அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி: எழுச்சிமிகு கணித்தமிழ்ப் பயிலரங்கம்

அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரியில் இன்று கணித்தமிழ்ப் பயிலரங்கம் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் நா.வெங்கடரமணன், துணை முதல்வர் முனைவர் பா.மகாவீர், புலத் தலைவர் முனைவர் ம.ம.ரம்யா, தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் தாமரைச்செல்வி, தமிழ்த் துறைப் பேராசிரியர் கோதண்டராமன் ஏழுமலை, முனைவர் ஜெ முத்துச்செல்வன் நாவை, முனைவர் மங்கையர்க்கரசி உள்ளிட்ட தமிழ்ப் பேராசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஆய்வகத்தில் தமிழ்த் துறையின் இளங்கலை மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுப் பயிற்சி பெற்றனர். இந்த நல்வாய்ப்பினை நல்கிய பேராசிரியர், முனைவர் கோதண்டராமன் ஏழுமலை அவர்களுக்கும் கல்லூரி நிர்வாகத்தினருக்கும் நன்றி.

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *