தாடண்டர் நகர் பொங்கல் விழா

சென்னை, சைதை, தாடண்டர் நகரில் புத்தாண்டு, பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது. கரகாட்டம், பறையிசை, சிலம்பம், சுருள்வாள், மான்கொம்பு, குத்துச் சண்டை, கோலப் போட்டி எனத் தமிழர் கலைகளின் பெருவிழாவாக நடைபெற்றது.
தாடண்டர் நகர் பொங்கல் விழாவில் சைதை சட்டமன்ற உறுப்பினரும் தமிழகத்தின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன், இதில் பங்கேற்றுச் சிறப்பித்தார். மாரத்தான் வீரரான அவருக்கு வீர விளையாட்டுகள் மூலமாக வரவேற்பு அளித்தனர். இந்தப் பொங்கல் விழாவிலிருந்து சில காட்சிகள் இதோ.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)