தமிழறிஞர் ஒளவை நடராசன் மறைந்தார்

0

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர், சிறந்த சொற்பொழிவாளர், தமிழறிஞர் ஒளவை நடராசன், 2022 நவம்பர் 21 அன்று சென்னையில் மறைந்தார். இது குறித்து அவர் மகன்கள் கண்ணன், அருள், பரதன் ஆகியோர் இணைந்து விடுத்துள்ள செய்தி:

எந்தையும் இலமே !

ஆக்கமும் – ஊக்கமுமாக இருந்த எந்தையார் வையம் போற்றும் பத்மஸ்ரீ முனைவர்
ஒளவை நடராசன். ( 24 – 4 – 1936 ) எங்களை தத்தளிக்க விட்டு (21.11.2022)
வானில் கலந்தார் ! இனி என்ன செய்வோம்!

எந்தையே !
நந்தா விளக்கனைய நாயகனே !!
உங்கள் பிரிவு தாங்கொணாப் பிரிவாகும் …

எப்பாரும் எப்பதமும் எங்ஙனமும்
நாங்கள் சென்று உங்கள்
திருப்பெயரை நவின்றே வளர்ந்தோம் – வளர்வோம் !

அப்பா – நாங்கள் கேட்டு அருள் புரிதல் வேண்டும்

ஆற்றொணாத் துயருடன்
கண்ணன்
அருள்
பரதன்.
21.11.2022 திங்கட்கிழமை.
மாலை 7.50 மணிக்கு

ஒளவை நடராசன் மறைவுக்கு அண்ணாகண்ணன் இரங்கல்:

மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று எங்கே சென்றது? அறிஞர் ஒளவை நடராசன், அழகுத் தமிழால், மதுர மொழியால், நயம் கூட்டிய நாவரசர். அலட்டாமல், அதிர்ந்து பேசாமல், அரங்கை நிமிர வைத்த அன்பாளர். மக்கள் மனங்களை ஆண்ட மாண்பாளர். ராஜா ராஜா என என்னையும் இளையோர் பலரையும் வாயார அழைத்தவர். என் மேல் அன்பைப் பொழிந்தவர். ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி.

ஒளவை நடராசன் அவர்களின் மறைவுக்கு வல்லமை மின்னிதழ், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.