அந்திமந்தாரை – நான்கு நிறங்களில்

நம் வீட்டுத் தோட்டத்தில் ஒரே நாளில், நான்கு நிறங்களில் அந்திமந்தாரை பூத்துள்ளது. அந்தியில் மலர்ந்து காலையில் மூடிக்கொள்வதால், இது அந்திமந்தாரை எனப் பெயர் பெற்றுள்ளது. இதுவே பெருவின் அதிசயம் ((Marvel of Peru ) என்றும், நான்கு மணித்தாவரம் ( Four O’ Clock Plant), நாலு மணிப்பூ அல்லது அஞ்சு மணிப்பூ என்றும் அழைக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர், மிராபிலிஸ் ஜலாபா (Mirabilis Jalapa). ‘மிராபிலிஜஸ்’ என்ற இலத்தீன் சொல்லுக்கு ‘அற்புதமான’ என்று பொருள். இந்த அற்புத மலரைக் கண்டு மகிழுங்கள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *