திருப்பூவணப் புராணம் – பகுதி – (23)
கி.காளைராசன்
6.3. சுந்தரர் பாடியது
பண் – இந்தளம்
திருச்சிற்றம்பலம்
திருவுடை யார்திரு மால ய னாலு
முருவுடை யாருமை யாளையொர் பாகம்
பரிவுடை யா ரடை வார்வினை தீர்க்கும்
புரிவுடை யாருறை பூவண மீதோ. (1)
எண்ணி யிருந்து கிடந்து நடந்து
மண்ண லெனாநினை வார்வினை தீர்ப்பார்
பண்ணிசை யார்மொழி யார்பலர் பாடப்
புண்ணிய னாருறை பூவண மீதோ. (2)
தெள்ளிய பேய்பல பூதம வற்றோடு
நள்ளிரு ணட்டம தாட ந வின்றோர்
புள்ளுவ ராகு மவர்க்கவர் தாமும்
புள்ளுவ னாருறை பூவண மீதோ. (3)
நிலனுடை மான்மறி கையது தெய்வக்
கனலுடை மாமழு வேந்தியோர் கையி
லனலுடை யா ரழ கார்தரு சென்னிப்
புனலுடை யாருறை பூவண மீதோ. (4)
நடையுடை நல்லெரு தேறுவர் நல்லார்
கடைகடை தோறிடு மின்பலி யென்பார்
துடியிடை நன்மட வாளொடு மார்பிற்
பொடியணி வாருறை பூவண மீதோ. (5)
மின்னனை யாடிரு மேனிவி ளங்கவொர்
தன்னமர் பாகம தாகிய சங்கரன்
முன்னினை யார்புர மூன்றெரி யூட்டிய
பொன்னனை யானுறை பூவண மீதோ (6)
மிக்கிறை யேயவ றுன்மதியால் விட
நக்கிறை யேவிர லாலிற வூன்றி
நெக்கிறை யேநினை வார்தனி நெஞ்சம்
புக்குறை வானுறை பூவண மீதோ (7)
(பாடல் 8-9 கிடைக்கப்பெறவில்லை)
சீரின் மிகப்பொலி யுந்திருப் பூவண
மாரவி ருப்பிட மாவுறை வானை
யூர னுரைத்த சொன்மாலைகள் பத்திவை
பாரி லுறைப்பவர் பாவ மறுப்பரே (10)
திருச்சிற்றம்பலம்
*****
6.4. திருவாசகத்தில் திருப்பூவணம்
திருப்பூவணத்திற்கு வடக்கே சுமார் 18 கி.மீ. தூரத்தில் உள்ளது திருவாதவூர். இவ்வூரில் பிறந்தவர் மாணிக்கவாசகர். அதனால் அவருக்குத் திருவாதவூரர் என்னும் பெயர் அமைந்தது. அவருடைய கல்வி, கேள்வி, ஒழுக்கம், அறிவு, ஆற்றல் ஆகிய சிறப்புக்களைப் பற்றிக் கேள்வியுற்ற பாண்டிய மன்னன் அவரைத் தனது தலைமை மந்திரியாக நியமனம் செய்தான். அவரது ஆட்சித் திறமையைக் கண்டு “தென்னவன் பிரமராயன்” என்ற சிறப்புப் பட்டத்தையும் வழங்கினான்.
மாணிக்கவாசகர் பொருட்டு இறைவன் நேரில் எழுந்தருளி நரிகளைப் பரிகளாக்கியும், பின்னர் பரிகளை நரிகளாக்கியும் திருவிளையாடற் புரிந்தருளினான்.
(1) மாணிக்கவாசகப் பெருமான் கீர்த்தித் திருவகவலில்
“இந்திர ஞாலம் காட்டிய இயல்பினாய் போற்றி
உத்தரகோச மங்கை வித்தக வேடா போற்றி
பூவண மதனிற் தூவண மேனி காட்டிய தொன்மையோய் போற்றி
வாதவூரில் பாதச் சிலம்பொலி காட்டிய பண்பா போற்றி
திருவார் பெருந்துறை செல்வா போற்றி்
என்று திருப்பூவணநாதரின் தொன்மைகளையும் அருளும் தன்மையையும் பாடியுள்ளார்.
