காதலுக்கான காலி இடங்கள்

0

குமரி சு. நீலகண்டன்

ஈருடல் ஓருள்ளம்,
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம்.. காதல்.. கனவு
எல்லாமே கல்யாணமாகி
ஆறே மாதத்தில்
போயே போச்சு.

அடுத்து அகத்துள் துயில்கிற
அசுரன் தலைக்குள் ஏறி
காதலைப் பிய்த்துத் தின்று
கர்ஜிக்கக் காட்டுப் போர்…..
மங்களமாய் விவாகரத்து…

அன்பு செய்ய
இங்கொரு இடம்
காலியாக இருக்கிறது.
காதலெனும் கவரி வீச
தகுதி உடையவர்கள்
யாரும் விண்ணப்பிக்கலாம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *