திருப்பூவணப் புராணம் – பகுதி – (13)
கி.காளைராசன்
ஆறாவது
உற்பலாங்கி பதியை யடைந்த சருக்கம்
567 தற்பரத்துடன் றிகழ்சவுனகப்பெயர்
முற்றுணரருந்தவமுநிவகேட்டியாற்
சொற்றிடற்கரும்பரிசுத்தமேவிய
நற்கதைதன்னையாநவிற்றுவாமரோ
568 இம்மைநற்றவமுழந்தெம்பிரானிடத்
தம்மைதன்னடியிணையருச்சித்தேத்தியோர்
கொம்மைசேர்வரிமுலைக்கோதில்கொம்பனாள்
கைம்மைநீக்கியமணிகன்னிகைப்புனல்
569 முன்னருந்தவம்பலமுற்றியன்னைதன்
பொன்னடிக்கமலத்திற்பூசையாற்றிய
வன்னவள்காதையையறைதிசூதநீ
யென்னலுங்கேண்மினோவென்றியம்புவான்
570 துங்கபத்திரையெனுந்தூநதிக்கரை
தங்கியபுண்ணியகிராமந்தன்னில்வாழ்
பங்கயனனையகோபாலனென்றொரு
துங்கவேதியன்மறைக்குலத்திற்றோன்றினான்
571 அன்னவன்றன்னிடத்தவதரித்ததோர்
கன்னிமான்கன்னல்வேள்கணைக்கிலக்கனாள்
பொன்னுலகத்தினிற்புலவர்போற்றிட
மன்னியவுலகினில்வந்துதோன்றினாள்
572 முந்தைநாளிவளுறின்முகில்வணன்கடற்
செந்திருமாதினைச் சிந்தைகொண்டிடா
னந்துநான்முகனுநாமாதைநண்ணிடா
னிந்திரன்வேண்டிலனிந்திராணியை
573 கற்பகஞ்சேர்தருகாமவல்லியோ
கொற்றவில்வேளையாட்கொள்ளுந்தெய்வமோ
வெற்றியந்தணன்புரிமெய்த்தவங்கொலோ
மற்றவடன்னையான்மதிக்கற்பாலதோ
574 நிறையிருட்சைவலநீலமாமுகில்
குறைவில்சீர்க்கொன்றையின்கோலந்தாங்கியே
பிறையொடுபெருந்திருப்பிறங்கன்மேலணிந்
தறல்விரிபாளைசேரளகபந்தியாள்
575 கொம்மைசேரமுதநற்கோதிலாக்குளிர்
செம்மதிபோன்றொளிர்திருமுகத்தினாள்
வெம்மைநீடியபுகழ்வேனில்வேடிருக்
கைம்மிகுஞ்சிலைநுதற்கவினிலங்குவாள்
576 தர்மநற்றாழ்குழைதந்தபொற்புறு
மாமணியூசல்போல்வயங்குகாதினாள்
காமசங்கீதமேகலந்தகாமனூற்
பாமணமொழுகுசெம்பவளவாயினாள்
577 சேயுயர்விசும்புறுதிங்கள்போன்றொளிர்
வேயுறுநித்திலம்விளங்குமூரலாண்
மாயவனேந்தியவண்ணவால்வளை
யாயகந்தரத்தினிலமைந்தபூணினாள்
578 இனமிகுகயற்கண்மூண்டிகல்செய்யாமலே
துனிவழியடைத்துநேர்துலங்குதுண்டத்தாள்
புனமுறுபசுக்கழைபொருந்துகின்றதோட்
கனவளைதாங்கியகாந்தட்கையினாள்
579 கோதில்பூவணத்தினுங்கும்பகோணத்துங்
காதல்கூர்விண்ணவர்கரந்துதாங்கொணர்ந்
தாதிகாலந்தருமமுதகும்பமிப்
போதுசேர்ந்தனவெனப் பொலிந்தகொங்கையாள்
580 தூமணிகன்னிகைச்சுழிகொளுந்திமேன்
மாமணிவயிற்றுறுமயிரொழுங்கினாள்
காமருசிறப்புறுகலைவல்லோர்களு
மாமதியாலறிவருமருங்குலாள்
581 ஆர்ந்தமாமணிதிகழம்பொன்மேகலை
பாந்தளின்றொகுபணம்பரித்தவல்குலாள்
வார்ந்தநெட்டிலையொடுவயங்குபூங்குலை
சார்ந்திடுமரம்பைநேர்தருகுறங்கினாள்
582 கருதரியதாயகற்கடகந்தன்னைநேர்
தருமழகியமுழந்தாள்வயங்குவாள்
கிருதமாலையில்விளையாடுகின்றநற்
றிருமிகுமணிவரால்சேர்ந்தகாலினாள்
583 எண்ணுவமேயமுமிசைக்கநின்றெதிர்
நண்ணுவமானமுநடுவினாவினேர்
கண்ணுறநிறப்பவேள்கருத்தமைத்துடன்
பண்ணியபொற்றராசெனும்பாட்டினாள்
584 இரதிகாந்தன்கலையெழுதுபுத்தக
மருவியவிருபுறவடிவயங்குவா
ளருளுடனுரியபேடாடல்கொண்டிடும்
பரிபுரவொலிமிகுபதாம்புயத்தினாள்
585 நாதவேதம்பயினற்குலாதிப
காதல்கூரின்பநற்கற்பின்மேதகு
மாதராண்மலர்தலையுலகமாண்புற
வோதுமுற்பலாங்கியென்றுரைக்கும்பேரினாள்
586 இந்தநல்லுலகினர்யாருமேத்திடச்
சுந்தரமெய்யினிற்றுலங்கிநாட்குநா
ளந்தநன்மடநடையன்னமன்னவள்
சந்திரகலையெனத்தான்வளர்ந்தனள்
587 பங்கமோடன்னவட்பயந்துளோர்கடாந்
தொக்கிருந்துளங்களிதுளங்கவோர்நனாண்
மைக்கருங்கண்ணியைமாமணஞ்செயத்
தக்கவர்யாரெனத்தம்மிற்றேர்ந்தனர்
588 இன்னணந்தம்முளத்தெண்ணியெண்ணியே
யன்னவரிருவருமாயுங்காலையிற்
றன்னிகரந்தணனொருவன்றான்மகிழ்
மன்னியமணிக்கடைவாயில்சார்ந்தனன்
589 மன்றல்செய்விருப்புடைமறைவலாளன்முன்
சென்றவன்சொன்றியீகென்றுசெப்பலு
நன்றுசேரெழிலினைநாடித்தேவனென்
றொன்றியவுள்ளநின்றூசலாடினான்
590 பழகியநான்மறைபயிலுமந்தண
னழிவிலாப்பெருந்திருவழகுங்கோலமுங்
குழலுடன்யாவையுங்குறிப்பிற்கண்ணுறீஇக்
கழிபெருங்காதலான்கழறன்மேயினான்
591 மேவினையாரைநீமிக்கவன்புகூர்
யாவனின்றந்தையெங்கேகுகிற்றியென்
பாவையுமன்னமும்பரிந்துநல்குவேன்
மாவிரதீயுரைவழங்குகென்னவே
592 என்னலுமதற்கிசைந்தின்சொல்வாய்மையாற்
கன்னிசேருவகையங்கடற்குளித்தனன்
றன்னுணர்விழந்துரைதளர்ந்துதேறினன்
பின்னருந்தன்னுடன் பேசலுற்றனன்
593 மங்கலமவுட்கலியவிப்பிரன்றரு
திங்கள்போற்கலைமதிசேர்ந்தமைந்தன்யான்
றங்கியபிரமநற்சரியம்பூண்டுளேன்
பொங்குமாதவம்பலபுரியும்புந்தியேன்
594 அருமறையங்கமோராறுமாய்ந்துளேன்
குருவருளுடைமையேன்கோதினின்மகட்
டருதியேலென்கையிற்றகுவதாமென
வுரியமோனத்துடனுற்றிருந்தனன்
595 ஆங்கவன்மோனமோடிருந்தகாலையிற்
றாங்கரும்விருப்புடன்சார்ந்துதன்மனை
வாங்குவினுதலியைவரவழைத்தனன்
பாங்குடையந்தணன்பகர்தலுற்றனன்
596 நம்பெருந்தவத்தினானமதுகற்பகக்
கொம்பினைமணஞ்செய்வான்குறித்தொரந்தண
னிம்பரினடைந்தனனிருக்கின்றானென
வம்புலாமுலையவண்மகிழ்ந்துவாழ்த்தினாள்
597 அங்கதுபோழ்தினினரியகேதனந்
தங்குபூம்பந்தர்கள்சமைத்துச்சார்ந்தநற்
பங்கமில்பல்லியந்துவைப்பப்பாவைதன்
மங்கலமணவணிமரபினாற்றினார்
598 அறுசுவையடிசிலந்தணர்கட்காற்றியே
மறைவழிமணமகன்மலர்ப்பதங்கழீஇ
யறையிருகரங்களினளிக்கமாதொடுங்
குறைவில்சீர்மனைமிசைக்கொண்டுசேர்த்தினார்
599 தாவில்சீர்க்கன்னிகாதானநல்குவான்
காவிசேர்தடங்கணாள்காண்டகப்புனல்
பூவுறழ்செங்கையிற்புகாமுனன்குயிர்
மேவியமணமகன்வியோகமாயினான்
600 ஆண்டகையுயிர்பிரிந்தவனிசேர்தலு
மாண்டனனென்றுநன்மாதர்மைந்தர்கள்
காண்டலுநடுங்கிமெய்கலங்கியேங்கியே
யேண்டகவெடுத்தணைத்தினிதியம்பினார்
601 பொற்கொடிமடந்தையிப்போதுபாக்கியம்
பெற்றிலளென்றுதாம்பேசிப்பன்முறை
மற்றவட்புல்லியேவாய்புலம்பிநின்
றற்புதமெய்தினரரற்றுகின்றனர்
602 அந்தணன்மணப்பிரேதத்தையன்பினான்
முந்தைநூல்விதிவழிமுறையிற்கொண்டுதான்
றந்திடுமந்தியச்சடங்கிழைத்தபின்
வந்தனர்தம்பதிவழிக்கொண்டேகினார்
603 பளபளத்திளகிநற்படீரகுங்குமக்
களபமுங்கியமுலைக்காமர்கன்னியுந்
தளரிடையன்னையுந்தந்தையும்பெருங்
கிளைஞருநெஞ்சகங்கிலேசமுற்றனர்
604 பின்னர்முத்திங்கடான்பெயர்ந்துசெல்லவக்
கன்னியைமணஞ்செய்வான்கருதிச்சேர்ந்தரோ
வன்னவந்தணனுநீரங்கைதாங்குமுன்
றென்னிலைசேருயிர்துறந்துபோயினான்
605 மங்கையர்க்கரசியைமாமணஞ்செய்வான்
றுங்கமோடணைகுநர்தம்மைத்தூக்கினோர்
பங்கமிலாதநற்பத்திரட்டியோர்
தங்களாருயிர்தனைத்தணந்துபோயினார்
606 மற்றவள்பொருட்டிவர்மாய்ந்தபின்னரே
பெற்றருளன்னையும்பிறங்குதாதையும்
வெற்றுடம்பாகவிண்விரைந்துபோயினார்
பொற்றொடிதான்றனிபுலம்பிவைகினாள்
607 நீடியகிளைஞரானிந்தையுற்றனள்
கூடியேயணைதருகொழுநர்க்கூட்டிடும்
பீடுறும்பெரும்புனற்பிறங்குநற்றலந்
தேடியேயெண்டிசாமுகமுஞ்சென்றனள்
608 ஓதுநல்லுண்டியுமுறக்கமுங்கடிந்
தேதமிறீர்த்தங்களெங்குமாடியே
போதவிழ்பொழிறிகழ்பூவணந்தனிற்
காதலினடைந்தனள்காமர்கன்னிகை
609 படர்ந்தெரியுமிழ்கொடும்பாலைசேர்நில
நடந்திடும்வெம்மையானன்புனற்றரு
தடந்தெரிகுற்றதிதாகமோடுறா
வடந்திகழ்பூண்முலைமடந்தைகண்டனள்
610 பண்டருமறையவர்பன்னசாலையும்
புண்டரீகச்செழும்பொய்கையும்புக
ழெண்டகுமிருந்தவரியைந்திலங்குபூந்
தண்டலைசூழ்மணிகுண்டந்தன்னையே
611 வெள்ளிடைவெயிலின்மெய்வெதும்பிவேர்வர
வுள்ளநொந்தடிபெயர்த்தியங்கியேயுராய்த்
தெள்ளுதீம்புனன்மிகப்பருகித்தேக்கியே
யள்ளனீர்த்தடங்குடைந்தாடினாளரோ
612 தடமடுமூழ்கியதபோபலத்தினா
னிடைவிழுநாளறவிருந்தவம்புரி
தொடர்வுறுமருள்விடுசோதிதுன்றுமெய்
முடிவறுகாலவமுநியைக்கண்டனள்
613 பன்னிருகான்முறைபடிபஞ்சாங்கமாய்
மன்னியபொன்னடிவணங்கிவீழ்ந்தெழீஇ
யன்னவள்கழறலோடணுகலின்றியே
நின்னருள்புரியெனநேர்நின்றாளரோ
614 சின்மயமாகியசிவானுபூதிசேர்ந்
தந்நிலைதிரிந்தவனன்னமென்னடைக்
கன்னிகைதன்னைநேர்கடைக்கண்டாக்கியே
முன்னுறுகாதலான்முநிவன்கூறுவான்
615 சீர்மிகுமாதராய்சேர்கநன்குநீ
யார்கொலோவெங்கிருந்தேகுகிற்றியா
னேர்தருகணவன்யார்நிற்பயந்தவன்
பேரெதிங்கடைந்ததென்பேசுவாயென்றான்
616 அகங்குதுகலிப்பவேயரியமாதவன்
மிகுந்தபேரன்புடன்விளம்பக்கேட்டுள
மகிழ்ந்தனள்பாக்கியவதியும்யானெனாத்
திகழ்ந்தசெம்பவளவாய்திறந்துசொல்லுவாள்
வேறு
617 நெடுங்காலந்தவமுழந்துநீள்சடையோனருள்படைத்துநீண்டபார்மேற்
படர்ந்தேறும்பல்புகழ்சேர்பங்கயனையனையதவப்படிவமென்னா
வுடன்சேருமுயிர்த்துணைவருயிர்துறந்துமுயிர்சுமந்திங்குழலுமிக்க
கொடும்பாவியெனதுநிலைகூறரிதாயினுஞ்சிறிதுகூறக்கேண்மோ
618 தொன்மறையோர்புகழ்ந்தேத்துந்துங்கபத்திரையெனுமோர்தூநதிப்பான்
மன்னுமதன்கரையின்கண்மருவுபுண்ணியகிராமத்துவாழ்வோன்
கொன்னவிலந்தணர்கோமான்கோபாலன்றந்தகுலக்கொடியேனானே
யிந்நிலத்திற்பிறந்தவன்றேயெல்லோருமேசுதற்கிங்கிலக்காய்நின்றேன்
619 இங்கதுவுமிசைக்குவன்கேளெனையளிப்பவெனைப்பயந்தவெந்தையந்தோ
மங்கலமாமறைவிதியின்மணவாளர்செங்கையினின்வழங்கும்வேலைத்
துங்கமுறுமைந்நான்குதுணைவராருயிர்துறந்துதுறக்கஞ்சேர்ந்தா
ரங்கதனாலடியேனுமருங்கணவற்பெறவேண்டியடைந்திட்டேனால்
620 முன்னைவினையின்பயனோவிம்மையில்யான்செய்தபவமூண்டதேயோ
கன்னியெனப்பேர்படைத்துங்கலங்கழிந்தகாரிகைபோற்கலங்காநின்றேன்
றன்னிகராகின்றவெழிறாங்குமடமங்கையர்கடங்கண்முன்ன
ரென்னேயோவென்னேயோவின்னமும்யானுயிர்சுமந்திங்கிருக்கிறேனால்
621 மிக்கார்வத்துடன்கௌரிவிரதமநுட்டித்துமுன்னைவிதியினாலே
யெக்காலுமிழைத்திடுமுத்தியாபனநீயிழப்பவிமூதியைந்ததென்று
முக்காலமுதலியனமுறையானேமுற்றறிந்துமொழியுமந்தத்
தக்கார்கொளம்முநிவன்ஞானக்கண்ணாலுணர்ந்துசாற்றினானே
622 அலர்கதிர்வெய்யோன்றீர்த்தத்தங்கணன்றனருளதனலாடலாலே
நிலவலயந்தனிற்செய்தநீண்டகொடும்பாதகமுநீங்காநின்று
மலிபுகழ்சேரித்தீர்த்தமான்மியத்தினான்மிகுமங்கலமுமாகு
முலகமெலாம்பணிந்தேத்தவுயர்தவநீபுரியும்வகையுரைப்பக்கேண்மோ
623 பைந்தடஞ்சேர்தருமுட்டாட்பங்கயப்பொற்பூவினொடுற்பலங்கைக்கொண்டு
மந்திரதந்திரம்பொருந்தவாலுகவேதிகைசதுரம்வகுத்தமைத்தே
யந்தரியையாவாகித்தக்கற்பவிதிபூசையாற்றினின்பாற்
சுந்தரிநேர்வந்துநிற்பொற்சுமங்கலியந்தந்தருளுஞ்சுடர்வேற்கண்ணாய்
624 என்றுமுநிவரனிசைப்பவேந்திழைநலிருங்கணவற்பெறுவான்வேண்டி
நன்றிதெனமகிழ்ந்தந்தநன்முநிவனாச்சிரமநணுகிப்பாங்கா
லொன்றியவன்புடன்விதிநின்றுமையாடன்றிருநோன்பையுவந்துநோற்றே
யன்றுடனுத்தியாபனஞ்செய்தருங்கணவன்றனையருளினடைந்தாளன்றே
625 இத்தகையதீர்த்தத்தினினிதாடவிடர்ப்பிறவிக்கடற்படாவே
யுத்தமநற்குலத்தினில்வந்துற்பவித்தவுலகமெலாமுவப்பினாலே
நித்திலத்தையொத்தநகைநேரிழைதன்வைதவ்வியநீக்கலாலே
பத்தியுடன்மடவாரும்படிந்தாடக்கடவர்தினம்பரிவிற்பாங்கால்
வேறு
626 இடபநல்லிரவிதன்னிலெழிறருமிந்துவாரத்
துடனிகழ்நடுநாளந்தவோடையினாடிமன்னுங்
கடனுறுமிக்ககாமக்கலங்கழிமகளிரானோர்
தொடர்பினால்வருபிறப்பிற்சுமங்கலியாகிவாழ்வார்
627 கோதின்மங்கலையாய்க்காதற்கொழுநரைக்கூடுகின்ற
மாதராரந்நீராடின்மகிழ்தருமகப்பேறுண்டாங்
காதலிற்கலந்தகாமர்கன்னியர்கணவற்சேர்வார்
மேதகுத்தியாபனத்தால்விரதநற்பலங்களுண்டாம்
வேறு
628 அற்பினோங்குசீரரனடிக்கண்வாழற்புதந்தருமருடவத்தினா
னுற்பலாங்கிதன்கதைபடித்துளோருய்த்துணர்ந்துதஞ்செவிவழிக்கொள்வோர்
கற்குமாண்பினோர்கலியகத்தரோகட்டவெங்கொடும்பவமகற்றியே
மற்றையாண்டையோர்வளமைபெற்றுமேல்வைத்திடுங்கதிமருவுகிற்பரே
உற்பலாங்கி பதியையடைந்த சருக்க முற்றியது
ஆகச்செய்யுள் 628
*****
ஏழாவது
பாற்கரபுரச் சருக்கம்
629 தன்னுயர்தவத்தின் மிக்கசவுநகமுனிவவன்பான்
மன்னியவுற்பலாங்கிவண்கதைவகுத்துரைத்தாம்
பன்னுபாற்கரபுரப்பேர்படைத்ததுபகர்வமென்னா
வின்னருட்சூதன்வேதவியாதனையிறைஞ்சிச் சொல்வான்
630 காசினியிடத்து மேலாங்காசிபன்றனக்குமிக்க
வாசிலாவழகுபூத்தவணியிழையதிதியென்பா
டேசுறநிவந்துவானிற்செறியிருள்விழுங்கியெங்கும்
வீசுசெங்கதிரோன்றன்னை மேதினிவிளங்கவீன்றாள்
631 எல்லையில்புகழ்சேர்தொட்டாவீன்றருளிலவச்செவ்வாய்
முல்லைசேர்வனமுருந்தின் முகிழ்நகைவயங்குகொங்கை
நல்லசஞ்சையேயென்னுநண்ணருங்கற்பகஞ்சேர்
வல்லியைப்பரிதிவானோன் மாமணம் புரிந்தான்மன்னோ
632 குன்றெனத்திரண்டெழுந்தகுங்குமக்குவவுத்தோளின்
மன்றலந்தொடைசேர்நல்வைவச்சுதன்றனையும்வன்கட்
டன்றனிப்பகடூர்வெற்றித்தருமராசனையுநீலந்
துன்றுமெய்யமுனையென்னுந்துடியிடைதனையுமீன்றாள்
வேறு
633 பேசியவந்தப்பெண்கொடியென்னும்ப்ரபையென்பா
டேசுறுசெங்கதிரைத் தொழுதெய்வமெனக்கொள்வாள்
வீசுசெழுங்கதிர் வெம்மையினாற்றலண்மேவாளாய்
நேசமுடன்றன்னிழறானாகநினைந்திட்டாள்
634 அந்தநிழற்றனதங்கமதாகவணங்கேநீ
யிந்தவிருத்தமியம்பலையென்னவிசைத்திட்டே
சிந்தைமகிழ்ந்துசெழுங்கதிரோனுளஞ்சேமித்து
வந்துரைதந்தனடந்தையிடத்தினில்வரலாறே
635 தன்மகடன்னிலைகண்டுவெகுண்டுதடந்தோளான்
வன்னமயிற்பெடையன்னகுலக்கொடிமாதேகே
ணின்னுறுகேள்வனையன்றியெனில்லிடைநீசேற
லுன்னகமிந்நிலையொல்லையினேகெனவுரைசெய்தான்
636 அம்மொழிகேட்டலுமக்கணமங்ஙனகன்றந்த
வெம்முனைவேல்விழிமின்மனைமேவிடவெருவுற்றே
கொம்மைகொள்பேடுறுகொய்யுளையுருவங்கொண்டந்தச்
செம்மைதரும்புகழுத்தரகுருவது சேர்கின்றாள்
637 சேர்ந்தலர்செங்கதிர்வானவன் வெம்மைதிளைப்பாளாய்ச்
சார்ந்தலரும்பொழினின்றுமுதிர்ந்துலர்சருகார்ந்து
கூர்ந்தகடுங்கதிரோனையுளத்திற்கொண்டந்த
வார்ந்தகருங்குழன்மாதுதவஞ்செய்துவருநாளில்
638 வார்தருபூண்முலைவாள்விழியாமடமயில்செய்த
தேர்வரிதாகியபட்டிமையிறையுந்தேரானா
யார்கலிவேலைமுகட்டினில்வந்தெழுமழல்வெய்யோன்
றார்குழன்மேவியசாயையையன்பிற்சார்ந்துற்றான்
639 மருவியசாவருணீயெனுமெட்டாமநுவேந்தன்
றரைபுகழ்தரவருமொருசனியீசன்றம்மோடும்
பரவருமிகுபடவரவகலல்குற்பணியின்சொ
லிருள்பருகியகுழலுறுபுத்திரியையுமீன்றாளாய்
640 முன்னவடானருண்மூவர்கடம்மையுமுனிவுற்றே
பின்னவடானருண்மைந்தர்கள் பாலருள்பெருகுற்றா
ளன்னதுகண்டுமறிந்திலன்முன்னவனனுசன்றான்
புன்மதிகொண்டுபுகன்றகடுஞ்சொல்பொறானாகி
641 தாயெதிர்வந்தவனையிடறிடவொருதாடூக்கி
நீயிதுசெய்யநினைந்தனைநின்றாண்முரிகென்றே
யாயவனங்கணகன்றிடவவ்வந்தகனைத்தா
னேயெனுமுன்னமிசைத்தனளந்தவிருஞ்சாபம்
642 மாதுரைதந்துமுனிந்துவழங்கியவன்சாபந்
தாதையுணர்ந்திடவந்தகன்வந்தது சாற்றக்கேட்
டேதமின்மைந்தர்களேதுசெய்கிற்பினுமீன்றோர்க
டீதுறுமாமொழிசெப்பிடினங்கதுதீதாமால்
643 குரும்பைமுலைக்குயின்மென்மொழியிட்டகொடுஞ்சாபம்
பொருந்துபுழுக்களருந்தசையுண்டுனபொற்பாதந்
திருந்துகவென்றருண்மைந்தனொடங்குரைசெய்தற்பி
னருந்ததிநேர்தருகற்பினணங்கையடைந்தானால்
644 அந்தக்காலத்தலர்கதிர்கொண்டேயகல்வானில்
வந்திப்புவியில்வல்லிருள்சீக்குமார்த்தாண்டன்
சிந்தைக்கெட்டாச்சித்திரமதனைத்தேரானாய்ச்
சந்தக்கொங்கைத்தையலைநோக்கித்தான்சொல்வான்
645 மேயநம்மைந்தர்கண்மூவர்கடம்மைவெகுண்டிந்தச்
சேய்களையன்பினுவந்துரைசெய்தது செப்பென்பா
னீயெனலும்ப்ரபையன்றெனவஞ்சினணேர்நின்ற
சாயையெனும்படிசாற்றினள்கற்பின்றலைநின்றாள்
646 பொங்கியெழுஞ்சுடர்நின்னிலைகண்டுபொறாளாகி
யங்கவள்வைத்தெனையன்பினகன்றனளத்தன்பாற்
செங்கதிர்வீசுதிகழ்ந்தவருட்கடல்சேரெந்தா
யிங்கடியன்பிழைநீபொறுத்தாண்டருளெனநின்றாள்
647 தன்னிகர்சாயையெனுங்கொடிசாற்றியமாற்றங்கேட்
டந்நிலையின்கணறைந்திலனொன்றுமருஞ்சாப
முன்னரிதாகியபொங்கொளியாவுமொடுக்கிச்சொற்
றென்னுலகம்புகழ்மாதுலன்மாமனைசேர்ந்தானால்
648 எல்லொளிவானவனென்னொருமடமானெங்குற்றா
ளொல்லையினீயிதுசொல்லெனவுத்தரகுருவுற்றே
யல்லடுநின்கதிர்வெம்மையினாற்றலளாயோடிப்
பல்குதவந்தனையாற்றினளென்னலுமப்பானு
649 குன்றலிலாவியல்கொண்டதொராண்மாவாயேகித்
துன்றியமனையைக்கண்ணுறவெண்ணீர்த்துளிதானு
மொன்றியவிருதொளைநாசிகைவழிதரவொழுகுற்றே
பின்றொடர்காலைமருத்துவரிருவர்பிறந்தார்கள்
650 அன்னநல்வேலையினலர்கதிர்வெய்யவனன்பாலே
