எமிலி டிக்கின்சன் கவிதைகள் – 32

மூலம்: எமிலி டிக்கின்சன்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
எமிலி டிக்கின்சன் கவிதைகள்-32: வாலாட்டும் நாய்க் குட்டி
வாலாட்டும் ஒரு நாய்க்குட்டி.
வேறாட்டம் எதுவும் அறியாது.
அதுபோல் நானும் ஒரு நாய்க்குட்டி
நினைவுக்கு வருவது ஒரு பையன்.
A little Dog that wags his tail
And knows no other joy
Of such a little Dog am I
Reminded by a Boy
நாள் முழுதும் விளையாட்டு
ஏதோர் காரணமும் இருக்காது
ஏனெனின், விளையாட்டுப் பிள்ளை
எனக்கு உறுதி எண்ணம் அப்படி
Who gambols all the living Day
Without an earthly cause
Because he is a little Boy
I honestly suppose —
பூனை மூலையில் கிடக்குது, அது
போராடும் நாள் மறந்து போச்சு
எலி இல்லை வாடிக்கைப் பிடிப்பில்
இப்போ விருப்பில்லா அணி வரிசையில்.
The Cat that in the Corner dwells
Her martial Day forgot
The Mouse but a Tradition now
Of her desireless Lot