்பது சொல்லுவ.. உன்கிட்ட எதுனாக் கேட்டுப்புட்டு எனக்கு உடனே கேட்டது கிடைச்சுருமா? கரண்டு இருந்தா நான் என்னாத்துக்கு இப்படி ஆட்டுக்கல்லாண்ட மல்லுக் கட்டி நிக்கப் போறேன். கிரைண்டர்ல போட்டு ஆட்டிக்கிட மாட்டேன். வந்துட்டா..குவாட்டரையும் ..இருட்டயும் பத்தி பேச…என்று எழுந்திருக்க முடியாமல் ரொம்பக் சங்கடத்தோட கையை தரையில் ஊன்றி மெல்ல எழுந்து….யம்மா… இன்னும் ரெண்டு இட்டிலி போடுன்னு கேட்டு வாங்கித் தின்னத் தெரியும்….இட்டிலிக்கி எதை எப்படி ஊறப் போடுறதுன்னு கூடத் தெரியாது..என்னிக்காச்சும் சமயக்கட்டுப் பக்கம் வந்து நின்னாத் தானே…அப்படி வீட்டுக் குள்ளார ஒரு ரூம்பு இருக்கறதயே நீ கண்டுக்கிட மாட்டே….முனகியபடியே உப்பை எடுக்க சமையல் கட்டுப்பக்கம் போனாள் மங்களவல்லி. கூலி வேலைக்கு போறவரு அலுப்பு சலுப்பு நீங்க ரூபாய எடுத்த எடத்துல வாங்கி வந்தத வெச்சிருக்கும். அவுகளுக்குத் தான் புத்தியில்ல…..கேக்குற உனக்குமா இல்ல…..பெத்தவளப் பாத்து வாய் கூசாம கேக்குறதப் பாரு. தண்ணியடிக்கிறியா…? தண்டால் எடுக்கிறியாண்டு…!
யம்மா…நான் மேல் படிக்கப் போறேன்….டீச்சர் டிரைனிங் ஒரே வருஷம் தான்….அதுக்கு நான் காலேஜுல சேரணும் …ஒரு முப்பதாயிரம் ரூபாய் வேணும் என் ஃபிரண்டு சரோஜா சேர்ந்துட்டா..சேத்தியார்தோப்புல இருக்குது காலேஜு….இங்க சீர்காழில இருந்துக்கிட்டு வயலு வரப்ப பார்த்துக்கிட்டு அதுவும் நமக்கு சொந்தமில்லாததை, யாருக்கோ கூலிக்கி மாரடிச்சுக்கிட்டு ஒரு வசதியும் இல்லாமா இருக்குறத விட ….பேசாம நாம கூட வேற எங்கியாச்சும் நல்ல டவுனு பக்கமாப் பார்த்துப் போயிறலாமா ?
நல்லாக் கேட்டியே ஒரு கேள்வி…பொறந்து, வளர்ந்து, வாக்கப்பட்டு, உழைக்கிற பூமிடி இது…இத்த உதறிப்புட்டு எங்கன எங்கள வரச் சொல்லுற ? நீ என்னமோ பெரிய தொரசாணி வீட்டம்மா கணக்கா பேசிபுட்டா ஆயிரிச்சா…..நான் அன்னிக்கி அடிச்சிகிட்டேன்…அடுத்த வூட்டுக்குப் போயி கரண்டி பிடிக்கிற கையி…இதுக்கு எதுக்கு பெரிய படிப்புன்னு….?உங்கப்பாரு கேட்கலை…நீ எங்க கேக்க வெச்சே…..காலேஜு படிப்பு படிக்கிறேன் ன்னு ஒத்தக் காலுல அடம் பிடிச்சி அறுவடைப் பணத்த அம்புட்டயும் அள்ளிக் கொண்டுட்டு போயி அந்த பாளாப் போன கடடுடத்து கிட்ட கொட்டிட்டு வந்து நின்ன..!
எம்மா…அது படிக்க பீசு ….அன்னிக்கு அம்புட்டு கொடுத்ததாலத் தான இன்னிக்கி நானு ஒரு கிராஜு வேட் ன்னு பெருமையா சொல்லிக்கிட முடியுது. இனிமேட்டு நான் பி.எட் படிச்சிட்டா அம்புட்டுத்தேன்…..ஒரு டீச்சர் ஆகிப்புடுவேன். அதுக்குப் பெறவு நான் ஏன் உன்கிட்ட மேல படிக்கிறேன்னு கெஞ்சிக்கிட்டு நிக்கப் போறேன்.
அன்னிக்கி என் தம்பிய கட்டியிருந்தீனா இன்னிக்கி கையில புள்ளயோட நீயும் துபாய் போயிருக்கலாமில்ல, கூறு கெட்டவளே..! நல்ல சான்சை நளுவ விட்டுப்போட்டு இப்பக் கெடந்து அலபாயுற. நீ என்னாத்தப் படிச்சா எவன் கேட்குறான்….கலியாணம் பண்ணி புள்ளையப் பெத்தமா போய் சேர்ந்தமான்னு நிக்காம…இவ படிச்சி ஊருக்குச் சொல்லிக் கொடுத்து பயபுள்ளைய சீமைக்கு அனுப்பப் போறியாக்கும்….? திருட்டுப் பயலுவ நடமாடற ஊருடி இது….எங்கிட்டுப் பார்த்தாலும் கொலையும் கொள்ளையுமா நடக்குது. கலியாணம் தாண்டி பாதுகாப்பு. வெளங்கிச்சா?
எம்மா …எம்புட்டு சொல்றது. உம்ம மூளைக்கு முண்டாசு தான் கட்டோணம்.சொந்தத்துல கல்யாணம் கட்டினா புள்ள வந்து பொறக்காது பிரச்சனை தான் வந்து பொறக்கும் …எம்புட்டு சொன்னாலும் கேட்டுக்கிட மாட்டே.. கூறப் பத்தி நீ என்கிட்டப் பேசுறியா?
மவ படிக்கிறாளே….நெறையப் படி…நான் தான் ஸ்கூல் போகலை நீனாச்சும் பெரிய டீச்சரா வரணும்டு சொல்ல முடியல உன்னால….துபாயில மாமா என்னா வேலை பாக்குது தெரியாதா? வருஷத்துக்கு ஒரு வாட்டி வந்து உன்கிட்ட ஒரு ஐநூறு ரூபாய் கொடுத்தா அவுரு பெரிய சீமைத் துரையா ? கொடுத்த் ரூபாய்க்கு இங்கனயே உக்காந்து ஆட்டுக்காலு சூப்பு வெய்யின்னு சொல்லி குடிச்சே கழிச்சுட்டு போயிருவாரு…நீயே தெனம் சொல்லிகிட்டே தானே இருப்பே. இப்ப நான் படிக்கோணும்..அதுக்கு வழி சொல்லு. உன்னோட வெளங்காத கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல என்னால ஆவாது.
அடிப் போடி…வழக்குக்குப் பொறந்தவளே….என்னால இனிமேட்டு உன்னிய உக்கார வெச்சி படிக்க வெக்க முடியாது..நீ எங்கிட்டும் போக வேண்டாம்…பேசாம என்னோட சேர்ந்து மாயவரம் மார்கெட்டுல பூ வாங்கி கட்டி வைத்தீஸ்வரன் கோயில்ல விக்கிறதுக்கு உதவி பண்ண முடியுமாண்டு போளப்பப்பாரு போ.
அதுக்கு நீ வேற ஆளப் பாரு…! சொடக்கென சொல்லிவிட்டு எழுந்து கொல்லப்புறம் சென்று விட்டாள் மலர்விழி.
அடியாத்தி……இவளுக்கு வாரக் கோவத்தப் பாரேன்…இதையே அவ மாமியா கையில சொல்லியிருந்தா என்னத்துக்காவுது….ஊசி நூலு வெச்சி தெய்ச்சிருவாக. என்னியுமில்ல கிழி கிழின்னு கிழிச்சிருவாக. வாயில கோர்ட்டை வச்சிக்கிட்டு நிக்கிறா. என் சரக்க இப்படி வெச்சிக்கிட்டு நான் எவ கிட்ட என் மவளுக்கு மாப்பிள்ளை தேட. தெரிஞ்சவன் ஒரு பய கட்ட வரமாட்டான். தெரியாதவன் சிக்க நான் தெருத் தெருவாவுல்ல நடந்தாகணும். ஆட்டுக் கல்லோடு சேர்ந்து இவளது எண்ணமும் அரைந்து கொண்டிருந்தது.
முதல்ல சென்னை பட்டணத்துக்குப் போகணும்ன்னு தான் சொல்லுவா அப்பால சினிமால எவனோ நடிக்க கூப்புட்டான்னு சொல்லி அப்படியே …ஓடிப்போயிருவே. இம்புட்டு வயசானவ நானே இன்னும் மெட்ராசுக்குப் போனதில்ல தெரியுமா?
உனக்கு கேக்குது…அதுக்குத்தான் படிக்கவே வைக்கக் கூடாது ..