நின்னையடைந்தனனின்கணவன்யானீயஞ்சே
லென்னலுநற்றவமெய்தலினிரவியொடின்புற்றாண்
மின்னெறிவிரதமிழைத்தலின்வெம்மையின்வீடுற்றாள்
651 வீடுற்றந்தவிளங்கிழையுந்திகழ்வெய்யோனுங்
கூடுற்றன்பின்முயங்குபுதன்பதிகொண்டேய்வா
னாடுற்றன்பினனாகதலத்திடைநண்ணுங்காற்
றேடுற்றங்கணடைந்தனர்பண்ணவர்திரளோடும்
652 தேவர்கள்கந்தருவத்தவரேனையர்செகமெங்கு
மேவுமநுக்கிரகந்தருவெம்மைவிருப்பாலே
யோவறுசெங்கதிர்வானவன்மேவவுவப்பிற்கூய்ப்
பூவுலகம்புகழ்பொங்கிடவாசிபுகன்றார்கள்
653 சட்டகமன்னியசர்ச்சரையைத்திகழ்சாணைக்கட்
கட்டழகுற்றிடமற்றையவும்பர்கடைந்தொப்ப
மிட்டனரப்பொடிவீழ்தலுமத்தலமெங்குந்தான்
புட்பவனம்பெயர்பெற்றதுபாற்கரபுரமென்றே
654 அப்பொடிவீழ்பதியெத்தனையுண்டத்தனைசீரார்
மெய்ப்பதியிற்றிருமேவியபூவணமேலாகுஞ்
செப்பருமப்புகழ்சேயிழையாரொடுதிகழ்வெய்யோ
னிப்புவனங்களியாவும்வழுத்தவியைந்துற்றான்
655 உத்தமமாகியவித்தலமுற்றுநலுபவாசம்
வித்தகநல்விரதஞ்செபமுண்டநமெய்த்தானம்
பத்தியினாலிவைபண்ணிலநந்தம்பலமாகுஞ்
சத்தியமாமிதுசத்தியஞானதவத்தீர்காள்
656 சுத்தமெய்ஞ்ஞானசுகோதயமாநீர்த்துறைமூழ்கித்
தத்துவசுத்திபிறந்திடுசவுநகதன்னேரா
மித்திகழ்பிரமகைவர்த்தத்தெழுபானைந்தாகு
மத்தகுபூவணமான்மியமறைதருமத்யாயம்
657 கருதரும்புகழ்மேவுபாற்கரபுரம்புகழ்காதைதான்
பருகுசெந்தமிழ்மேன்மையாற்பரவுபண்பொடுபாடுவோ
ரருளுடன் செவியூடுகேட்டவையுளங்கொடுதேர்குவோர்
திருமிகுந்திடுதேவரூர்தினமிருந்தரசாள்வரே
பாற்கரபுரச்சருக்கமுற்றியது
ஆகச்செய்யுள் 657
*****
எட்டாவது
சர்வபாவமோசனச்சருக்கம்
658 சுத்தமாம்புராணந்தேர்ந்தசூதநன்மாதவத்தோய்
சித்திரமணிகுண்டத்திற்றிசைமுகன்றீர்த்தந்தன்னிற்
பத்தியினடைந்தியாரும்படிந்திடுகாலபேத
மித்திறனன்றிமாதோவிசைக்குவதின்னுமுண்டால்
659 பல்பவமகற்றுந்தானம்பண்ணிடுங்காலம்பாங்காற்
றொல்லைநூல்விதிவழாமற்றொடங்கிடுஞ்சாந்தியன்றி
மல்லலோங்கெழில்சேர்தீர்த்தமாடவல்வினைகண்மாய்க்கு
மெல்லையில்பலங்கடம்மையெடுத்துநன்கியம்புகென்றான்
660 மோனஞானந்தெரிந்தமுழுதுலகிறைஞ்சியேத்த
லானவானந்தவெள்ளத்தழுந்திடுமந்தணாள
வூனமதகலச்செய்திங்குரைக்குவமோர்கவென்னாத்
தானருள்கூர்ந்தசூதன்சவுனகற்குரைப்பதானான்
661 மேடநற்றிங்கடன்னின்மிக்கபூரணையினன்பாற்
கூடியமவுனத்தோடுவடுகனைப்பணிந்துகொன்றை
சூடியகடவுடன்னைத்தொழுதிராக்கடையில்விண்ணோர்
தேடருமணிகுண்டத்திற்சேர்ந்தவர்பலத்தைச் சொல்வாம்
662 வேதியற்கோறலாதிவெங்கொடும்பாவமாயப்
பாதகமனைத்துமங்ஙன்பாறிடும்பரிவின்முன்ன
மோதிடுமந்தநாளினொளிகிளர்மணிகுண்டத்தி
னேதமிலந்நீர்மூழ்கினின்பமாமுத்திசேர்வார்
663 அக்கிநிட்டோமமாதியரியநல்வேள்வியாற்ற
மிக்கசெம்பொன்கொடுத்தோர்மேவியபலன்களுண்டாம்
பக்கமோடரிதினேனும்பகர்ந்திடுமந்தநாளிற்
றொக்கசீர்மணிகுண்டஞ்சேர்தோயத்திற்றோயமாதோ
664 கடுங்கொடுங்குட்ட நோயன்களத்துரோமத்தன்மிக்க
கொடும்பிணியாளனந்நீர்குடித்திடனொளிக்கும்வெந்நோய்
திடம்படுமிடபமன்னுந்திங்களிற்சௌம்யவாரத்
தடைந்ததின்மூழ்கிற்செம்பொனரும்பெருங்களவுநீங்கும்
