மௌவல் – “மல்லிகை மௌவலின் போதலர்த்தி” – மௌலி — மவுவா (MAHUA )
மௌவல் மௌவல்
நூ த லோ சு
மயிலை
ஓரிரு ஆண்டுகளுக்கு முன் சாதாரண மக்களால் ஊடகம் வழி நன்கு அறியப்பட்ட முணுமுணுக்கப்பட்ட
ஓர் திரைப்பட (சிவாஜி) பாடல் வரியில் பலரறிய வந்த நல்ல சங்கத்தமிழ் சொற்களில் ஒன்று
மௌவல் மௌவல்
கவிஞர் வைர முத்து என்னும் நல்ல கவிஞர் புனைந்த பாடல் அது என பலரும் அறிவர்
ஆனால் இங்கு நாம் காட்ட நினைப்பது மௌவல் எனும் பூவினை குறிக்கும் சொல்லினைப் பற்றி
ஐயம் எழுந்த மடல் ஒன்று நம் மடலாடலில் கண்டேன்
வென்றி மாமழு வேந்திமுன் மண்மிசை மன்னரை மூவெழுகால்
கொன்ற தேவநின் குரைகழல் தொழுவதோர் வகையெனக் கருள்புரியே
மன்றில் மாம்பொழில் நுழைதந்து மல்லிகை மௌவலின் போதலர்த்தி
தென்றல் மாமணம் கமழ்தர வருதிரு வெள்ளறை நின்றானே
என திருமங்கை மன்னன் தன் பெரிய திருமொழி (நா.தி.பி.- 5.3.1 / 1368 )
பாசுரத்தில்பயன்கொண்ட இடத்து இதற்கு ஓர் பூ அல்லாத வேறு ஓர் பொருள் கொள்ள முடியுமா என்பதே அது
மேலும் மடலிழையில் அறிஞர் பலர் இதற்கே மரமல்லிகை எனவும் பொருள் காட்டினர்
இவ்வையங்களை களைய எழுந்ததே இக்கருத்துரை
பாசுரத்தில் திருமங்கையாழ்வார் பேசும் கருத்து
தென்றலானது (வீடு / பொது) மன்றிலிலும் மாமரப் பொழிலி நுழைந்து வந்த நிலை மல்லிகையின்
மற்றும் மௌவல் மலர்களின் ‘போது’ களை விரியச் செய்ததால் அம் மணங்களை ஏந்தி வந்து நாறும்
‘வெள்ளறை’ எனும் தலத்தில் உறையும் நின்ற கோலம் காட்டும் திருமாலே
போர்க்கருவியாம் மழுவினை ஏந்தி முன் ஒரு காலத்தில் ஏழேழ் தலைமுறையில் வந்த மன்னர்
பலரை கொன்றொழித்த தேவனே உன்னுடைய கழலினைத் தொழும் வழியை காட்டமாட்டாயா
ஈங்கு மௌவல் ஓர் மலர் என பொருள்கொள் நிலைதான் உள்ளது.
‘மல்லிகை’ யில் (யின்) எனும் வேற்றுமை தொக்கி நின்றுள்ளது
மல்லிகையின் மௌவலின் (எனும் இரண் டின்) எனக்கொள்ளவேண்டும்
தென்றல் – – – – – மல்லிகை மௌவல் எனும் இருவகை மலர்களின் போதுகளை அலர்த்தி
தான் மண ம் நிறைத்துக் கொண்டு வீசியது எனக் கொளளல் வெண் டும்
அரும்பு>>> போது >>> மலர் >>>> அலர் என்பது பொதுவாக
ஓர் மலரின் பருவ வடிவ வளர்ச்சி என பலரும் அறிவர்
காலை அரும்பி பகலெல்லாம் போதாகி
மாலை மலரும் இந் நோய் குறள் 1227
அலர் என்பது மலர்ந்த நிலை கடந்து மேலும் சில நாள் வாடிவிடாமல் பூத் துக்கா ண் பது
இங்கு மௌவல் என்பது மல்லிகையின் வெண்மை பருவம் வடிவம் என வேறு ஒர் பண்பு ஆகாது
ஆகமுடியாது ஏனெனில் வெண்மை என பொருள் உள்ள ஓர் சொல் லுடன் யின் எனும்
வேற்றுமை சேர அது போது எனும் சொல்லுடன் அமையாது
‘போது’ எனும் சொல் பின் உள்ளதால் வடிவமும் பருவமும் குறிக்கும் பண்பு முன் வரத் தேவையில்லை
மௌவல் என்பது ஓர் மலர்தான் என்பதை
கீழ் வரும் மேற் கோள் பாடல் அடிகள் ஐயம் ஏதும் இன்றி காட்டக் காண லாம்
மேலும்