அரசு சலுகையில் ரொம்ப சுலபமா படிச்சிப்புடலாமுன்னு இருந்தேன்….இந்தம்மா இப்படி முரண்டு பிடிக்கிறாங்க….அப்பா வரட்டும்…..கெஞ்சி அளுதுப்புட வேண்டியது தான். அப்பவாச்சும் கேப்பாக. அம்மா முரண்டு தெரிஞ்சது தான.
கரண்ட்டு இல்லாத சீர்காழி மெல்ல மெல்ல இருண்டு இருண்டு ஊரே இருக்குமிடம் தெரியாமல் இருளில் அமிழ்ந்து போனது. சென்னையில பூரா வெளக்கும் எரிஞ்சு சும்மா ஜிகு ஜிகுண்டு இருக்குமாம்ல.
ஷீலா நேத்துக் கூட போன்ல சொல்லிச்சு. எப்படியாச்சும் சென்னைக்கு போயி ஒரு நாலு காசு சம்பாதிச்சிட்டு வந்திறணம். ஒரு மாசத்துல முப்பதாயிரம் சம்பாதிச்சா……..போதும் போதும்…..எப்படியாச்சும் டீச்சர் ஆயிறலாம். கண்ணுக்குள் நினைவுகள் பள்ளிக்கூடம் எழுப்ப அப்படியே மயக்கத்தில் உறங்கிப் போனாள் மலர்விழி.
0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
இன்னாம்மா ஷீலா…நீ இன்னாமோ நாலஞ்சு பொண்ணுங்கள வேலைக்கி இட்டாரேன்னு சொன்னியே…இன்னாச்சு? அதுங்க எப்போ வருதுங்க ? இப்படி கம்முன்னு இருந்தா எப்பிடி? அதட்டினார் மானேஜர் ஆறுமுகம்.
ஊருல சொல்லிருக்கேன் சார்…எப்பிடியும் வந்துருவா..ஒருத்தி கண்டிப்பா வரேன்னு சொல்லிருக்கா. சம்பளம் சொன்னீங்கன்னா..என்று தயக்கத்துடன் இழுத்தாள் ஷீலா.
அது இன்னா வந்து என்னாட்டமா மேனசர் உத்தியோகமா பாக்கப் போவுது? மீனுல முள்ளு எடுக்குற வேல தான…எல்லாம் தருவோம்…இப்போ நீ எம்புட்டு துட்டு வாங்குற?
ஒரு நாளிக்கி ஓ.டி எல்லாம் சேர்த்து முந்நூறு ரூபா வாங்கறேன் சார். இன்னும் கொஞ்சம் கூடப் போட்டுக் கொடுங்களேன் சார்..என்று சந்தடி சாக்கில் தன்னுடைய பெட்டிஷனை தயங்கி தயங்கி சொல்கிறாள் .
ம்ம்ம்..அதும் வந்து ஓ.டி பாக்கச் சொல்லு முந்நூறு ரூபாய் கெடைக்கும்..சரியா….இன்னா படிச்ச புள்ளையா? நீ ஒரு பத்து உருப்படி பிடிச்சிக் கொடு. கமிஷன் எதாச்சும் போட்டு வாங்கிக்க.
சரிங்க சார்.ஆமா பி.எஸ்.ஸி முடிச்சிருக்கு…டீச்சர் ஆக ஆசை…பி.எட் படிக்க பீஸு கட்டத் தான் இங்கன வேலைக்கு வாரேன்னு சொல்லிச்சி.
அப்பால இன்னா ….கூட்டிட்டு வா…இன்னா படிச்சா இன்னா இங்கன எடுக்குறது முள்ளு தான..படிப்புக்கெல்லாம் கூட துட்டு கெடைக்காது சரியா?
இன்னும் ரெண்டு நாளுல வந்திருவா சார். வேலை கண்டிப்பா தரணும் …அவ சீர்காழி லேர்ந்து வரணும்.ரொம்பவும் கஷ்டப் படுற குடும்பம். கூலிக்கு விவசாயம் பண்ணுற குடும்பம்.
சரி தாயி….நீ அழைச்சுட்டு வா….பார்ப்பம்.
ஷீலா நிம்மதியோடு எப்படியாச்சும் தன்னுடைய கல்லூரித் தோழி மலர்விழிக்கும் இங்க ஒரு வேலை வாங்கிக் கொடுத்து விடலாம் என்ற நிம்மதியில் ஏறாலைக் கழுவிக் கொண்டிருந்தாள்.
மாலையில் கைபேசியில் மலர்விழியை அழைத்து விஷயம் சொல்லவும்….”டீ….மலரு…..வெரசாக் கெளம்பி பொழுதோட சென்னை வந்துருடி,,,,கிண்டில எறங்கிடு….நான் வந்து கூட்டிட்டு வந்துர்றேன்….நான் எதிர்பார்த்து காத்திட்டு இருப்பேன்..எங்க மேனேஜர் சார் கிட்ட சொல்லிட்டேன். வேலை போட்டுத் தாரேன்னு உத்தரவாதமா சொல்லிட்டாரு. நீ பத்திரமா கவலைப் படாமே வந்து சேரு. இரட்டிப்பு மகிழ்ச்சியோடு கைபேசியை மூடியவள் தனது ரூமுக்கு விரைகிறாள்.
ஹாஸ்டல் ரூம் வாசலில் பாண்டியன் அவளுக்காகவே காத்துக் கொண்டு நிற்பதைக் கண்டவள் மனசுக்குள் இன்னிக்கும் வந்து நின்னுடானே……வந்த என்னத்தை முகத்தில் காட்டாமல்….வாங்க வாங்க…..எப்ப வந்தீங்க…என்று கேட்டுக் கொண்டே எங்கிட்டாச்சும் வெளிய போயி சாப்பிட்டு வரலாம் இல்லியா..? இங்க ஹாஸ்டல் ரூமுக்கு நீங்க இன்னிக்கு வர வேண்டாம்…வார்டன் அம்மா திட்டுறாங்க…என்கிறாள்.
சரி…ஷீலா…இன்னைக்கு இப்ப போன் .போட்டேன்..எங்கேஜா இருந்துச்சு…..யாருகிட்ட இம்புட்டு நேரம் பேசிகிட்டு இருந்தே? வேலை முடிஞ்சதும் நான் ஒருத்தன் காத்துக்கிட்டு இருப்பேன்னு நெனப்பே வர்லியாக்கும் இந்த சுந்தரிக்கி…சொல்லிக் கொண்டே அவளது கன்னத்தைக் கிள்ளியபடியே….சரி இன்னிக்கு எம்புட்டு துட்டு கெடச்சிச்சி …ஒரு அமௌண்ட வெட்டு…நான் பாட்டுக்கு போயிட்டே இருக்கேன்….சரக்கடிக்கிற எடத்துக்கு நீ இன்னாத்துக்கு?
நீ ரூம்புக்கு போயி தின்னுட்டு தூங்கு…நாளிக்கு “சிங்கம்” படத்துக்கு அளச்சிட்டு போறேன்….என்னான்கறே..சரி தானே புள்ள?
அடச்சீ……உன்னையல்லாம் எனக்குக் காதலன்னு சொல்ல வெச்சிட்டியே…எங்க ஊருல என்னோட வீட்டுக்கு தெரிஞ்சா என்னிய கண்டந்துண்டமா வெட்டி கூரு போட்ருவாக. மருவாதியா இனிமேட்டு என்கிட்டே காசு கேக்குற வேலைய விட்று. நான் இன்னா உனக்குக் கொடுக்கவா ராவில்ல பகலிலன்னு கையி வலி புடுங்க மீனு முள்ளு எடுத்து பாக்கிங் பண்ணிட்டு வாரேன். கஷ்டப் பட்டு உழைக்கிற காசை உன் போதைக்கு செலவு செய்ய என்னால ஆவாது. அதுக்கு நீ வேற எவளையாவது பாரு. நம்ம கையில உன்னோட நாட்டாமை இனிமேட்டு நடக்காது. எனக்கு சிங்கமும் வேண்டாம் எந்த அசிங்கமும் வேண்டாம்…நீ ஆளவிடு சாமி…இரு கையையும் சேர்த்து கூப்பி உனக்கு கோடி புண்ணியம்…போயிரு…என்கிறாள் ஷீலா.
அடியே….நீ இப்படிச் சொன்னா…..போயிருவோமா? அன்னிக்கு நீ தான் என் புருஷன்…..கட்டினா உன்னத் தான் கட்டுவேன்னு பேசின….அதுக்குள்ளாற நான் கசந்து போயிட்டேனா? வேற எவனாச்சும் லைனு போட்டானா? பொறம்போக்கு….இந்தாரு ஷீலா….
மனுசனுக்கு ஒரே பேச்சு….நான் பாட்டுக்கு போயிட்டு இருந்தேன்…நீ தானடி சிரிச்சே…..நீ தான உங்க பேரு என்னன்னு கேட்டுகிட்டு வந்து நின்ன..மறந்து போச்சா? நீங்க இப்படி சும்மா இருந்தவன கிண்டி கெளப்பி விடுவீங்க….நாங்க உங்க போதைக்கு ஊறுகாயா இருக்கணுமாக்கும்? உங்களுக்குப் பிடிச்சா நாங்க காதலன்….பிடிகாட்டிப் போனா அப்பால களட்டி விட ம்ம்ம்…..பிளானு…சம்பாதிக்கிற ஏத்தம்….பல்லை நற நற வென்று கடித்தபடி மெல்லிய குரலில் .சொல்லிக்கொண்டே தனது பாண்ட் பைக்குள் கையை விட்டு “இந்தாரு…ஷீலா….இதுக்குத் தான் நானும் கையோட மஞ்சக் கயிறு வச்சிக்கிட்டு அலையிறேன்…ஹாஸ்டல் வாசல்னு கூட பார்க்க மாட்டேன்……வார்டனை கூப்பிட்டு முன்னால வெச்சி உன் களுத்துல இத்தக் கட்டி இறுக்கிருவேன்…..என்று ஆவேசத்தோடு நெருங்குகிறான் அவன்.
இந்தா…நிறுத்து….நான் என்ன உங்கள கலியாணம் கட்ட மாட்டேன்னா சொன்னேன். குடிக்க காசு தர மாட்டேன்னு தான் சொன்னேன்.
அதுக்கு இம்புட்டு சிலம்புறே…இந்தா….பிடி நூறு ரூவா….எங்கியோ டாஸ்மாக்குல போயி பிறாண்டு…….இப்ப நீ ஆள விடு….அவன் கையில் ரூபாயைத் திணித்து விட்டு…இப்படிப் போயி மாட்டிக்கிட்டேன்….பார்க்க ஜீன்சும் டீஷர்ட்டும் போட்டுக்கிட்டு தனுஷ் மாதிரியே இருந்தான்…..நான் போற வாற எடத்துக்கு கூடவே பின்னாடி வந்துக்கிட்டு இருந்தான்…..நல்லவராத் தெரிஞ்சான்…….நாலு மாசத்துல ரௌடித் தனத்த காமிக்கிறான்…புலம்பியபடியே தன அறைக்குள் நுழைந்து கதவைச் சார்த்திவிட்டு ….பாயில் படுத்தவள் தலையணையில் முகம் புதைத்து குலுங்கிக் கொண்டிருந்தாள். மனத்துக்குள் ” இவனிடமிருந்து தப்பிப்பது எப்படி ?” என்ற கேள்வி எதிரொலித்துக் கொண்டிருந்தது.
மயிலே….மயிலே…இறகு போடுன்னு சொன்னா இவளுகளுக்கு ஏறாது…..எல்லாம் நம்ம ரூட்டுல பேசினா அப்டியே இளகிறுவா…இவளைத் தெரியாதா? என்று சொல்லிக் கொண்டே நானா என்னிய காதலின்னு சொன்னேன்….நீயா வந்து மாட்டிக்கிட்டே.
சொல்லிக் கொண்டே தனது சைக்கிளில் ஏறி…..”இரவினில் ஆட்டம்…..ம்ம்ம்ம்ம்……. பகலினில் தூக்கம்….ம்ம்ம்ம்ம்…….இது தான் எங்கள் .உலகம்..எங்கள் உலகம்…..” என்று பாடிக் கொண்டே டாஸ்மாக் கடையை நோக்கி சைக்கிளை மிதிக்கிறான் பாண்டியன்.
0 0 0 0 0 0 0 0 0 0 0 0
அப்பாவின் காலைப் பிடித்ததில் அவர் மனம் இறங்கியதும் அவர் கன்னத்தில் முத்தத்தை பதித்து விட்டு அப்பா….ன்னா அப்பா தான்…..என்று குதித்து ஓடி விரைவில் ஒரு தகரப் பெட்டிக்குள் உடைகளை திணித்துக் கொண்டு புறப்பட்டு விட்டாள் மலர்விழி.
புலம்பிக் கொண்டிருந்த அம்மாவிடம்…..எம்மா…..போயிட்டு கை நிறைய துட்டோட வந்து நிப்பேன் பாரு…அப்பச் சொல்லுவே….என் ராசாத்தி….நீ டீச்சரா வாரா மாதிரி கனவு கண்டேன்ன்னு…..கொஞ்சம் சிரிச்சாப்புல தான் என்னிய அனுப்பி வையேன்…என்று மங்களவள்ளியின் கழுத்தைக் கட்டிக் கொண்டு மலர்விழி …சிணுங்குகிறாள்.
சொன்னாக் கேக்காத மவளை நான் எப்படி போயிட்டு வாடின்னு சொல்லுவேன். உனக்கு உங்கப்பாரு கொடுக்குற செல்லம். போயிட்டு வா…நீ நம்புற உலகம் உனக்கு பாடம் எடுக்கும். அப்பறமேட்டு தெரிஞ்சிட்டுப் போவுது.
சீர்காழி பஸ் நிலையம்.
“சிதம்பரம்…..கடலூர்…..பாண்டி……திண்டிவனம்…..சென்னை…..ஏறு…..ஏறு….ஏறு….”
மலர்விழியின் காதுகளில் இன்பத் தேன் வந்து பாய்ந்தது போலிருந்தது அந்தக் குரல்.
அப்பா நான் வரேன்….என்று கையசைத்து விட்டு…பஸ்ஸில் ஏறி ஜன்னல் பக்க இருக்கையில் அமர்ந்து கொள்கிறாள்.
“சென்னை பட்டணம்…
எல்லாம் கட்டணம்…
கையை நீட்டினா……காசு மழை கொட்டணும்…
குடிக்கிற தண்ணி …..காசு….
கொசுவை விரட்ட …..காசு…”
பஸ்ஸில் பாட்டு ஒலிக்க ஆரம்பித்து பஸ் மெல்ல ஹாரன் அடித்த படியே சீர்காழி பஸ் நிலயத்தைக் கடந்து வெளியேறிக் கொண்டிருந்தது.
சீட்டு….சீட்டு…..என்றபடி கண்டக்டர் இவள் அருகில் வந்து நிற்கவும்.
“ஒரு சென்னை” என்கிறாள் மலர்விழி ஏக உற்சாகத்தோடு.
பஸ்ஸில் பாட்டு ஒலிக்க ஆரம்பித்து பஸ் மெல்ல ஹாரன் அடித்த படியே சீர்காழி பஸ் நிலயத்தைக் கடந்து வெளியேறிக் கொண்டிருந்தது.
சீட்டு….சீட்டு…..என்றபடி கண்டக்டர் இவள் அருகில் வந்து நிற்கவும்.
“ஒரு சென்னை” என்கிறாள் மலர்விழி ஏக உற்சாகத்தோடு
எங்கிட்டு எறங்கோணம்….கோயம்பேடு தானா?
…..என்னது……கோயம்பத்தூர் இல்லீங்க….கிண்டி……கிண்டி போகுமில்ல..? குழப்பத்துடன் கேட்கிறாள் மலர்விழி….கண்களை மலர்த்தி கொண்டு .
அட….ஊரு பேரு தெரியாத புள்ளைங்க எல்லாம் வம்பை வெலக்கி வாங்கபஸ் ஏறி சென்னைக்கு டிக்கெட் கேக்குதுங்க….! முணு முணு த்துக் கொண்டே இருநூறு ரூபாய் எடு…. டிக்கெட்டை கிழித்து கையில் கொடுத்து விட்டு…. மலர்விழியை ஓரவிழியால் ஒரு பார்வை பார்த்து விட்டு நகர்கிறான்.
இதை எதையும் கண்டு கொள்ளாமல் மலர்விழி பஸ்ஸில் பாடிக்கொண்டிருந்த பாடலைக் கேட்டபடி அதில் ஐக்கியமாகி ரசித்தபடியே கண்களை மூடிக் கொண்டவள் சிறிது நேரத்தில் அப்படியே ஜன்னல் கம்பியோடு தன் முகத்தை சாய்த்துக் கொண்டு வந்த காற்றில் அப்படியே உறங்கிப் போகிறாள்.
0 0 0 0 0 0 0 0
இந்தா.பாப்பா……கிண்டி…கிண்டி…..வந்திரிச்சி…….எந்திரி….எந்திரி……நீள விசில் அடித்து பஸ் ஸ்டாண்டில் உறுமிக் கொண்டு நின்றது.
திடுக்கிட்டு விழித்த மலர்விழி அவசர அவசரமாக அவளது தூக்கிக் கொண்டு இங்கவும்……போலாம்…ரைட்….என்ற குரலுக்கு அடங்கி பஸ் கிளம்பியது.
சென்னையில் இரவெல்லாம் மழை கொட்டித் தீர்த்ததன் அடையாளமாக ரோடெல்லாம் ஈரம்….சகதி. மெல்ல மெல்ல காலை வைத்து நடைமேடையில் ஏறி நின்று கொண்டு சுற்றும் முற்றும் பார்வையை ஓடவிட்டாள், எங்காவது தோழி ஷீலாவின் முகம் தெரிகிறதா….?
என்று.
ரோட்டின் அடுத்த பகுதியிலிருந்து கையை ஆட்டியபடியே…..வந்த ஷீலா …”ஏய்….மலரு…..நான் இங்கிட்டு இருக்கேன்…. நீ அங்ஙனயே நில்லு நா வாரேன்…..என்றவள் நீண்ட நாட்கள் கழித்து மலரைக் கண்ட மகிழ்வில் வேகமாக ஓடி வருகிறாள்.
