வையவன் வழங்கும் புத்தகப் பரிசு
அண்ணாகண்ணன்
முதுபெரும் எழுத்தாளர் வையவன் அவர்கள், தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 100 நூல்களுக்கு மேல் படைத்தவர். 32 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி, பல்வேறு பரிசுகளை வென்றவர். நாவல்கள், சிறுகதைகள், குறுநாவல்கள், கவிதைகள், கட்டுரைகள், உரைகள், மொழிபெயர்ப்புகள்…. எனப் பல துறைகளிலும் முத்திரை பதித்தவர். தமிழில் தாரிணி பதிப்பகம், ஆங்கிலத்தில் English Titles என இரு பதிப்பகங்களைத் தொடங்கி நடத்தி வருகிறார். வல்லமையின் வளர்ச்சிக்குத் துணை நிற்கிறார்.
வல்லமை மின்னிதழ், வாரம்தோறும் ஒருவருக்கு வல்லமையாளர் விருது வழங்கி வருவது, நீங்கள் அறிந்ததே. அந்த வாரத்தில் தமது ஆற்றலைச் சிறப்பாக வெளிப்படுத்தி ஒருவருக்கு இந்த விருதினை வழங்கி வருகிறோம். இது நாள் வரையிலும் இதனை ஒரு கௌரவ விருதாகவே வழங்கி வருகிறோம். இந்நிலையில் வையவன் அவர்கள், வல்லமையாளர் விருது பெறுபவருக்குத் தமது நூல்களில் ஒன்றைப் பரிசாக வழங்க முன்வந்துள்ளார். இது, விருது பெறுபவருக்கு ஊக்கமளிக்கும்.
வையவன் அவர்களுக்கு வல்லமையின் சிறப்பு நன்றிகள்.