மௌவல் ஓர் கொடி >>>>>>>>>>> தேவாரம் 1.101.3 பெரிய 12-1217 ; 12-2955 ; அகம் 23-12 ; நச்சி. உரைமேற்கோள் பாடல் ;
மகளிர் தலை யில் அணியும் மலர் >>>>>>>>>> நா.தி.பி. 3.2.7 / 1164 ; சீவக சிந்தாமணி;
நல்ல மண ம் வீசக்கூடியது >>>>>>>>>> நா.தி.பி. 9.1.3 / 1750 ; 9.10.2 / 1839 ; தேவா 1.14.7 ; 3.46.7; 3.59.1 ; 3.110.7 ; 3.119.5 ;
கலி 14-3 ; கலி 27-4; கல்லாடம் 83-26 ;
அஃதும் இரவில் பூத்து நாறும் பண்பினது >>>>>>> குறு 19
வெண்மையான இதழ்களை உடையது >>>>>>>>>>> தேவா 1.136.3 ; அகம் 21-1 ;
இதன் அரும்பு பல்லிற்கு உவமை >>>>>>>>>>>>> கலி 14-3 ; கலி 27-4 ;
புதராக பல்வகை இனத்துடன் வளர்வது >>>>>>>>> தேவா 2.84.9
வீட்டிலும் வளர்ப்பார் >>>>>>>> அகம் 21-1 ; கல்லாடம் 83-26 ; பெரிய 12.1217
மரமல்லிகை அல்ல என்பது
மேற்கண்டபடி
ஓர் கொடியாவதாலும்
புதராக முல்லை மல்லிகை என பலவகை இனத்து டன் படர்ந்து மிடைந்து வளர்வதாலும்
பல்லிற்கு உவமை காட்டுவதாலும்
மேலும்
மௌவல் நீண்மலர் மேலுறைவானொடு
பௌவ வண்ணனு மாய்ப் பணிவார்களே 5.97.13 அப்பரடிகளின் சித்தத் தொகை
இதனில் நீண்மலர் (= நீள் மலர் நீண்ட காம்பினை உடைய து ) என்றது தாமரையை அதாவது பிரமன் அமர்ந்த மலர்
எங்கனம் எனில்
கடல் வண்ணனும் (பௌவ வண்ணன் = திருமால்) உடன்
அடிமமுடி காணாத திரு விளையாடல் காட்டப்படுவதால்
எனவே நீள் மலர் = நீண்ட காம்பினை உடைய மரமல்லி ஆகாது
இங்கு மௌவல் எனும் சொல் எதுகை நோக்கி வெண்மைக்கு ஆகுபெயராக வந்தது
அதான்று,
மரவிரி போதுமௌவல் மணமல்லிகை கள்ளவிழும் (குடமூக்கு தேவாரம் 3.59.1 )
எனும் வரிகளில் காணும் மர எனும் சொல் மரவம் எனும் வேறு ஒரு மலரைக் குறி த்தது
அரவிரி கோடனீட லணிகாவிரி யாற்றயலே
மரவிரி போதுமௌவல் மணமல்லிகை கள்ளவிழுங்
குரவிரி சோலைசூழ்ந்த குழகன்குட மூக்கிடமா
இரவிரி திங்கள்சூடி யிருந்தானவன் எம்மிறையே
இப்பாடலில் கோடல் மல்லிகை குரா முதலிய மலர்களைத்தான் பேசுகிறது காண்க
——————————————————————————
மேற்கோள் வரிகள்
மௌவல் குழலாய்ச்சி மெந்தோள் நயந்து நா.தி.பி. 3.2.7 / 1164
திருமங்கை பெரிய திருமொழி
போதலர் புன்னை மல்லிகை மௌவல் புதுவிரை மதுமல ரணைந்து நா.தி.பி. 9.1.3 / 1750
திருமங்கை பெரிய திருமொழி
மௌவல் மாலை வண்டாடும் மல்லிகை மாலையொடு மணந்து நா.தி.பி. 9.10.2 / 1839
திருமங்கை பெரிய திருமொழி
தேவாரம்
மரவத்தொடு மணமாதவி மௌவல்லது விண்ட 1.14.7 கொடுங்குன்றம்
கொல்லையின்முல்லை மல்லிகைமௌவல் கொடிபின்னி 1.101.3 கண்ணார்கோயில்
தண்ணிதழ் முல்லையொ டெண்ணிதழ் மௌவல் மருங்கலர் 1.136.3 தருமபுரம்
புறவிரி முல்லைமௌவல் குளிர்பிண்டி புன்னை புனைகொன்றை 2.84.9 நனிபள்ளி
கந்த மௌவல் கமழும் கருகாவூர் எம்எந்தை 3.46.7 கருகாவூர்
மரவிரி போதுமௌவல் மணமல்லிகை கள்ளவிழும் 3.59.1 குடமூக்கு
நறவ மல்லிகை முல்லையும் மௌவலும் நாண்மல ரவைவாரி 3.110.7 வடகரை மாந்துறை
வாசமாம் புன்னை மௌவல்செங் கழுநீர் மலரணைந் தெழுந்த 3.119.5 வீழிமிழலை
விரிந்துயர் மௌவல் மாதவி புன்னை வேங்கைவண் செருந்தி 3.123.5 கோணமாமலை
மௌவல் நீண்மலர் மேலுறை வானொடு 5.97.13
துன்னு சாதி மரு மாலதி மௌவல் துதைந்த நந்திகரம் வீரம் 12.240 பெரிய புராணம்
நடையில் படர்மென் கொடி மௌவல் நனையில் திகழும் 12.1217
மௌவல் மாதவிப் பந்தரில் மறைந்து வந்து எய்தி 12.2955
சங்க நூல்கள்
ஞாழன் மௌவல் நறுந்தண் கொகுடி குறிஞ்சி 81
மனைஇள நொச்சி மௌவல் வால்முகைத் அகம் 21-1-
தாழ்வின் நொச்சி சூழ்வன மலரும் மௌவல் மாச்சினை அகம் 23-12
மௌவலொடு மலர்ந்த மாக்குரல் நொச்சியும் அவ்அளவு அகம் 117-1
மணமௌவல் முகைஅன்ன மாவீழ்வார் நிரைவெண்பல் கலி 14-3
மாதரார் முறுவல்போல் மணமௌவல் முகைஊழ்ப்ப கலி 27-4
மல்லிகை மௌவல் மணம்கமழ் சண்பகம் பரிபாடல் 12
மனைமரத்து எல்லுறு மௌவல் நாறும் பல்லிருங் கூந்தல் குறு 19
மாக்குரல் நொச்சி மனைநடு மௌவலொடு ஊழ்முகை அவிழ குறு. 115
மெல்அவல் மருங்கின் மௌவலும் அரும்பின குறு. 122
மலரில் மௌவல் நலம் வரக் காட்டி கயல் ஏர் உண்கண் குறு 316
முல்லையும் மௌவலும் முருகுயிர்த்து அவிழ கல்லாடம் 39-7
மௌவல் இதழ்விரிந்து மணம்சூழ் பந்தர்செய் முன்றிலும் கல்லாடம் 83-26
பொறி வண்டு மூசிய மௌவல் முருகுயிர்ப்பத்-தேசிகப் 270 விக்கிரமசோழனுலா
மாடுநின்ற கொன்றைஏறி மௌவல்பூத்த பாங்கெலாம் நச்சி. உரைமேற்கோள் பாடல்
மௌவலம் குழலியை மன்னன் ஏயினான் சீவக சிந்தாமணி
—————————-
அதான்று
மௌவல் >>>>>>>> மௌலி எனும் சொல்லுடன் பிணைத் த ஐயம் மும் கட்ட ப்பட்டது
ஆனால்
மௌவல் >>> மௌலி என்பன வேறுவேறு சொற்கள்
மௌலி என்பது தலையில் அணியும் ஓர் அணிகலன் = முடி = கிரீடம்
கீழ் காணும் பெரிய புராணப் பாடல் வரிகளைக் காண்க ஐயம் எதும் இன்றி மன்னர்களின் முடியைப் பே சுகின்றது
ஒவ்வாத என்பே இழையா ஒளிமௌலிச் செவ்வான்மதி 3.126.2 (விடைவாய் தேவாரம் )
சூடும் சடைமௌலி அணிந்தவர் தொல்லை ஏனம் 12.1015 பெரிய புராணம்
சோதி சூழும் மணி மௌலிச் சோழர் பொன்னி திரு நாட்டு 12.1022 பெரிய புராணம்
பொன்னாரும் மணிமௌலிப் புரவலன்பால் அருளுடையார்12.1292 பெரிய புராணம்
பாணனார் பத்திரனாரும் பைம்பொன் மௌலிச் சேரலனார் 12.3783 பெரிய புராணம்
பொன்னார் மௌலிச் சேரலன் ஆர் போற்றும் அமைச்சர்க்கு 12.3793 பெரிய புராணம்
கோலத்தார் மௌலிக் குலோத்துங்க சோழற்கு 199 குலோத்துங்கசோழனுலா
————————–
நிற்க
வாட இந்தியாவில் மவுவா (MAHUVA ) எனும் சொல்லால் விளிக்கப்படும் ஓர் மலர் உள்ளது
அதுவோ தமிழில் இலுப்பை எனும் மரமாகும் இதன் மலர்களை இனிப்புச் சுவைகாகப் பயனகொள் வர்
“ஆலை இல்லை ஊருக்கு இலுப்பைப்பூ சர்கரை ” எனும் முதுசொல்தான் அறிவோமே
தலையில் அணியப் படாமல் வாணிப மல ராக க உள்ளமைக் காண்க இந்த ‘மவு வா’ பற்றி சில இணையச் சுட்டிகள்
http://en.wikipedia.org/wiki/Madhuca_longifolia