அடியே…..நடு ரோட்டுல இப்படி ஓடி வராதடி…எவனாவது இடிச்சி தள்ளிட்டு போயிருவான்…பதற்றத்தில் மலர் அங்கிருந்தபடியே கத்துகிறாள்.
அதற்குள் அருகில் வந்துவிட்ட ஷீலா….மலர்விழியை அப்படியே கட்டிக் ..கொண்டு.நல்ல வேள புள்ள…சொன்னபடிக்கி ..நீனாச்சும் வந்த…..நம்ம லதா, வாணி, கீதா, மாரியம்மா, அந்த கோண மூக்கி கோவிந்தம்மா அது கூட வரல தெரியுமா? என்று ஆதங்கத்தோடு படபடத்தாள்.
சரி விடுடீ …என் வீட்டுலயும் உனக்குத் தான் தெரியுமே….என் அம்மா விடவே இல்லை….எப்படியோ எங்கப்பா காலைப் பிடிச்சி காக்கை பிடிச்சேன் ஒருவழியா ஒத்துக்க வெச்சேன், அவுக மனசு மாறக்குள்ள பெட்டியை கட்டிப்புட்டேன்…என்று தனது சாமர்த்தியத்தை சந்தோஷத்துடன் ஷீலாவிடம் சொல்லிக் கொண்டே நடந்தாள் மலர்.
திடீரென்று திரும்பிப் பார்த்த ஷீலா…உடனே சரிடி..நாம சீக்கிரமா வேலைக்குப் போவணும் …கொஞ்சம் வெரசா நடக்கிறியா…இந்தா அந்தப் பொட்டிய என் கையில கொடு என்று சொல்லி வலுக்கட்டாயமாக மலரின் கைகளிலிருந்து பெட்டியை இழுத்தவளின் அவசரத்தைக் கண்ட மலர்….இந்தாடி…..இவனுங்களுக்கெல்லாம் நீ ஏன் இம்புட்டு பயப்படுறே…..நானும் கவனிச்சேன்…கிறுக்கன்….அப்பமேட்டு நம்ப ரெண்டு பேத்தையுமே நோட் பண்ணிக்கிட்டு நிக்கான். கொஞ்சம் பொறு நான் வேணா போயி ரெண்டு வார்த்தை கேட்டுபுட்டு வரவா? என்று கேட்ட மலரின் கைகளை இருக்கப் பற்றிய ஷீலா, வேற வம்பே வேண்டாம்…..நீ ஒண்ணு …அது என் ஆளு தான்…பேரு பாண்டியன். நான் எங்கிட்டு போனாலும் அதுக்கு மூக்குல வேர்க்கும் போல…வந்து அட்டெண்டன்ஸ் போட்டுடும். நீ வார விசயத்தை சொல்ல வேணாமுன்னு ரகசியமா வெச்சிருந்தேன்…எப்படியோ மோப்பம் புடிச்சி வந்து நின்னுடிச்சி…நீ கண்டுகிடாதே. என் பக்கத்திலயே நட….பல்லைக் கடித்தபடியே மெல்லிய குரலில் சொல்லி முடித்த ஷீலாவை அதிசயமாகப் பார்க்கிறாள் மலர்.
இன்னாடி சொல்லுறே ஷீலா….உன் ஆளா…..நீ லவ்வு பண்றியா? பட்டணத்துக்கு வந்ததும் உடனே இதுவும் வந்துருமா? ஆனா எனக்கு இதுக்கெல்லாம் தகிரியம் இல்ல…அதுக்கு உண்டான மூஞ்சியும் இல்லை….என்று அலுத்துக் கொள்ள…
யாரு சொன்னா? என் மூஞ்சிக்கே ஒருத்தன் கிடைக்கும் போது ….உன்ன மாதிரி அழகிக்கு….அடியே மலரு…நீ ரொம்ப அழகு தெரியுமா?
ஷீலா மலரைப் பார்த்து சொல்லிவிட்டு ஒரு நிமிடம் அப்படியே நிற்கிறாள். பிறகு ஆமாம் நீ கொள்ளை அழகு…அதான் உன் அம்மா உன்னைப் பொத்தி பொத்தி வெயக்குது ….என்று முடிக்கிறாள்.
மலர்விழிக்கு எங்கிருந்தோ ஒரு கர்வம் வந்து அவள் தலையில் ஒரு மலர்கிரீடம் வைத்து விட்டுப் போனது. மனத்தில் எழுந்த சந்தோஷ உணர்வுகளுக்கு வார்த்தைகளைத் தேடித் தவித்தவள்…….ஒன்றும் புரிபடாத நிலையில், “அழகெல்லாம் முருகனே…அருளெல்லாம் முருகனே….தெளிவெல்லாம் முருகனே…தெய்வமும் முருகனே…தெய்வமும் முருகனே…”என்று பாடியபடியே இன்னும் எத்தனை தூரம் போவணும் நீ குடி இருக்குற வீட்டுக்கு? என்று கேள்வியும் கேட்கிறாள்.
ம்ம்ம்…வீடில்லை…ஹாஸ்டல் ரூம்பு…ஒரு மாசம் தங்கறதுக்கு மூவாயிரம் ரூபாய். கட்டிலு மெத்தை எதுவும் கிடையாது..வெறும் பாயும் தலையணையும் தான். அட்ஜஸ்ட் பண்ணிக்கோ..இந்த சென்னையில இங்கன தான் இம்புட்டு சீப்பா ரூம்பு கிடைச்சுச்சு. வேறேங்கேனா போனா நாம சம்பாதிக்கிற அம்புட்டையும் அவுங்க கிட்ட தந்துட்டு மானத்தப் பாத்துட்டு சிரிச்சிகிட்டு நிக்கோணம். இதோ இந்த கட்டடம் தான் ஹாஸ்டல்….பாத்தியா பேர …”சாந்திக் குடில்”. உனக்காச்சும் இங்க எங்கிட்டாவது சாந்தி கெடைக்குதா பார்க்குறேன். என்று ஷீலா சொல்லிக் கொண்டே உள்ளே நுழைகிறாள்….மெல்ல வா அந்த கதவுல ஒரு ஆணி நீட்டிக்கிட்டு கெடக்கு…உன் கையை இல்லாத போனா உன் துப்பட்டாவை கிழிச்சி தொலைக்கும். பார்த்து வா..என்று கொண்டே வராண்டாவில் காலடி எடுத்து வைக்கவும்.
டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்……….கிழிஞ்சிடுச்சிடீ…!மலர் அழாத குறையாக அலறவும்.
நான் தான் பார்த்து வான்னு சொல்லிட்டே இருக்கேன்ல….போனாப் போவட்டும்..வேற வாங்கிகிறலாம். டி .நகர் போவோம்ல அங்கன வாங்கிறலாம் .
போடி இவளே..நான் இங்க வந்து துப்பட்டாவைக் கிழிச்சுப்புட்டு வேற வாங்கவா வந்தேன்….போனாப் போவட்டுமாம்…ஆளப் பாரு…உன்னுது கிழிஞ்சிருந்தா வலிச்சிருக்கும்…என்று சொல்லிக் கொண்டே ஷீலாவைத் தொடர்ந்து நடக்கிறாள் மலர்விழி.
ஏண்டி….உனக்கு இந்தப் பொறாமை…..எல்லாம் எனக்கும் நாலஞ்சி வாட்டி கிழிஞ்சி போச்சு. அதான் உனக்குச் சொன்னேன். ம்ம்…இதான் ரூம்பு…என்று தன் கர்சீப்பில் முடிச்சுப் போட்டு வைத்திருந்த பித்தளைச் சாவியை எடுத்து திறக்கிறாள்.
மூன்று நான்கு தடவை மாற்றி மாற்றி போட்டபின் பூட்டு க்ளிக் திறந்து அதே வேகத்தில் அந்த மரக்கதவும் படால் என்று திறந்து கொண்டு இவர்களுக்கு வழி விட்டது.
உள்ளே நுழையும் போதே ஒரு முடை நாற்றம்…..வந்து மலர் முகத்தை சுழித்துக் கொண்டாள் .
ஏண்டி……இவளே…..! இதுவா…..இங்கனையா….நானும் தங்கணும்….! நம்ப வீட்டு மாட்டு கொட்டாய் கூட இத்த விட சொகுசா இருக்குமே….கருமம்…கருமம் ..என்னமோ நாறுது…என்று சொன்னதும் ஷீலாவின் முகம் சுண்டிப் போனது.
நான் வரும்போதே நெனச்சேன்…..இம்புட்டு அசிங்கமா குப்பையும் கூளமுமா சின்னச் சந்துல கூட்டிட்டு போறாளே…ரூம்பு எப்பிடி இருக்குமோன்னு ..நான் நெனச்சது ரைட்டாத் தான் இருக்கு.
இதுக்கும் மேலே இந்த சென்னையில உனக்கும் எனக்கும் தங்குறதுக்கு எடம் கெடைக்காது…நாம என்ன அம்பானி பரம்பரையா….?