665 இந்த நீர்மணிகுண்டத்தினின் புறக்கருதியன்பாற்
புந்திகன்றனக்குப்புந்திபொருந்திடப் பொலங்கொள்பைம்பொன்
வந்துநன்கியைந்ததானமகிழ்ச்சியின் வழங்கினோர்கட்
கந்தகன்றன்னைக்காண்டலருந்தண்டமிரண்டுமின்றாம்
666 மன்னியமைந்தரானோர்வைகாசிவிசாகந்தன்னிற்
பன்னுநான்மறையோர்கையிற்பரவுதன்பிதிர்கடம்பாற்
றுன்றுவெம்பசிதணிப்பான்றூயவெட்டயிர்பான்மாடந்
தன்னிகர்குளந்தயங்குந்தக்கசித்ரான்னத்தோடும்
667 அரியனபொருளினட்டவறுசுவையுண்டிமிக்க
பரிமளஞ்சுகந்தநன்பூப்பாதுகைகுடைபூணாதி
யுரிமையினுலோபியாதங்குதவிடிற்பிதிர்கள்வான்றோ
யிரவிவெண்மதிநாட்காறுமின்பத்தினியைவரன்றே
668 தந்தைதாய்வர்க்கத்தோடுந்தகும்பெருங்கிளைஞரோடுஞ்
சுந்தரந்துதைந்திலங்குந்தூயநல்விமானநூறு
முந்துறவந்துசூழமுடுகியேகடிதினேகி
யெந்தைசேர்கயிலைவெற்பினிடத்தினிதமர்வரன்றே
669 தன்னிகர்மாகத்திங்கடக்கமந்திரிசிங்கத்தின்
மன்னுமாமாகந்தன்னின்மாமணியோடைசேர்ந்த
வன்னதீர்த்தத்தினாடியரும்பெருந்தானமீவோர்
பன்னரும்பவங்கள்யாவும்பற்றாத்துடைப்பரன்றே
670 தனைநிகர்தநுர்மாதத்திற்சதுர்முகன்றீர்த்தந்தன்னி
லினைதலொன்றின்றிநெஞ்சத்தினியதேநுவைவதைத்தோர்
மனமொழிமெய்களொன்றிமன்னொருமாதமூழ்கி
னனையதோர்காலையந்தவரும்பவமனைத்துநீங்கி
671 தக்கபன்மணிப்பதாகைத்தவளநல்விமானத்தேறி
மிக்கசீர்விளங்குமந்தவிரிஞ்சனதுலகமெய்தித்
தொக்கசெம்மணிகள்வானிற்சுடரவன்வெயின்மறைத்தொண்
டிக்கிலகொளிபரப்புஞ்சித்திரமண்டபத்தில்
672 நிறைமதிபுரையுமந்தணித்திலக்கொத்துமாலை
முறைமுறைநிவந்தமாடமுகப்பினின்ஞாங்கர்த்தூங்கக்
குறைவறுசெம்பொற்சோதிகுலவுபூங்கொடிகளாட
மறுகுசேர்நிரைகடோறுமகரதோரணம்வயங்க
673 வேதநற்புராணமாதர்மிக்கவெண்டிக்குப்பால
ரோதுகந்தருவர்வீணையுயர்தவச்சநகராதி
யேதமின்முநிவர்போற்றவீரேழிந்திரர்கள்காலங்
கோதறவாழ்ந்துபின்னர்க்குவலயத்தரசராவார்
674 கார்த்திகைத்திங்கடன்னிற்கார்த்திகைநாளிற்றிங்கள்
சீர்த்திகழ்கலையீரெட்டுஞ்செறிந்தநாள்குறைந்தநாண்மெய்க்
கீர்த்திகொள்க்ரகணகாலங்கெடுமதிதிங்கள்சேர்நா
ளார்த்தசுந்தரப்பொன்சேயிலருங்கலையொடுங்குமந்நாள்
675 வந்திடுமிவற்றையிந்தமலர்தலையுலகந்தன்னிற்
புந்திகொளறிவின்மிக்கோர்புட்கரயோகமென்ப
ரந்தநீர்மையினாலோரொன்றாயிரங்க்ரகணமொக்குஞ்
சிந்தைகூர்ந்தந்நீராடிற்சிவபுரியதனிற்சேர்வார்
676 தவலருஞ்சிவநிசிக்கட்சந்நிதிமன்னுதீர்த்தத்
தவலமதகலவுன்னியாடியேயன்பின்மிக்க
புவனநன்கியாரும்போற்றும் பூவணங்கோயில்கொண்ட
சிவபிரான்றனைவில்வத்திற்சிறப்புடன்பூசைசெய்து
677 உவமனிலந்தநாளினுண்டியோடுறக்கநீத்துப்
பவமறப்புராணம்பன்னிற்பகர்சிவநிசியதொன்றா
னுவலிலந்நியதலத்தினூற்றொருகோடிகொண்ட
சிவநிசிவதியிற்பூசை செய்திடும்பலத்தைச்சேர்வார்
678 அச்சிவசிநிக்கணானைந்தரியபஞ்சாமுதத்தோ
டிச்சையாங்குசோதகம்மோடெட்டயிலாதிகொண்டு
நிச்சயமணிகுண்டத்தினீரினாட்டினர்பதத்தை
நச்செயிற்றநந்தனாலுநவிற்றநாவசைக்கவற்றோ
679 ஆயினுமரிதுவந்ததறைகுவனவர்சாலோக
மேயபின்சாரூபத்தின்மேவியேவிளங்குங்கார்த்தி
கேயனோடொத்தநந்திகேயனுக்கிணையதாகி
யோய்விலாயிரஞ்சதுர்நல்லுகஞ்சிவலோகத்தேய்வார்
