பவள சங்கரி

8

நவ்வி போலுமே விழியுடையாள் – ஐயன்
கவ்வி கடுந்தவம் கலைத்துமகிழ செல்வி
நஞ்சுண்டகண்டனவன் பாதம் பணிந்தே
பாவவினை களையும் வரமளிப்பவளே!!

கனிவளச் சோலையில் கற்பகத்தருவாய் படர்ந்து
கசிந்துருகும் பக்தரின் பரிதவிப்பில் சொற்பதமாய்
விரிந்துவிரிந்து விசித்திரமாய் விந்தையானாய்
விரைந்துவந்து உந்தன் மகவைக் காத்தருளே!

சிந்திய முத்துக்களின் புத்தொளியில் சீவனின்
சிந்தை மலர்களின் சிலிர்ப்பில் சித்தாந்தம்
பேசும் சின்னக் கிளியின் கொஞ்சுமொழியில்
சித்தம் கலங்காமல் இறுமாப்பு கொண்டாயோ?

ஒங்காரரூபினி என்றால் ஓயாமல் ஓசைஎழுப்பி
ரீங்காரம் செய்யும் தேனீயாய் சுற்றிவரும்
பாங்கான பக்தருக்கு வரமருளும் நித்தமும்
நீங்காத நாயகியே! காத்தருளும் காமாட்சியே!!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *