நறுக்… துணுக்.. (3)

பவள சங்கரி

நேற்று காட்பாடி ரயில் நிலையத்தைக் கடக்கும்போது ஒரு சுவாரசியமான நிகழ்வைக் காண முடிந்தது. இளம் சிறார்களைக் கொண்டு (தேசீய பாதுகாப்புப் படை பயிற்சி மாணவர்கள்) , சென்னை தெற்கு ரயில்வே பாதுகாப்புப் படையின், விழிப்புணர்வு சேவை அரங்கேற்றப்பட்ட விதம் அருமை! ஆம்,சிறார்கள் வாத்தியக் கருவிகளுடன் கையில் விழிப்புணர்வு வாசகங்கள் தாங்கிய அட்டைகளுடன் ரயில் நிலையத்தை வலம் வந்ததோடு பிரயாணிகளை அச்சடித்த காகிதங்களும் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

”பிஸ்கட், டீ, கூல் டிரிங்க்ஸ் போன்ற தின்பண்டங்களை தெரியாத எவரிடமிருந்தும் வாங்கி சாப்பிட வேண்டாம். மயக்கமடைந்து, பணம், நகைகளை இழக்காதீர்! எச்சரிக்கை! “

என்று தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, போன்ற பல்வேறு மொழிகளிலும் எழுதி விநியோகித்துக் கொண்டிருந்தார்கள்! வாழ்க! வாழ்க!

 

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “எச்சரிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.