ஔவை – 87

இன்று 87ஆம் பிறந்தநாள் காணும் தமிழறிஞர் ஔவை நடராஜன் அவர்களுடன் 2016ஆம் ஆண்டு நான் நிகழ்த்திய தொலைபேசி உரையாடல் இதோ. ஔவைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
கேட்டார்ப் பிணிக்கும் வகையில் உரையாற்றும் பேச்சாளர். எளிமையும் வலிமையும் இணைந்த அன்பாளர். சிறந்த சிந்தனையாளர். சிறப்புகள் பல வாய்ந்த ஒளவை நடராசன் அவர்கள், தமிழ் ஓலைச் சுவடிகள் சேகரிப்புக் குறித்து, சில கருத்துகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
உ.வே.சாமிநாதையருக்குப் பின்னால் ஓலைச் சுவடிகளிலிருந்து பதிப்பிக்கப்பெற்ற புதிய நூல் ஏதும் இருக்கிறதா என்ற அவரின் கேள்வி, ஆழ்ந்த சிந்தனைக்கு உரியது. 2011 மார்ச் 14 அன்று, சென்னை, தி.நகரில் உள்ள அவரின் அலுவலகத்தில் இந்த நேர்முகம் பதிவானது. அவருடனான குரல் நேர்காணலை, இங்கே கேட்கலாம்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)