இதுக்கே நான் எப்பிடி அவஸ்தை படுறேன் தெரியுமா? கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ…காலீல வேலைக்குப் போனா ராத்திரிக்கித் தான் இங்க வருவோம்…சில நாள் ஓ .டி பார்த்தால் வரவே மாட்டோம்….புரிஞ்சிச்சா.
சரி..அப்ப நான் எங்கன எப்புடி .குளிக்கிறது?
ஐயோ….சர்தான் போடி நீ சீமைத்துரை வீட்டு துரைசாணி..இனிமேட்டு எத்தப் பத்தியாச்சும் கேட்டே…கொண்டேபுடுவேன்…….! என்று கண்களை உருட்டிக் காண்பிக்கும் ஷீலாவைப் பார்த்து மலர் சிரிக்கிறாள்.
அடுத்த ஒரு மணி நேரத்தில்…..இருவரும் எப்படியோ கஷ்டப்பட்டு தங்களை அலங்காரப் பதுமைகளாக அலங்கரித்துக் கொண்டு “நாங்க வேலைக்கு கிளம்பியாச்சு ” என்று பொதுவாக வார்டன் அம்மாவிடம் சொல்லிவிட்டு….சரட் ….சரட் ….என்று செருப்பு சத்தம் கேட்க ஒருவர் கையை ஒருவர் பற்றியபடியே கம்பெனியை நோக்கி நடக்கிறார்கள்.வெற்று ஹாண்ட்பாக் ஒன்று அவர்களின் தோளில் காற்றில் ஊஞ்சலாடிக் கொண்டே வந்தது.
தான் ஒரு பெரிய கம்பெனியில் வேலை செய்யப் போவதாக கற்பனை கண்டபடியே நடக்கிறாள் மலர்.
கூவம், குப்பை,கூளம், சாராயக் கடை, சகதி , முட்டுச் சந்து…..மூத்திர சந்து எல்லாத்தையும் கடந்து நாற்றம் வரவேற்க ஒரு பழைய கட்டடத்துக்குள் அழைத்து செல்லும் பார்த்து ” இது மட்டும் என்ன ஓவியமா…? இதுக்கு அந்த ரூம்பு தேவலை…” என்று வாய் விட்டு சொன்னவள், ” அம்மா….நான் தப்பு பண்ணிட்டேன்……நீ எம்புட்டு சொன்னே….சென்னையில ஒரு நல்ல எடம் கூட இல்லம்மா..இந்த ஊருல எப்படி ரஜினி, கமல்,விஜய்,அஜித்,சூர்யா…..ஹாங்…..நயன்தாரா…..இவுங்க எல்லாம் இருக்காங்க…அத்துக்கிட்டு ஓட வேணாமா? என்று மனத்துக்குள் கேட்டுக் கொள்கிறாள்.
கனத்த கனைப்பு சத்தம் கேட்ட இடத்தைத் திரும்பிப் பார்க்கும் போது அங்கு ஷீலா அவரிடம் “இவ தான் சார்….மலர்விழி” என்று கையைக் காட்டி கையோடு …நம்ப மானேஜர் சார் இவர் தான்…அவருக்கு குட் மார்னிங் சொல்லு..என்கிறாள்.
மலருக்கு……தான் திடீரென்று தனது வீட்டின் முன்பு வாரா வாரம் வந்து காசுக்காக வித்தை காட்டும் குரங்காட்டியின் குரங்கு தான் நினைவுக்கு வந்தது. தான் இப்படி வந்த அன்றே குரங்காகிப் போனேனா…என்று சிறிது கவலையோடு குனிந்து ஒரு முறை தன்னையே பார்த்துக் கொண்டாள்.
பிறகு தயங்கியபடியே “குட் மார்னிங்” என்று சொல்லுகையில் முதல் முதலாக ஒரு ஆங்கில வார்த்தையை வெளி மனிதரிடம் பேசும் சந்தர்ப்பம் கிட்டியதற்காக மகிழ்ந்தாள் மலர்.
அவளை வைத்த கண் வாங்காமல் விழுங்கும் பார்வையில் கணக்குப் பண்ணிப் பார்த்த மனேஜர் “உன் பேரு என்னம்மா?” என்று குழையும் குரலில் கேட்டதும்.
மலர்விழி…!
ஆஹா…..அருமையான பேரு தான் போ….மலரு….என்று ஒருமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டே…எம்மா …ஷீலா…இவளையும் உன் கூடவே வேலைக்கு வெச்சுக்கோ….வேலை சொல்லிக் கொடு..முதல்ல ரிஜிஸ்டர்….என்று கறாராக சொல்லிவிட்டு….மலர்விழியின் கன்னத்தைத் தடவி விட்டுப் போகிறான்.
விருட்டென்று முகத்தை பின்னுக்கு இழுத்தவள்…..என்னாடி இவன்……என்று வாய் வரை வந்த வார்த்தையை அப்படியே முழுங்கி விட்டு….எங்க…என்ன வேலை…சொல்லுடி…என்று ரெஜிஸ்டரில் கையெழுத்தைப் போடுகிறாள்.
மனசு……வேலை கிடைச்சிருச்சி என்ற சந்தோஷத்தில் நிம்மதி அடைந்தாலும்…….”இந்த முதலையோட வாய்,கண்,கை…..எல்லாத்தையும் கட்டிப் போடணும்….” என்று முடிச்சுப் போட்டது.
மீண்டும் அந்த மானேஜர் இவளை நோக்கி அசட்டுச் சிரிப்பு சிரித்தபடியே வந்து கொண்டிருந்தான்.
நீண்ட நாட்கள் பழகியவன் போல அருகில் வந்தவன் அவளைத் தொட்டபடியே, ….மலரு. உனக்கு இங்க வேலை பார்க்க பிடிக்கலைண்டா சொல்லு…உன்னிய அசோக் பில்லர் கிட்ட பாக்கிங் ஆபீசு ஒண்ணு இருக்குது நான் அங்கனகுள்ள தான் இருப்பேன்..ஷீலாவையும் உன்னயும் அங்கனையே மாத்தி உடறேன்…சரியா? என்று சொல்லிவிட்டு கண்ணடித்துச் சிரிக்கிறான்.
உடலெங்கும் திராவகத் துளி பட்டது போலத் தவித்தவளாக மலர்விஷி, ஷீலா வந்தா நானும் அங்க வந்துருவேன்..என்று நெளிந்து தன்னை அவனிடமிருந்து விலக்கி விலகி நின்று கொண்டாள்.
இவனும் இவன் மூஞ்சியும்…இளிப்பைப் பாரு…..உனக்கெல்லாம் ஆண்டவன் கண்ணைக் கொடுத்திருக்கான் பாரு….அந்த ஆண்டவனுக்கு அறிவே இல்லை..என்று மனத்துக்குள் நினைத்தபடியே கூடையிலிருந்த இறால் மீனை எடுத்துத் தேய்த்து கழுவி முள்ளை எடுக்கிறாள்.
பாவம் ஷீலா…இதே வேலையை எத்தனை மாசம் பண்ணிட்டு இருக்கா.அவ கலியாணத்துக்கு நாலு காசு சேத்துக்கிட வந்தவ,
இங்கன வந்து மாப்பிள்ளையும் புடிச்சிட்டா …கெட்டிக்காரி. பாண்டியன் அப்பிடியே சினிமாக் காரன் தனுசு மாதிரியே இருக்காரு.
அவ போயி என்னிய அழகுன்னு சொல்லிக்கிட்டு கெடக்கிறா . வெள்ளந்தியான மனசு அவளுக்கு.கைகள் காரியத்தில் கண்ணாக இருந்தாலும் எண்ணங்கள் மனசோடு பேசிக் கொண்டு தான் இருந்தது.
தலையைக் குனிந்தபடி வேலையில் கவனமாக இருந்தாலும் அவளது கண்கள் அந்த அறையை அவ்வபோது துருவித் துருவிப் பார்த்து கொண்டே இருந்தது. அப்போது ஷீலா தனது கைபேசியில் பேசிக் கொண்டிருந்தது கேட்டது.
இவள் சைகையில் யாருன்னு கேட்டதற்கு ஷீலா லேசான வெட்கத்துடன் சைகையால் மீசை போல செய்து காட்டி…அப்பறமா சொல்றேன்…என்று கைகளால் நீ வேலையைப் பாரு..மானஜர் சார் வந்தால் திட்டுவாரு என்று சொன்னாள் .
பயம் என்றால் என்ன என்றே அறிந்திராத மலர்விழி “மானேஜர் சார் திட்டுவாரு போல….அந்தாளு இளிச்சுக்கிட்டே தானே நிக்கும்….ஒருவேளை ஷீலாவைத் திட்டும் போல .என்று ஒரு இனம் புரியாத உணர்வில் மேற்கொண்டு வேலையில் மும்முரமானாள்.
அடேய் கசமாலம்….எங்கடாத் தொலைஞ்ச…என்று அங்கு நின்ற வேலைக்காரப் பையனை அழைத்த மானேஜர் “போடா போயி அந்த “அமீர்பெட் ஆஞ்சநேயுலு “வை நான் கூப்பிட்டேன்னு சொல்லி கையோட கூட்டீட்டு வா..
இதைக் கேட்டதும் அந்த வேலைக்காரப் பையனின் கண்கள் தானாக இவளின் மேல் வந்து விழுந்தது.
குறுகுறு வென்ற பார்வையில் தாக்கப் பட்டவளாக நிமிர்ந்து பார்த்ததும், அந்தச் சிறுவன் இவளையே வெறித்துப் பார்ப்பது தெரிந்ததும் இவளது மூளைக்குள் அபாய மணி அடித்தது.
எம்புட்டு தமிழ் சினிமா பார்த்திருப்பேன்…..அப்ப சினிமால சென்னையை பத்தி சொல்லுறதெல்லாம் நெசம் தான் போலிருக்குது….என்ன தான் நடக்குதுண்டு வேடிக்கை பார்க்கலாம். அப்படி என்ன தான் பண்ணுவானுங்க…கடத்திட்டு போயி வாயில துணி அடச்சு நம்ம வீட்டுக்கு போனப் போட்டு பத்தாயிரம் பணம் கொடுத்தால் தான் மலரை உசுரோட விடுவோம்….
இல்லன்னாக்காட்டி…..”சீ…சீ…என்ன மடத்தனம்….நான் என்ன வெறும் பத்தாயிரம் மட்டும் தானா…..? கற்பனையில கேக்குறத கொஞ்சம் கேக்கலாமே…..ஒரு பத்துக் கோடி……” ஆஹா …..நான் பத்துக் கோடியா ….மலரு…நீ சென்னைக்கு வந்தாலும் வந்தே….
உன்னோட ரேட்டு கூடிட்டே போகுதே….நினைத்தவள் அவளையும் மீறி களுக் கென்று சிரித்துக் கொண்டாள் .
என்னாச்சு மலரு…நீயே சிரிச்சுக்குற…..சந்தோசமா.?..என்று இந்த சர்தர்ப்பத்துக்காகவே காத்திருந்தவன் போல எழுந்து வரும் மேனஜரை வெறுப்புடன் பார்த்தவள் “உனக்கேண்டா…..” ஆ…ஊன்னா ……ஆஜராயிடுற…இங்க நானும் ஷீலாவும் தான் பொண்ணுங்களா ….கிராமத்துலேர்ந்து வந்தா அடங்கிறுவாளுங்கன்னு நெனப்பு….இதே அந்த ஆம்பூர் அகிலாக்காட்ட வேலையைக் காட்ட வேண்டியது தானே…..நாங்கன்னா அம்புட்டு …எளப்பம் ….என்று மனத்துக்குள் சொல்லிக் கொண்டாள் .
அதற்குள் அருகில் வந்து உரசிக் கொண்டு நின்ற மேனேஜரை நடு மண்டையில் நச்சென்று ஓங்கி குத்தவேண்டும் போலிருந்தது மலர்விழிக்கு. அவன் அருகில் வந்ததை கண்டுகொள்ளாதவளாக தன் பாட்டுக்கு சற்று விலகிக் கொண்டு வேலை செய்து கொண்டிருந்தாள். ..கூடவே..”ச்சே ….” என்று அலுத்துக் கொண்டாள் .
என்னா…அலுத்துக்குறே….என்றவன் மீண்டும் நகர்ந்து வருவதற்குள், வாசலில் நிழலாடியது.
வந்தது அமீர்பெட் ஆஞ்சநேயுலு தான்.இரட்டை நாடி சரீரம் ,கன்னங்கறுத்த கலரில் கனத்த செருப்பு, பஞ்சகச்சம் வெச்சு கட்டிய வெள்ளை வெளேர் வேட்டி , வெள்ளை நிறத்தில் கதர் ஜிப்பா ,வாய் நிறைய வெத்தலை…பன்னீர் புகையிலை…ஜர்தா பீடா வாசனை பத்தடிக்கு அடித்து விரட்ட,, முள்ளு முள்ளாக மீசையோ தாடியோ இல்லாத பளீர் முகத்தில் வெத்திலைக் கறையோட பற்கள் தெரியச் சிரிப்பும் கண்களை அடைத்தபடி தங்க ஃ ப்ரேம் போட்ட பவர் கண்ணாடி.அதற்கும் மேலே நெற்றி நிறைத்த நாமம், கர்ண கொடூரமான சாரீரம். அதற்கு ஜதி போடுவது போல சரட் …சரட் …என்ற செருப்புச் சத்தம் வேறு..
“ஏன்டி …ஆறுமுகம்காரு பிலுசாரா ..எவரு …? ஈ அம்மாயி கொட்லக்கு கொத்தக வச்சிந்தா….. பாகுந்தே…பலட்டூரா…..”
(என்ன. ஆறுமுகம் ..கூப்பிட்டீங்களா..? யாரு ? இந்தப் பொண்ணு கடைக்கு புதுசா வந்திருக்கா..? நல்லாருக்காளே …..கிராமமா…?)
டேய்…பாபு…இட்ட ரா….! ஆ அம்மாயி பேரேன்டி …? என்று ரகசியமாக கேட்டான். (இங்க வா….அந்த பெண்ணின் பேரென்ன..?)
அதற்குள் அந்த மானேஜர் குறுக்கே வந்து நின்று…மலர்விழி…! நல்ல தமிழ் பேரு….! என்று சொல்லி கண்ணடித்துச் சிரிக்கிறான்.
இதை ஓரக் கண்ணால் கவனித்த மலர்விழி…”இந்த மாதிரி துமுரு பிடிச்ச ஆளுங்க “எல்லா எடத்துலயும் இருப்பாங்களாட்டியும்.
பொட்டச்சிங்கன்னா இவனுங்க போதைக்கு ஊறுகாய் போல….! உன் நேரம் நல்லாயில்லை….வசமா நீ எங்கிட்ட மாட்னடா மவனே…..உன் போதையை ஏறக்க கண்ணுக்குள்ளார ஊறுகாய தீட்டிப்புடுவா இந்த மலரு..மனசுக்குள் கருவிக் கொண்டே மீனைத் தேய்த்து தேய்த்து சுத்தம் செய்து கொண்டிருந்தாள் மலர்.
இது போன்ற ஆத்து மீனுக்க்காகவே பணவலை விரித்துப் பிடிப்பவன் அந்த அமீர்பெட் ஆஞ்சநேயலு என்ற விஷயம் அறியாத ஷீலாவும், …ஒருவரை ஒருவர் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டனர்.
வந்தவரிடம் மேனேஜர் ஆறுமுகம் குசு குசு வென்று ஏதோ பேசவும்.
அதெல்லாம் படியும்….முதல்ல கோழியை …அமுக்கு….பெறவு கொசுவை பிடிக்கலாம்…என்று பூடகமாக சொல்லிவிட்டு , போகிற போக்கில் மலர்விழியைப் பார்த்து கௌரவப் புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு வெளியேறினார் வந்தவர்.
அடுத்த நொடி மானேஜர் ஆறுமுகம் ஷீலாவிடம் வந்து நின்று……”அந்தப் பாப்பா ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டக்காரி……தெரியுமா ?”
.அப்படியா..? எப்படி
நீயுந்தான் மாசக்கணக்கா வேலைக்கு வந்தே…..ராவும் பகலும் கால்கடுக்க கைவலிக்க இம்புட்டு வேலை செஞ்சாத் தான் காச எண்ணும்படியா இருந்துச்சு….ஆனா…அவளுக்கு வந்த உடனே வந்த அதிர்ஷ்டத்தைப் பார்த்தியா ? அதான் எல்லாத்துக்கும் மச்சம் வேணும்….சொல்லிக் கொண்டே ஷீலாவின் முகத்தைப் பார்த்த ஆறுமுகம் தான் வைத்த பொடி அவளை ஏதாவது பாதித்ததா என்று முகத்தில் தேடினார்.
அப்படி என்ன பெரிய அதிர்ஷ்டம்…..? இந்த இறால் கடையில…என்று மெல்ல இழுத்தபடி ஆர்வமானாள் ஷீலா.
இப்ப வந்தாரே…அவரு இந்த இறால் மீனுல ஊறுகாய் தயாரிக்கிற கம்பெனி வெச்சிருக்காரு..அந்த ஊறுகாய் பாட்டில் மேலட்டையில் விளம்பரம் போடணுமாம்….அதுக்கு நம்ப மலரைத் தான் கூபபுடுறார். அட்டைப்படம், விளம்பர மாடல்….சும்மா ஒரே ஒரு வார்த்தை சொன்னால் போதும்….”ஆஹா …என்ன ருசி “….இதுக்கு எம்புட்டு பணம் தருவாரு தெரியுமா….?
எம்புட்டு..ஒரு நாளைக்கு முந்நூறா ?
நீ…முன்நூறுலயே கெட…அதுக்கு மேல யோசிக்காத…ஒரு படத்துக்கு அஞ்சாயிரம் ரூபாய் தருவாராம்..சொல்லிட்டு போனாரு. சீனியாரிட்டியில நீ தான் முந்திலேர்ந்து இங்கன இருக்குற. நீ சரின்னு சொன்னா நான் இதுல உன்னிய கோர்த்து விட்டுடறேன்..
ஆனா இது ரகசியமா இருக்கோணம். என்ன சொல்றே ஷீலா. முதல்ல அட்டைப் படம்….பெறவு தொலைக்காட்சி விளம்பரம் அப்பிடியே மேல மேல போயி சினிமால கூட நடிக்கிற சான்ஸ் கெடைக்கும். அம்புட்டுக்கும் கொடுத்து வெச்சிருக்கணம். எனக்கு நீயும் நல்லாருக்கோணம்….மெல்ல மெல்ல ஷீலாவின் மனசுக்குள் ஆசை விஷத்தை கலந்து கொண்டிருந்தான் அவன்.
குப்பென்று பொறாமையில் வியர்த்தாள் அவள். எப்படி…இவர் சொல்லுவது நிஜமானால், நான் மட்டும் என்ன அவளுக்கு இளைத்தவளா? இந்த வாய்ப்பை நான் தவற விடக் கூடாது..ஒரே படத்துக்கு அஞ்சாயிரம்…..அம்மாடியோ…எப்பிடியாச்சும் இதுக்குள்ள மலரை நுழைய விடக் கூடாது..பட படவென்று வந்தது ஷீலாவுக்கு. கையும் காலும் பரபரத்தது. எதைப் பற்றியும் யோசிகாமல் அறிவு பணத்தில் அமிழ்ந்தது. ஓரக் கண்ணால் வேலை செய்து கொண்டிருந்த மலர்விழியைப் பார்க்கிறாள்.
அவளைப் பார்க்க பார்க்க இவளுக்குள் கனன்று கொழுந்து விட்டெரிந்தது நெருப்பு. அவளிடமிருந்த அன்பு அந்த பொறாமை நெருப்பில் கருகிச் சாம்பலானது.
சார்……எனக்கே சொல்லுங்க….நான் இந்த விளம்பரத்தில் வரேன்….நான் இந்த விஷயத்தை மலர்கிட்ட சொல்லலை..நீங்க எனக்கே இந்த சான்ஸ் வாங்கிக் கொடுங்க ப்ளீஸ்….என்று கெஞ்சும் பார்வையில் ஆறுமுகத்தைப் பார்க்கிறாள்.
“கோழியைப் பிடிச்சாச்சு” என்று மனசுக்குள் குதூகலமானான் ஆறுமுகம்.
நீண்ட நாட்கள் பழகியவன் போல அருகில் வந்தவன் அவளைத் தொட்டபடியே, ….மலரு. உனக்கு இங்க வேலை பார்க்க பிடிக்கலைண்டா சொல்லு…உன்னிய அசோக் பில்லர் கிட்ட பாக்கிங் ஆபீசு ஒண்ணு இருக்குது நான் அங்கனகுள்ள தான் இருப்பேன்..ஷீலாவையும் உன்னயும் அங்கனையே மாத்தி உடறேன்…சரியா? என்று சொல்லிவிட்டு கண்ணடித்துச் சிரிக்கிறான்.
உடலெங்கும் திராவகத் துளி பட்டது போலத் தவித்தவளாக மலர்விஷி, ஷீலா வந்தா நானும் அங்க வந்துருவேன்..என்று நெளிந்து தன்னை அவனிடமிருந்து விலக்கி விலகி நின்று கொண்டாள்.
இவனும் இவன் மூஞ்சியும்…இளிப்பைப் பாரு…..உனக்கெல்லாம் ஆண்டவன் கண்ணைக் கொடுத்திருக்கான் பாரு….அந்த ஆண்டவனுக்கு அறிவே இல்லை..என்று மனத்துக்குள் நினைத்தபடியே கூடையிலிருந்த இறால் மீனை எடுத்துத் தேய்த்து கழுவி முள்ளை எடுக்கிறாள்.
பாவம் ஷீலா…இதே வேலையை எத்தனை மாசம் பண்ணிட்டு இருக்கா.அவ கலியாணத்துக்கு நாலு காசு சேத்துக்கிட வந்தவ,
இங்கன வந்து மாப்பிள்ளையும் புடிச்சிட்டா …கெட்டிக்காரி. பாண்டியன் அப்பிடியே சினிமாக் காரன் தனுசு மாதிரியே இருக்காரு.
அவ போயி என்னிய அழகுன்னு சொல்லிக்கிட்டு கெடக்கிறா . வெள்ளந்தியான மனசு அவளுக்கு.கைகள் காரியத்தில் கண்ணாக இருந்தாலும் எண்ணங்கள் மனசோடு பேசிக் கொண்டு தான் இருந்தது.
தலையைக் குனிந்தபடி வேலையில் கவனமாக இருந்தாலும் அவளது கண்கள் அந்த அறையை அவ்வபோது துருவித் துருவிப் பார்த்து கொண்டே இருந்தது. அப்போது ஷீலா தனது கைபேசியில் பேசிக் கொண்டிருந்தது கேட்டது.
இவள் சைகையில் யாருன்னு கேட்டதற்கு ஷீலா லேசான வெட்கத்துடன் சைகையால் மீசை போல செய்து காட்டி…அப்பறமா சொல்றேன்…என்று கைகளால் நீ வேலையைப் பாரு..மானஜர் சார் வந்தால் திட்டுவாரு என்று சொன்னாள் .
பயம் என்றால் என்ன என்றே அறிந்திராத மலர்விழி “மானேஜர் சார் திட்டுவாரு போல….அந்தாளு இளிச்சுக்கிட்டே தானே நிக்கும்….ஒருவேளை ஷீலாவைத் திட்டும் போல .என்று ஒரு இனம் புரியாத உணர்வில் மேற்கொண்டு வேலையில் மும்முரமானாள்.
அடேய் கசமாலம்….எங்கடாத் தொலைஞ்ச…என்று அங்கு நின்ற வேலைக்காரப் பையனை அழைத்த மானேஜர் “போடா போயி அந்த “அமீர்பெட் ஆஞ்சநேயுலு “வை நான் கூப்பிட்டேன்னு சொல்லி கையோட கூட்டீட்டு வா..
இதைக் கேட்டதும் அந்த வேலைக்காரப் பையனின் கண்கள் தானாக இவளின் மேல் வந்து விழுந்தது.
குறுகுறு வென்ற பார்வையில் தாக்கப் பட்டவளாக நிமிர்ந்து பார்த்ததும், அந்தச் சிறுவன் இவளையே வெறித்துப் பார்ப்பது தெரிந்ததும் இவளது மூளைக்குள் அபாய மணி அடித்தது.
எம்புட்டு தமிழ் சினிமா பார்த்திருப்பேன்…..அப்ப சினிமால சென்னையை பத்தி சொல்லுறதெல்லாம் நெசம் தான் போலிருக்குது….என்ன தான் நடக்குதுண்டு வேடிக்கை பார்க்கலாம். அப்படி என்ன தான் பண்ணுவானுங்க…கடத்திட்டு போயி வாயில துணி அடச்சு நம்ம வீட்டுக்கு போனப் போட்டு பத்தாயிரம் பணம் கொடுத்தால் தான் மலரை உசுரோட விடுவோம்….
இல்லன்னாக்காட்டி…..”சீ…சீ…என்ன மடத்தனம்….நான் என்ன வெறும் பத்தாயிரம் மட்டும் தானா…..? கற்பனையில கேக்குறத கொஞ்சம் கேக்கலாமே…..ஒரு பத்துக் கோடி……” ஆஹா …..நான் பத்துக் கோடியா ….மலரு…நீ சென்னைக்கு வந்தாலும் வந்தே….
உன்னோட ரேட்டு கூடிட்டே போகுதே….நினைத்தவள் அவளையும் மீறி களுக் கென்று சிரித்துக் கொண்டாள் .
என்னாச்சு மலரு…நீயே சிரிச்சுக்குற…..சந்தோசமா.?..என்று இந்த சர்தர்ப்பத்துக்காகவே காத்திருந்தவன் போல எழுந்து வரும் மேனஜரை வெறுப்புடன் பார்த்தவள் “உனக்கேண்டா…..” ஆ…ஊன்னா ……ஆஜராயிடுற…இங்க நானும் ஷீலாவும் தான் பொண்ணுங்களா ….கிராமத்துலேர்ந்து வந்தா அடங்கிறுவாளுங்கன்னு நெனப்பு….இதே அந்த ஆம்பூர் அகிலாக்காட்ட வேலையைக் காட்ட வேண்டியது தானே…..நாங்கன்னா அம்புட்டு …எளப்பம் ….என்று மனத்துக்குள் சொல்லிக் கொண்டாள் .
அதற்குள் அருகில் வந்து உரசிக் கொண்டு நின்ற மேனேஜரை நடு மண்டையில் நச்சென்று ஓங்கி குத்தவேண்டும் போலிருந்தது மலர்விழிக்கு. அவன் அருகில் வந்ததை கண்டுகொள்ளாதவளாக தன் பாட்டுக்கு சற்று விலகிக் கொண்டு வேலை செய்து கொண்டிருந்தாள். ..கூடவே..”ச்சே ….” என்று அலுத்துக் கொண்டாள் .
என்னா…அலுத்துக்குறே….என்றவன் மீண்டும் நகர்ந்து வருவதற்குள், வாசலில் நிழலாடியது.
வந்தது அமீர்பெட் ஆஞ்சநேயுலு தான்.இரட்டை நாடி சரீரம் ,கன்னங்கறுத்த கலரில் கனத்த செருப்பு, பஞ்சகச்சம் வெச்சு கட்டிய வெள்ளை வெளேர் வேட்டி , வெள்ளை நிறத்தில் கதர் ஜிப்பா ,வாய் நிறைய வெத்தலை…பன்னீர் புகையிலை…ஜர்தா பீடா வாசனை பத்தடிக்கு அடித்து விரட்ட,, முள்ளு முள்ளாக மீசையோ தாடியோ இல்லாத பளீர் முகத்தில் வெத்திலைக் கறையோட பற்கள் தெரியச் சிரிப்பும் கண்களை அடைத்தபடி தங்க ஃ ப்ரேம் போட்ட பவர் கண்ணாடி.அதற்கும் மேலே நெற்றி நிறைத்த நாமம், கர்ண கொடூரமான சாரீரம். அதற்கு ஜதி போடுவது போல சரட் …சரட் …என்ற செருப்புச் சத்தம் வேறு..
“ஏன்டி …ஆறுமுகம்காரு பிலுசாரா ..எவரு …? ஈ அம்மாயி கொட்லக்கு கொத்தக வச்சிந்தா….. பாகுந்தே…பலட்டூரா…..”
(என்ன. ஆறுமுகம் ..கூப்பிட்டீங்களா..? யாரு ? இந்தப் பொண்ணு கடைக்கு புதுசா வந்திருக்கா..? நல்லாருக்காளே …..கிராமமா…?)
டேய்…பாபு…இட்ட ரா….! ஆ அம்மாயி பேரேன்டி …? என்று ரகசியமாக கேட்டான். (இங்க வா….அந்த பெண்ணின் பேரென்ன..?)
அதற்குள் அந்த மானேஜர் குறுக்கே வந்து நின்று…மலர்விழி…! நல்ல தமிழ் பேரு….! என்று சொல்லி கண்ணடித்துச் சிரிக்கிறான்.
இதை ஓரக் கண்ணால் கவனித்த மலர்விழி…”இந்த மாதிரி துமுரு பிடிச்ச ஆளுங்க “எல்லா எடத்துலயும் இருப்பாங்களாட்டியும்.
பொட்டச்சிங்கன்னா இவனுங்க போதைக்கு ஊறுகாய் போல….! உன் நேரம் நல்லாயில்லை….வசமா நீ எங்கிட்ட மாட்னடா மவனே…..உன் போதையை ஏறக்க கண்ணுக்குள்ளார ஊறுகாய தீட்டிப்புடுவா இந்த மலரு..மனசுக்குள் கருவிக் கொண்டே மீனைத் தேய்த்து தேய்த்து சுத்தம் செய்து கொண்டிருந்தாள் மலர்.
இது போன்ற ஆத்து மீனுக்க்காகவே பணவலை விரித்துப் பிடிப்பவன் அந்த அமீர்பெட் ஆஞ்சநேயலு என்ற விஷயம் அறியாத ஷீலாவும், …ஒருவரை ஒருவர் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டனர்.
வந்தவரிடம் மேனேஜர் ஆறுமுகம் குசு குசு வென்று ஏதோ பேசவும்.
அதெல்லாம் படியும்….முதல்ல கோழியை …அமுக்கு….பெறவு கொசுவை பிடிக்கலாம்…என்று பூடகமாக சொல்லிவிட்டு , போகிற போக்கில் மலர்விழியைப் பார்த்து கௌரவப் புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு வெளியேறினார் வந்தவர்.
அடுத்த நொடி மானேஜர் ஆறுமுகம் ஷீலாவிடம் வந்து நின்று……”அந்தப் பாப்பா ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டக்காரி……தெரியுமா ?”
.அப்படியா..? எப்படி
நீயுந்தான் மாசக்கணக்கா வேலைக்கு வந்தே…..ராவும் பகலும் கால்கடுக்க கைவலிக்க இம்புட்டு வேலை செஞ்சாத் தான் காச எண்ணும்படியா இருந்துச்சு….ஆனா…அவளுக்கு வந்த உடனே வந்த அதிர்ஷ்டத்தைப் பார்த்தியா ? அதான் எல்லாத்துக்கும் மச்சம் வேணும்….சொல்லிக் கொண்டே ஷீலாவின் முகத்தைப் பார்த்த ஆறுமுகம் தான் வைத்த பொடி அவளை ஏதாவது பாதித்ததா என்று முகத்தில் தேடினார்.
அப்படி என்ன பெரிய அதிர்ஷ்டம்…..? இந்த இறால் கடையில…என்று மெல்ல இழுத்தபடி ஆர்வமானாள் ஷீலா.
இப்ப வந்தாரே…அவரு இந்த இறால் மீனுல ஊறுகாய் தயாரிக்கிற கம்பெனி வெச்சிருக்காரு..அந்த ஊறுகாய் பாட்டில் மேலட்டையில் விளம்பரம் போடணுமாம்….அதுக்கு நம்ப மலரைத் தான் கூபபுடுறார். அட்டைப்படம், விளம்பர மாடல்….சும்மா ஒரே ஒரு வார்த்தை சொன்னால் போதும்….”ஆஹா …என்ன ருசி “….இதுக்கு எம்புட்டு பணம் தருவாரு தெரியுமா….?
எம்புட்டு..ஒரு நாளைக்கு முந்நூறா ?
நீ…முன்நூறுலயே கெட…அதுக்கு மேல யோசிக்காத…ஒரு படத்துக்கு அஞ்சாயிரம் ரூபாய் தருவாராம்..சொல்லிட்டு போனாரு. சீனியாரிட்டியில நீ தான் முந்திலேர்ந்து இங்கன இருக்குற. நீ சரின்னு சொன்னா நான் இதுல உன்னிய கோர்த்து விட்டுடறேன்..
ஆனா இது ரகசியமா இருக்கோணம். என்ன சொல்றே ஷீலா. முதல்ல அட்டைப் படம்….பெறவு தொலைக்காட்சி விளம்பரம் அப்பிடியே மேல மேல போயி சினிமால கூட நடிக்கிற சான்ஸ் கெடைக்கும். அம்புட்டுக்கும் கொடுத்து வெச்சிருக்கணம். எனக்கு நீயும் நல்லாருக்கோணம்….மெல்ல மெல்ல ஷீலாவின் மனசுக்குள் ஆசை விஷத்தை கலந்து கொண்டிருந்தான் அவன்.
குப்பென்று பொறாமையில் வியர்த்தாள் அவள். எப்படி…இவர் சொல்லுவது நிஜமானால், நான் மட்டும் என்ன அவளுக்கு இளைத்தவளா? இந்த வாய்ப்பை நான் தவற விடக் கூடாது..ஒரே படத்துக்கு அஞ்சாயிரம்…..அம்மாடியோ…எப்பிடியாச்சும் இதுக்குள்ள மலரை நுழைய விடக் கூடாது..பட படவென்று வந்தது ஷீலாவுக்கு. கையும் காலும் பரபரத்தது. எதைப் பற்றியும் யோசிகாமல் அறிவு பணத்தில் அமிழ்ந்தது. ஓரக் கண்ணால் வேலை செய்து கொண்டிருந்த மலர்விழியைப் பார்க்கிறாள்.
அவளைப் பார்க்க பார்க்க இவளுக்குள் கனன்று கொழுந்து விட்டெரிந்தது நெருப்பு. அவளிடமிருந்த அன்பு அந்த பொறாமை நெருப்பில் கருகிச் சாம்பலானது.
சார்……எனக்கே சொல்லுங்க….நான் இந்த விளம்பரத்தில் வரேன்….நான் இந்த விஷயத்தை மலர்கிட்ட சொல்லலை..நீங்க எனக்கே இந்த சான்ஸ் வாங்கிக் கொடுங்க ப்ளீஸ்….என்று கெஞ்சும் பார்வையில் ஆறுமுகத்தைப் பார்க்கிறாள்.
“கோழியைப் பிடிச்சாச்சு” என்று மனசுக்குள் குதூகலமானான் ஆறுமுகம்.
தனக்கு முன்னால் நடக்கும் இதையெதையும் அறியாத மலர் “பாவம் ஷீலா” எம்புட்டு கஷ்டப் பட்டு எனக்கு இந்த வேலையை வாங்கிக் கொடுத்திருக்கு.இந்த உதவிய என் உசுரு இருக்குமுட்டும் மறக்க மாட்டேன்.
என்றெண்ணிக் கொண்டாள்.
திடீரென்று அவள் விரலில் ஆழமாகக் குத்திய முள்ளை வெளியே பிடுங்கி எடுக்கவும்….”ரத்தம் குபுக் கென்று முத்தாக வெளியே தெரியவும்…”ஸ்ஸ்ஸ் ….ஆஆஆஆ…ஷீலா முள்ளு குத்திருச்சுடி…” என்று தன்னையறியாமல் கத்துகிறாள்.
(தொடரும் )