Lord Shiva abishegam

திருவெம்பாவை – 11

மாணிக்கவாசகர்

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்
கையாற் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போற்
செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.

நாம் குளத்தில் குதிக்கும்போது, குபீர், தொபீர், படீர், தொபுக்கடீர் என்றெல்லாம் ஒலியெழுவதைப் பார்த்திருக்கிறோம், படித்திருக்கிறோம். திருவெம்பாவையில் மாணிக்கவாசகர், வேறு ஓர் ஓசையைக் குறிப்பிடுகிறார். பாவை நோன்பு இருக்கும் பெண்கள், குளத்தில் குளிக்கச் செல்கிறார்கள். அது, வண்டுகள் மொய்க்கும் மலர்கள் கொண்ட பொய்கை. அதில் முகேர் எனச் சப்தம் எழுமாறு குதித்துக் குளிக்கிறார்களாம். இந்த மாணிக்கப் பொய்கையில் நீங்களும் பாய்ந்து குளியுங்கள். டெக்சாஸ்வாழ் ஸ்ருதி நடராஜனின் மந்திரக் குரலில் இந்த இனிய பாடலைக் கேளுங்கள்.

 

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.