680 செய்யவொண்பட்டினாலுந்திகழ்ந்தவெண்பட்டினாலுந்
துய்யபூங்கதலிபூகமாதியதொங்கறன்னா
லைதிகழ்பூவணத்தெம்மடிகளையலங்கரித்தோர்
பையழகொழுகுந்துத்திப்பன்னகாபரணனாவார்
681 ஐம்பெரும்பாதகங்களகற்றிடுமஞ்செழுத்தை
யிம்பரினேன்றதீக்கைக்கீனனாயிருந்தானேனு
நண்பினான்வெறுப்புத்தன்னானவின்றிடினோர்கால்வானத்
தும்பரின்மேலாயன்னோனுறுபவமொழிப்பனன்றே
682 தேறிநன்கிருகாற்செப்பிற்றிகழ்திருக்கயிலைசேர்வா
னூறுடனெண்காலன்பினுவன்றிடில்வீடுசேர்வான்
மாறிலாச்சதவுருத்தரமந்திரஞ்செபிக்கின்மூழ்கிற்
கூறருநன்றிகொன்றகொடும்பவங்குலையுமன்றே
683 உருத்திரன்றனக்குமிக்கோங்கொளியுருத்திராக்கமாலை
யருத்தியினளித்தோரக்கவணிமணியொன்றினுக்குத்
திருத்தகுசிவலோகத்திற்றிகழ்தருவருடம்வாழ்ந்து
பரப்பிரமத்தைச் சேர்வர்படர்புவியிடத்துமன்னோ
684 எப்பொருளேனுமுள்ளத்தின்பமுற்றதனையன்பா
லப்பொருடன்னை மேலாமரன்றனக்காகவென்றே
தப்பறவளிப்போரிந்தத்தடங்கடலுடுத்தபார்மே
லொப்பறவாழ்ந்துபின்னருயர்பரமுத்திசேர்வார்
685 ஓதுமிவ்வத்தியாயமுறுபவமொழிக்குமேலோர்
பூதலத்துபதேசஞ்செய்பொருடருசாரமாகுங்
காதலினோதுவோர்க்குக்கருதியதளிக்குமென்று
மேதகவுரைத்தவற்றைவேட்கையின்விளக்கக்கேட்போர்
686 மேதினியிடத்தின்மேவுமிக்கதீர்த்தங்கள்யாவுங்
காதலிற்சென்றடைந்துகலந்தவைபடிந்தோராவர்
போதநன்குணர்ந்தமேலோர்புகன்றிடும்வேள்வியாவு
மாதரவதனாற்செய்தவரும்பலமடைவரன்றே
687 இந்தநற்பூவணத்தினினிதுவாழ்கிற்போர்தம்மை
யந்தரதேசநின்றுமடைந்தவரிவர்க்கண்டாங்கே
முந்துறுபவங்கடீர்ந்துமுத்தியையடைவரென்றாற்
புந்திகொண்டமர்வோர்வீடுபொருந்துதல்புகலல்வேண்டா
688 கூனலம்பிறைமிலைச்சுகோடீரபாரத்தெந்தை
யூனமிலுமையாள்கேட்பவுரைத்தருளுபதேசத்தை
யானதோர்காலைதன்னிலாறுமாமுகங்கொடுற்ற
ஞானவானதனைக்கேட்டுநந்திபானவின்றான்மன்னோ
689 நந்திதான்கேட்டவற்றைநற்சநற்குமாரற்கோத
வந்தநற்சனற்குமாரனருள்வியாதற்குரைப்பச்
சுந்தரவியாதனெற்குத்தொகுத்துபதேசஞ்செய்ய
முந்துறக்கேட்டவற்றைமொழிந்தனனுமக்கியானே
690 நுண்ணியபொருளாய்மேலாய்நுவலருமுலகுக்கெல்லாம்
புண்ணியமளிக்குமிந்தப்பொருடனைவிரும்பிக்கேட்டோற்
குண்மகிழ்ந்துரைத்ததின்றீங்குமக்கியான்றொகுத்துரைத்தேன்
கண்ணுதற்பெருமான்றந்தகணிப்பருங்கருணையாலே
691 ஈதுமக்கிறைவன்ஞானமெய்துதற்கேதுவாகு
மாதலாலருண்மைந்தர்க்குமரியநன்மாணாக்கர்க்குங்
காதல்கூர்பவர்க்குமிந்தக்கருதருபுராணந்தன்னை
யோதுதியறிவின்மேலோயுடங்கியைந்தெந்தஞான்றும்
வேறு
692 அழகியமின்னன்னையெனுமானந்தவல்லியுடனமர்ந்துதோன்றுஞ்
செழுமலர்க்கொன்றையினறும்பூந்தேன்றுளிக்குஞ்செஞ்சடிலசேகரன்சேர்
பொழிறிகழ்பூவணக்காதைபுகல்பிரமகைவர்த்தபுராணந்தன்னி
னெழுதரியமறைமுநிவவீரெழுபத்ததாறாமத்தியாயமாகும்
வேறு
693 இந்தவத்தியாயம்படித்துளோரின்பமுற்றுநாளுஞ்செவிக்கொள்வோர்
சிந்தையிற்கொடேசெஞ்சொல்செப்புவோர் செங்கரத்தினானன்குதீட்டுவோர்
மைந்தர்பெற்றமாமைந்தர்சுற்றவேமங்கலத்தினான்மண்டலத்தில்வாழ்ந்
தந்தமற்றசீரண்டர்பொற்பினீடம்பொன்மிக்கவானங்கிருப்பரே
சர்வபாவமோசனச்சருக்கமுற்றியது
ஆகச்செய்யுள் 693
*****