(2) “அரனே போற்றி, அந்தணர்தம் சிந்தையானே போற்றி் – என்று ஆரம்பிக்கும் திருமுறைத்திரட்டில்,
“… …
வெண்காட்டில் உறைவா போற்றி
விடைகாட்டும் கொடியா போற்றி
சக்கரம் மாலுக்கு ஈந்தாய் போற்றி
சலந்தரனைப் பிளந்தாய் போற்றி
பாலொடு நெய்தயிர் பலவும் ஆடுவாய் போற்றி
… …”
“தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி
திருமாலுக்கு ஆழி அளித்தாய் போற்றி
சாவாமே காத்து என்னை ஆண்டாய் போற்றி
“மைசேர்ந்த கண்டம் உடையாய் போற்றி
மாலுக்கும் ஓர் ஆழி ஈந்தாய் போற்றி
பொய்சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி்
“விண்ணுலகம் ஈந்தவிறல் போற்றி
மண்ணின்மேல் காளத்தி போற்றி கயிலைமலை போற்றி
சதுர்முகன் தந்தைக்குக் கதிர்விடு கடவுள்
ஆழி கொடுத்த பேரருள் போற்றி்
சலந்தரன் தடிந்த தண்டம் போற்றி
தாதையை எறிந்த வேதியச் சிறுவற்குப் பரிகலம்
கொடுத்த திருவுளம் போற்றி்
“சிறுவனுக்கு அழியா வாழ்நாள் அளித்து அருள் செய்தி போற்றி
சலந்தரன் உடல் கீண்ட சக்கரப் படையாய் போற்றி
வலம்தரு அதனை மாயோன் வழிபடக் கொடுத்தாய் போற்றி
அலர்ந்த செங்கமலப் புத்தேள் நடுச் சிரம் அரிந்தாய் போற்றி்
என்று திருப்பூவணநாதர் பெருமாளுக்குச் சக்கராயுதம் வழங்கிய செய்தியைப் பாடியுள்ளார். இச்செய்தி, திருப்பூவணப் புராணத்திலே, சிதம்பர உபதேச சருக்கத்திலே விரிவாக எடுத்துக் கூறப் பெற்றுள்ளது.
(3) போற்றித் திருவகவலில்,
“… … …
திருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி!
பொருப்பமர் பூவணத்தரனே போற்றி!
அருவமும் உருவமும் ஆனாய் போற்றி!
… … … ” என்று திருப்பூவணநாதரைப் போற்றி வணங்கியுள்ளார்.
*****
6.5. கருவூர்த் தேவர் பாடியது
ஒன்பதாம் திருமுறை
பண் – பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
திருவருள் புரிந்தா ளாண்டு கொண் டிங்ஙன்
சிறியனுக் கினயது காட்டிப்
பெரிதருள் புரிந்தா னந்தமே தருநின்
பெருமையிற் பெரியதொன் றுளதே
மருதர சிருங்கோங் ககின்மரஞ் சாடி
வரைவளங் கவர்ந்திழி வைகைப்
பொருதிரை மருங்கோங் காவண வீதிப்
பூவணங் கோயில்கொண் டாயே. (பாடல் – 144)
பாம்பணைத் துயின்றோ னயன்முதற் றேவர்
பன்னெடுங் காலநிற் காண்பா
னேம்பலித் திருக்க வென்னுளம் புகுந்த
வெளிமையை யென்றுநான் மறக்கேன்
தேம்புனற் பொய்கை வானளவாய் மடுப்பத்
தெளிதரு தேறல்பாய்ந் தொழுகும்
பூம்பணைச் சோலை யாவண வீதிப்
பூவணங் கோயில்கொண் டாயே. (பாடல் – 145)
கரைகட லொலியிற் றமருகத் தரையிற்
கையினிற் கட்டிய கயிற்றா
லிருதலை யொருநா வியங்கவந் தொருநா
ளிருந்திடா யெங்கள்கண் முகப்பே
விரிதிகழ் விழவின் பின்செல்வோர் பாடல்
வேட்கையின் வீழ்ந்தபோ தவிழ்ந்த
புரிசடை துகுக்கு மாவணவீதிப்
பூவணங் கோயில்கொண் டாயே. (பாடல் – 146)
கண்ணியன் மணியின் குழல்புக் கங்கே
கலந்துபுக் கொடுங்கினேற் கங்ங
னுண்ணியை யெனினு நம்ப நின்பெருமை
நுண்ணிமை யிறந்தமை யறிவன்
மண்ணியன் மரபிற் றங்கிருண் மொழுப்பின்
வண்டினம் பாடநின் றாடும்
புண்ணிய மகளி ராவண வீதிப்
பூவணங் கோயில் கொண் டாயே. (பாடல் – 147)
கடுவினைப் பாசக் கடல்கடந் தைவர்
கள்ளரை மெள்ளவே துரந்து
னடியிணை யிரண்டு மடையுமா றடைந்தே
னருள்செய்வா யருள்செயா தொழிவாய்
நெடுநிலை மாடத் திரவிருள் கிழிக்க
நிலைவிளக் கலகில்சா லேகம்
புடைகிடந் திலங்கு மாவண வீதிப்
பூவணங் கோயில்கொண் டாயே. (பாடல் – 148)
செம்மனக் கிழவோ ரன்பு தாஎன்றுன்
சேவடி பார்த்திருந் தலச
வெம்மனங் குடிகொண் டிருப்பதற் கியானா
ரென்னுடை யடிமைதானி யாதே
யம்மனங் குளிர்நாட் பலிக்கெழுந் தருள
வரிவைய ரவிழ்குழற் சுரும்பு
பொம்மென முரலு மாவண வீதிப்
பூவணங் கோயில் கொண் டாயே. (பாடல் – 149)
சொன்னவின் முறைநான் காரண மு ணராச்
சூழல்புக் கொளித்தநீ யின்று
கன்னவின் மனத்தென் கண்வலைப் படுமிக்
கருணையிற் பெரியதொன் றுளதே
மின்னவில் கனக மாளிகை வாய்தல்
விளங்கிளம் பிறைதவழ் மாடம்
பொன்னவில் புரிசை யாவண வீதிப்
பூவணங் கோயில்கொண் டாயே. (பாடல் – 150)
பூவணங் கோயில் கொண்டெனை யாண்ட
புனிதனை வனிதை பாகனை வெண்
கோவணங் கொண்டு வெண்டலை யேந்தும்
குழகனை யழகெலா நிறைந்த
தீவணன் றன்னைச் செழுமறை தெரியு
திகழ்கரு வூரனே னுரைத்த
பாவணத் தமிழ்கள் பத்தும்வல் லார்கள்
பரமன துருவமா குவரே. (பாடல் – 151)
திருச்சிற்றம்பலம்
திருப்பூவணம் முருகன் மீது
6.6. அருணகிரி நாதர் பாடிய திருப்புகழ்
திருப்புகழ் பாடல் எண். 550
தனத்தான தத்தத் தனதானா
தனத்தான தத்தத் தனதானா
அறப்பாவை அத்தற் கருள்பாலா
அளித்தாது வெட்சித் திருமார்பா
குறப்பாவை அற்பிற் புணர்வோனே
குலத்தேவ வர்க்கப் பரிபாலா
மறப்பாத கத்துற் றுழல்வேனோ
மலர்த்தாள்வ ழுத்தக் க்ருபையீவாய்
சிறப்பான முத்திக் கொருவாழ்வே
திருப்பூவ ணத்திற் பெருமாளே
திருப்புகழ் பாடல் எண். 551
தானனதான தானனதான தானனதான தனதான
வானவராதி யோர்சிறைமேவ மாவலியேசெய் திடுசூரன்
மார்பிருகூற தாய்விடவாரி வாய்விடவேலை விடுதீரா
கானவர்பாவை காதலனான காசணிபார தனமார்பா
காலனைமோது காலகபால காளகளேசர் தருபாலா
தேனமர்நீப மாலைவிடாத சேவகஞான முதல்வோனே
தீயகுணாதி பாவிநினாது சேவடிகாண அருள்வாயே
போனகசாலை யாதுலர்வாழ வீதிகடோறும் நனிமேவு
பூவணமான மாநகர்வாழு நாதகுகேச பெருமாளே
(காளகளேசர் = விசத்தைக் கண்டத்திலுடையவர்
போனகம் = அன்னம்)
திருப்புகழ் பாடல் எண். 552
தந்தத்தத் தானன தானன
தந்தத்தத் தானன தானன
தந்தத்தத் தானன தானன தனதானா
பந்தப்பொற் பாரப யோதர
முந்தச்சிற் றாடைசெய் மேகலை
பண்புற்றுத் தாளொடு வீசிய துகிலோடே
பண்டைச்சிற் சேறியில் வீதியில்
கண்டிச்சித் தாரொடு மேவிடு
பங்குக்கைக் காசுகொள் வேசையர் பனிநீர்தோய்
கொந்துச்சிப் பூவணி தோகையர்
கந்தக்கைத் தாமரை யாலடி
கும்பிட்டுப் பாடிசை வீணையர் அநுராகங்
கொண்டுற்றுப் பாயலின் மூழ்கிய
சண்டிச்சிச் சீயென வாழ்துயர்
குன்றப்பொற் பாதக்ரு பாநிதி அருள்வாயே
அந்தத்துக் காதியு மாகியு
மந்திக்குட் டானவ னானவ
னண்டத்தப் பாலுற மாமணி ஒளிவீசும்
அங்கத்தைப் பாவைசெய் தேயுயர்
சங்கத்திற் றேர்தமி ழோதிட
அண்டிக்கிட் டார்கழு வேறினர் ஒருகோடி
சந்தத்திக் காளுநி சாசரர்
வெந்துட்கத் தூளிப டாமெழ
சண்டைச்சொற் றார்பட வேவயில் விடுவோனே
தங்கச்சக் ராயுதர் வானவர்
வந்திக்கப் பேரரு ளேதிகழ்
தம்பப்பொற் பூவண மேவிய பெருமாளே
*****
பரஞ்சோதி முனிவர் அருளிய
திருவிளையாடற் புராணம்
36. இரசவாதஞ் செய்த படலம்
(கலி நிலைத்துறை)
திருப்பூவணத் தலத்தின் பெருமை
1856 வரதன் மீனவன் படையிடை வந்துநீர்ப் பந்தர்
விரத னாகிநீ ரருத்திய வினையுரை செய்தும்
பரத நூலிய னாடகப் பாவையா ளொருத்திக்
கிரத வாதஞ்செய் தருளிய வாடலை யிசைப்பாம்.
1857 பருங்கை மால்வரைப் பூழியன் பைந்தமிழ் நாட்டின்
இரங்கு தெண்டிரைக் கரங்களா லீர்ம்புனல் வையை
மருங்கின னந்தன மலர்ந்தபன் மலர்கடூய்ப் பணியப்
புரங்க டந்தவ னிருப்பது பூவண நகரம்
1858 எண்ணி லங்குறை சராசர மிலிங்கமென் றெண்ணி
விண்ணி னாள்களும் கோள்களும் விலங்குவ தியாக்கைக்
கண்ணி னான்கதிர் முதற்பல கடவுளர் பூசை
பண்ணி வேண்டிய நல்வர மடைந்ததப் பதியில்
பொன்னனையாளின் தன்மை
1859 கிளியு ளார்பொழிற் பூவணக் கிழவர்தங் கோயில்
றளியு ளார்தவப் பேறனா டாதுகு பூந்தார்
அளியு ளார்குழ லணங்கனா ளந்தரத் தவர்க்குங்
களியு ளார்தர மயக்குறூஉங் கடலமு தனையாள்
1860 நரம்பி னேழிசை யாழிசைப் பாடலு நடநூல்
நிரம்பு மாடலும் பெண்ணல நீர்மையும் பிறவும்
அரம்பை மாதரை யொத்தன ளறனெறி யொழுகும்
வரம்பி னாலவர் தமக்குமே லாயினாண் மன்னோ
1861 ஆய மாதர்பேர் பொன்னனை யாளென்ப வவடன்
நேய வாயமோ டிரவிரு ணீங்குமு னெழுந்து
தூய நீர்குடைந் துயிர்புரை சுடர்மதிக் கண்ணி
நாய னாரடி யருச்சனை நியமமு நடாத்தி
1862 திருத்தர் பூவண வாணவரைச் சேவித்துச் சுத்த
நிருத்த மாடிவந் தடியரைப் பொருளென நினையுங்
கருத்த ளாயருச் சித்தவர் களிப்பவின் சுவையூண்
