சிம்ம வாகன சிங்காரி, மாதே நீலாயதாக்ஷி

0

நாகை ராமஸ்வாமி

சிம்மவாகன சிங்காரி மாதே நீலாயதாக்ஷி
ஏகதந்தன் ஆனைமுகன் வலம் வந்த தாயே
இருவிழிப் பார்வையுன் காருண்யம் காட்டுதம்மா
முப்பெரும் தேவியே மூவுலகும் காப்பவளே
நான்முக வேதமுன் நற்பெயர் ஓதுங்கால்
ஐந்தெழுத் தலைவனும் நந்தியுடன் மகிழ்கின்றான்
ஆறுமுகன் மயில்வாகனன் அருள் சுரக்க வைத்தாயே
சிம்மவாகன சிங்காரி மாதே நீலாயதாக்ஷி

ஏழுமலை கருடவாகனன் எழில்மிகு சோதரி
எட்டா உயரமாம் கயிலை ஹேமவதி
நவநிதியும் நலம் பலவும் நயமாய் நல்கிடுவாய்
சிம்மவாகன சிங்காரி மாதே நீலாயதாக்ஷி

நீள கரும்பின்னல் மின்னலாய் அசைந்தாட
லாவண்யரூப கிளிகொஞ்சும் திருமுகம்
யக்ஞகோஷம் புன்னகை பூக்க வைக்க
தாமரைத் திருவடியில்  பரிமள மலரிட்டு
க்ஷீராபிஷேகம் செய்தோம் மஞ்சள் குங்குமமிட்டோம்

என்றும் அருளிடும் தாயே மாரியம்மா
சாரியாய் நோயுறு முன் சேய்களை காத்திடுவாய்
மன மகிழ்ந்திடுவாய் மங்களம் பொங்க வைப்பாய்
சிம்மவாகன சிங்காரி மாதே நீலாயதாக்ஷி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *