Author: மீ. லதா

  • இதயம் கவர்ந்தவன்!

    -திருக்குவளை மீ.லதா

    உன்  காந்தப் பார்வையின் இழுப்பட்ட விசையால்
    இடம் மாறியது எனது இதயமடா!
    விலகி செல்லும் போது வீணாய் அழைத்து போனது
    உன் பின்னால் என் மனமும்!

    உடைகளின் வண்ணத்தின் ஒற்றுமை
    நம் எண்ணத்தின்ஒற்றுமையைப்
    பறைசாற்றிய  நாட்கள் எத்தனை!

    காத்திருப்பில் கரைந்துபோன காலங்களில்
    உன்னுடன் பேசிய  நினைவுகள்
    உயிர் கொடுத்தன வாழ்ந்துவிடு என்று!

    மணக்கும் மல்லிகை பார்த்தால்
    மறக்காது மனக்கண்முன் வந்துபோனது
    மல்லிகையுடன் நீ நின்ற கோலம்!

    கற்பனையில் கரைந்த காட்சி  கண்மலரக்
    கண் எதிரில் நின்றது உனது வடிவில்
    கண்கலங்கி நின்றேன் சந்தோஷத்தின் எல்லையில்!

    சுமைதாங்கும்  இதயமாய்
    உனைத் தாங்கிய இதயம்
    களைப்பாறியது உனது இதயம் சேர்ந்து!

    மணித்துளிகள் நிமிடங்களானது
    பிரிவென்ற அம்பு துளைக்கக் காத்திருக்க?
    கிடைத்திடும் தருணம் ’மகிழ்ச்சி கொள்’ என்றது
    பகவத்கீதை வரிகள் போல!

    அடிக்கடி சந்தித்த பார்வையின் பரிமாற்றம்
    பாதுகாப்பாய்ப் பூட்டப்பட்டது
    பெட்டகத்தின் திறப்பான் என்னிடம் இருத்தப்பட்டது!

    விருந்தோம்பல்  விளையாட்டாய்ப் போக
    மனம் மணி பார்த்தது பதைபதைத்து!
    சிரிப்பலையில் சிறகு விரித்த சந்திப்பு
    இப்போது மெளனம் சாதித்தது பிரிவைக் கண்டு!

    விடை கொடுத்து விடை பெற்றாய்
    விடை தெரியாத என் கேள்வி மட்டும்
    கொக்கிபுழுவாய்க் குடைந்து நின்றது!

    உள்நுழைந்து இதயம் சுரண்டிய உன் நினைவும்
    நீ வந்து சென்ற அடையாளமாய் மிச்சம் இருந்தது
    அறை முழுதும் வாசனையாய் உன் அங்கத்தில் பரவிய நறுமணம்!
    தினம்தோறும் அசைபோடும்
    மனத்தின் காட்சியானது உனது வருகை காலம் முழுதும்!

     

    Share
  • பெண்ணே கேளாயோ!

    -திருக்குவளை மீ.லதா

    உடைக்கப்பட்டன
    பெண்கையில்  விலங்கென்று
    பெருமை கொள்பவனே உடைத்தும் எதற்கு
    உன்னிடம் சாவி?
    உனக்குப் பின்னால்
    பெண் என்பதாலோ?
    உன்னைவிட எதில் குறைந்தவள்?
    அன்பும் பண்பும் அங்கத்தில் அவள் பூட்டியுள்ள
    நகையல்லவோ!
    விட்டுகொடுத்து வாழ்பவள்-
    ஆனால் விட்டுதரமாட்டாள்
    அவள் உரிமைகளை!
    பூவானவள்
    வாடும்வரை வாழ வைக்கிறாள் தன்னை நம்பினோர் கைவிடப்படாரென!
    புதையும் வரைப் புரட்சிப்பெண்ணாக இரு பூவையே!
    மடிந்து விடாதே மண்ணுக்குள் உரமாக!

     

    Share
  • வீறுகொண்டு எழு!

    -திருக்குவளை மீ.லதா

    வீரம் விளைந்த மண்ணு!
    விவேகம் நிறைந்த மண்ணு!
    பெண்மையைப் போற்றும் மண்ணு!       indian woman

    புலி விரட்டிய பெண்டிரும்
    போர் புரிந்த  பெண்டிரும்
    போதனை செய்த பெண்டிரும்
    வாழ்ந்த வாழ்க்கை வரலாறாய்!
    இன்றோ வானம் வசப்பட்டும்!
    போர்க்களமான வாழ்க்கை??

    சூறையாடப்படும் கற்பும்
    சுருக்கிட முடியும் கயிறுமாக
    வாசல் தாண்டி வந்தால்
    வாழும் வாழ்க்கை கேள்விக்குறியாய்
    மடிந்து போகும் பெண்ணே!
    விடியல் நோக்கி நடைபயிலேன்!
    குறுகிப் போகாதே  கண்ணே!
    நிமிர்ந்து நின்று பதிலுரையேன்!

    உலகம்  உனக்கும் குடை விரிக்கட்டும்!
    மலர்தூவி வாழ்த்துப்பா பாடட்டும்!
    எழுத்தாணி எழுதட்டும் ஏட்டிலே உன் புகழை!

     

    Share
  • கருக்கலைப்பு

     

    மீ. லதா

    unnamed
    உன் கருவறையில்
    சிறைப்பட்ட என்னை
    பத்துமாதம் சுமக்க
    முடியாமல் பாதியிலே
    விடுதலை செய்தாய்

    கைமுளைத்து
    கால்முளைத்து
    பாதி உருவம்
    வந்த என்னை
    வேண்டாமென
    தள்ளிவிட்டாய்

    உன்னை
    பார்க்கவில்லை
    என் உறவை
    பார்க்கவில்லை
    இவ்வுலகை
    பார்க்கவில்லை
    கருவறையின்
    இருட்டறையில்
    என் காலம் முடிந்தது

    பனிக்குடத்தில்
    முழ்கியிருந்தேன்
    மூச்சிமூட்டவில்ல
    தத்தளித்து சுத்திவந்தேன்
    தாய் வயிற்றில் உள்ளே

    உன் உறவினிலே
    உருவான என்னை
    விலகி போன உறவாலே
    வெறுக்கிறாயே என்னை

    அரைக்குறையாய்
    அழித்துவிட்டாய்
    அரைநொடியில்
    அழித்துவிட்டாய்
    கருக்கலைப்பு
    செய்துவிட்டாய்
    கனவையும்
    கலைத்துவிட்டாய்

     

    Share
  • பேருந்துப் பயணம்!

    மீ.லதா, திருக்குவளை

    பரபரப்பான  காலைப்பொழுது
    அடித்துப் பிடித்துக் கிளம்பிச்
    சன்னலோர இருக்கை பிடித்து
    ’அப்பாடா!’ என்று பெருமூச்சி,
    பேருந்தில் அமர்ந்து
    காலை உண்ட உணவின்
    இடிபாடு தொண்டைக்குழிக்குள் சிறு அசைவாய்
    பல் இடுக்குகளிலும்!

    தனக்கு மட்டும்தான் இந்த வாழ்கை என்று புலம்பல்!
    அருகில் இருப்பவரை  மறந்து
    கொஞ்சமாக உரையாடலின்
    சத்தங்கள் மறந்து போன
    புத்தகம், எழுதாமல் விட்ட பக்கங்கள்,
    விடுமுறை இல்லையே என ஆதங்கத்தின் வெளிபாடு
    உறவு முறை விசாரிப்பு
    சற்று நேரத்தில் நிரம்பி வழிந்த பேருந்துகளில் சத்தங்களும்
    நடத்துனரின் கூக்குரலும்  ”டிக்கெட் யார் எடுக்க வில்லை?” என்று
    இவள் மனம் வீட்டிலேயே நின்றது
    மூடப்பட்டதா சமையல் பாத்திரங்கள்? சரியாகப் பூட்டப்பட்டதா?
    வீடு என்று
    இயந்திர வாழ்க்கையில் துருப்பிடித்த மனம்?

    Share
  • வாழ்க்கைப் பயணம்

    -திருக்குவளை மீ.லதா 

    பால் நிலவாய் வண்ணம் கொண்டேன்
    பருவம் மாறக் கனவு கண்டேன்
    கார்முகில் வண்ணன் கரம் பிடித்தேன்
    காவிரி நதியில் சங்கமித்தேன்
    யுத்த பூமியாய் மாறி நிற்கப்
    பூத்ததோ புதிய பூ ஒன்று!
    புன்னகை சிந்திட நிற்குது இங்கு
    கவலை இல்லாது வாழ்ந்திட்டேன்
    காலம் முழுவதும் மகிழ்ந்திட்டேன்
    காலன் வந்ததும் கலங்கிட்டேன் 
    வாழ்ந்த வாழ்க்கை நினைத்திட்டேன்
    இதுவே போதுமென்று அமைதியுற்றேன்
    கல்லறை தனிலே உறங்குகின்றேன்!

    Share