அருத்தி யெஞ்சிய தருந்துவா ளமூதவ ணியமம்
1863 மாத ரிந்நெறி வழங்குநாண் மற்றவ ளன்பைப்
பூத லத்திடைத் தெருட்டுவான் பொன்மலை வல்லி
காத னாயகன் றிருவுருக் காணிய வுள்ளத்
தாத ரங்கொடுத் தருளினார் பூவணத் தையர்
1864 ஐயர் தந்தபே ரன்புரு வாயினாண் மழுமான்
கையர் தந்திரு வுருவினைக் கருவினாற் கண்டு
மைய கண்ணினாள் வைகலும் வருபொரு ளெல்லாம்
பொய்யி லன்புகொண் டன்பர்தம் பூசையி னேர்வாள்
1865 அடியர் பூசனைக் கன்றியெஞ் சாமையா லடிகள்
வடிவு காண்பதெப் படியென்று மடியிலச் செழியற்
கொடிவில் பொற்கிழி நல்கிய வள்ளலை யுன்னிப்
பிடிய னாளிருந் தாளமூ தறிந்தனன் பெருமான்
சிவபெருமான் சித்தர் வடிவம் கொண்டு வருதல்
1866 துய்ய நீறணி மெய்யினர் கட்டங்கந் தொட்ட
கையர் யோகபட் டத்திடைக் கட்டினர் பூதிப்
பையர் கோவண மிசையசை யுடையினர் பவளச்
செய்ய வேணிய ரங்கொரு சித்தராய் வருவார்
1867 வந்து பொன்னனை யாண்மணி மாளிகை குறுகி
அந்த மின்றிவந் தமுதுசெய் வாரொடு மணுகிச்
சிந்தை வேறுகொண் டடைந்தவர் திருவமு தருந்தா
துந்து மாளிகைப் புறங்கடை யொருசிறை யிருந்தார்
1868 அமுது செய்தருந் தவரெல்லா மகலவே றிருந்த
அமுத வாரியை யடிபணிந் தடிச்சிய ரைய
அமுது செய்வதற் குள்ளெழுந் தருள்கென வுங்கள்
அமுத னாளையிங் கழைமினென் றருளலு மனையார்
1869 முத்த ராமுகிழ் வாணகை யல்குலாய் முக்கண்
அத்த ரானவர் தமரெலா மமுசெய் தகன்றார்
சித்த ராயொரு தம்பிரான் சிறுநகை யினராய்
இத்த ராதலத் தரியரா யிருக்கின்றா ரென்றார்
சித்தமூர்த்தி பொன்னனையாளை மெலிந்த காரணம் யாதெனல்
1870 நவம ணிக்கலன் பூத்தபூங் கொம்பரி னடந்து
துவரி தழ்க்கனி வாயினாள் சுவாகதங் கிலாவன்
றுவமை யற்றவர்க் கருக்கிய மாசன முதவிப்
பவம கற்றிய வடிமலர் முடியுறப் பணிந்தாள்
1871 எத்த வஞ்செய்தே னிங்கெழுந் தருளுதற் கென்னாச்
சித்தர் மேனியும் படிவெழிற் செல்வமு நோக்கி
முத்த வாணகை யரும்பநின் றஞ்சலி முகிழ்ப்ப
அத்தர் நோக்கினா ரருட்கணா லருள்வலைப் பட்டாள்
1872 ஐய உள்ளெழுந் தருளுக வடிகணீர் ரடியேன்
உய்ய வேண்டிய பணிதிரு வுளத்தினுக் கிசையச்
செய்ய வல்லனென் றஞ்சலி செய்யவுண் ணகையா
மைய னோக்கியை நோக்கிமீ னோக்கிதன் மணாளன்
1873 வடியை நேர்விழி யாய்பெரு வனப்பினை சிறிதுன்
கொடியை நேரிடை யெனவிளைத் தனையெனக் கொன்றை
முடியி னானடி யாரமென் முகிழ்முலைக் கொடிதாழ்ந்
தடிய னேற்குவே றாயொரு மெலிவிலை யையா
1874 எங்க ணாயகர் திருவுருக் காண்பதற் கிதயந்
தங்கு மாசையாற் கருவுருச் சமைத்தனன் முடிப்பேற்கு
கிங்கு நாடொறு மென்கையில் வரும்பொரு ளெல்லாம்
உங்கள் பூசைக்கே யல்லதை யொழிந்தில வென்றாள்
சித்த மூர்த்திகள் சிவனடியார் பெருமை கூறல்
1875 அருந்து நல்லமு தனையவ ளன்புதித் திக்கத்
திருந்து தேனென விரங்குசொற் செவிமடுத் தையர்
முருந்து மூரலாய் செல்வமெய் யிளமைநீர் மொக்குள்
இருந்த வெல்லையு நிலையில வென்பது துணிந்தாய்
1876 அதிக நல்லற நிற்பதென் றறிந்தனை யறத்துள்
அதிக மாஞ்சிவ புண்ணியஞ் சிவார்ச்சனை யவற்றுள்
அதிக மாஞ்சிவ பூசையு ளடியவர் பூசை
அதிக மென்றறிந் தன்பரை யருச்சனை செய்வாய்
1877 உறுதி யெய்தினை யிருமையு முன்பெயர்க் கேற்ப
இறுதி யில்லவன் றிருவுரு வீகையாற் காணப்
பெறுதி யாகநின் மனைக்கிடைப் பித்தளை யீயம்
அறுதி யானபல் கலன்களுங் கொணர்தியென் றறைந்தார்
1878 ஈயஞ் செம்பிரும் பிரசிதங் மென்பவும் புணர்ப்பாற்
றோயம் பித்தளை வெண்கலந் தராமுதற் றொடக்கத்
தாயும் பல்வகை யுலோகமுங் கல்லென வலம்பத்
தேயுஞ் சிற்றிடை கொண்டுபோய்ச் சித்தர்முன் வைத்தாள்
சித்தமூர்த்திகள் இரசவாதம் புரிதல்
1879 வைத்த வேறுவே றுலோகமு மழுவுழை கரந்த
சித்த சாமிக ணீற்றினைச் சிதறினர் பாவித்
தித்தை நீயிரா வெரியிலிட் டெடுக்கினன் பொன்னாம்
அத்தை நாயகன் றிருவுருக் கொள்கென வறைந்தார்
1880 மங்கை பாகரை மடந்தையு மிங்குநீர் வதிந்து
கங்குல் வாயமு தருந்தியிக் காரிய முடித்துப்
பொங்கு காரிருள் புலருமுன் போமெனப் புகன்றாள்
அங்க யற்கணா டனைப்பிரி யாரதற் கிசையார்
1881 சிறந்த மாடநீண் மதுரையிற் சித்தர்யா மென்று
மறைந்து போயினார் மறைந்தபின் சித்தராய் வந்தார்
அறைந்த வார்கழ லலம்பிட வெள்ளிமன் றாடி
நிறைந்த பேரொளி யாயுறை நிருத்தரென்று அறிந்தாள்
பொன்னனையாள் உலோகங்களைத் தீயிலிட்டுப் பொன்னாதல்
1882 மறைந்து போயினா ரெனச்சிறி தயர்ச்சியு மனத்தில்
நிறைந்த தோர்பெருங் கவற்சியை நீக்கினா ரென்னச்
சிறந்த தோர்பெரு மகிழ்ச்சியு முடையளாய்ச் சித்தர்
அறைந்த வாறுதீப் பெய்தன ளுலோகங்க ளனைத்தும்
1883 அழல டைந்தபி னிருண்மல வலிதிரிந் தரன்றாள்
நிழல டைந்தவர் காட்சிபோ னீப்பருங் களங்கங்
கழல வாடக மானதா லதுகொண்டு கனிந்த
மழலை யீர்ஞ்சொலாள் கண்டனள் வடிவிலான் வடிவம்
1884 மழவிடை யுடையான் மேனி வனப்பினை நோக்கி யச்சோ
அழகிய பிரானோ வென்னா வள்ளிமுத் தங்கொண் டன்பிற்
பழகிய பிரானை யானாப் பரிவினாற் பதிட்டை செய்து
விழவுதேர் நடாத்திச் சின்னாள் கழிந்தபின் வீடு பெற்றாள்
1885 நையநு[ண் ணிடையி னாளந் நாயகன் கபோலத் திட்ட
கையுகிர்க் குறியுஞ் சொன்ன காரணக் குறியுங் கொண்டு
வெய்யவெங் கதிர்கால் செம்பொன் மேனிவே றாகி நாலாம்
பொய்யுகத் தவர்க்குத் தக்க பொருந்துரு வாகி மன்னும்
இரசவாதம் செய்த படலம் முற்றிற்று.