ஆன்மீக அலைகள் நெஞ்சிலடித்த வேளை

0
IMG-20250714-WA0030

சக்தி சக்திதாசன்

வேல்ஸ் காமாத்தனின் மலைகளில் ஒரு ஆன்மிக நாளும், நினைவுகளும்

2025 ஜூலை 13ஆம் தேதியான ஒரு ஞாயிறு காலை, எமது உள்ளங்களைக் கவர்ந்த ஒரு வழிபாட்டுப் பயணம் மீண்டும் தொடங்கியது.

ஐக்கிய இராச்சியத்தின் தெற்கு வேல்ஸ் பகுதியில், காமாத்தன் அருகே உள்ள Llanpumsaint எனும் சிறிய கிராமத்தில், இயற்கையின் மடியில் அமைந்துள்ளது ஸ்கந்தவேல் ஆசிரமம்.

அருமையான மலைக்குன்றின் நீர்வெளிக்கருகே அமைந்திருக்கிறது.

இயற்கையின் மடியிலும் ஆன்மிக ஒளியிலும் மிளிரும் இந்த ஆலயம், ஒரு ஆச்சிரமத்தின் பகுதியாகவும் அமைந்துள்ளது.

ஸ்கந்தவேல் ஆலயம் என்பது வெறும் ஒரு கோவில் அல்ல.

அது பல்லின ஒற்றுமையின் உயிரோட்டம். இங்கு பூஜைகளை நடத்தும் அர்ச்சகர்கள் வெவ்வேறு இனங்களையும் மதங்களையும் சேர்ந்தவர்கள்.

அவர்களின் பக்தி, முருகனின் மீது கொண்ட அன்பு, அவர்களது பஜனை பாடல்களில் வெளிப்படுகிறது.

முருகனின் அனுகிரகத்தையே நேராக உணரச் செய்கின்றன.

தூய்மையான வள்ளி-தேவயானி சமேத சண்முகப் பெருமான் சந்நிதியில் நாங்கள் நின்ற அந்தக் கணம், மரபுக்கும் பக்திக்கும் இடையே ஒரு பாலமாக இருந்தது.

நாங்கள் இங்கு வந்து போய்க் கொண்டிருப்பது கடந்த 40 ஆண்டுகளாகும்.

இந்த ஆலயம் எங்களுக்குப் புதிதல்ல. கடந்த நான்கு தசாப்தங்களாக நாங்கள் இதன் பக்தர்களாக இருந்து வருகிறோம்.

இறந்துபோன என் பெற்றோர் இப்பக்தி பாதையில் என்னுடன் பயணம் செய்த நாட்களும் மறக்க முடியாதவை.

அவர்கள் உயிருடன் இருந்த காலத்தில் பலமுறை அழைத்துச் சென்ற இந்தத் தரிசனங்கள், எங்கள் குடும்பத் தழுவல்களை ஆழப்படுத்தின.

நண்பர்கள், உறவுகள் எம்மோடு இணைந்து அங்கு வந்தது வாழ்வின் பல பரிமாணங்கள்

வேறு நண்பர்களுடனும், உறவினர்களுடனும் சேர்ந்து இந்த ஆழமான ஆன்மிக அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறேன்.

ஒவ்வொரு பயணமும் வெவ்வேறு உருமங்களைக் கொண்டாலும், அந்த கோவிலின் அமைதி,

ஆலய ரீதிகள் மற்றும் வாசல் தாண்டியதும் ஏற்படும் சாந்த உணர்வுகள் எப்போதும் ஒரே மாதிரியாகவே இருந்தன.

இந்த ஆலயத்தின் குருவாக இருந்து இறைபதமடைந்தவரைப் பற்றி சிறிது பார்ப்போம்.

1929ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்த குரு ஸ்ரீ சுப்ரமணியம், ஒரு சிங்கள பௌத்த தந்தையும் தமிழ் இந்து தாயும் கொண்ட குடும்பத்தில் வளர்ந்தார்.

அவரது தாயார், ஆசரப்பா, ஒரு புகழ்பெற்ற தெய்வீகத் தரிசனவாளி.

சிறு வயதிலேயே, குரு தமது ஆன்மீக வழியை உணர்ந்தார்.
ஏழு வயதில் “சுப்ரமணியம்” என்ற பெயரைத் தாமாகவே ஏற்றுக்கொண்டார், இது முருகனின் அருளின் அடையாளமாக அமைந்தது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, குரு ஐரோப்பாவைச் சுற்றிப் பயணித்து லண்டனில் ஒரு மலர் கடையை நடத்தினார்.

ஆனால், இரவுகளில் அவர் தியானம், யோகா, மற்றும் பஜனை கற்றுத்தந்தார்.

இதுவே அவரது ஆலயம் “Community of the Many Names of God” எனும் ஆன்மீகக் குழுவாக வளர உதவியது.

1962ஆம் ஆண்டு, இலங்கையில் உள்ள பதுளை முருகன் கோவிலில் தியானம் செய்தபோது, மூன்று தலை கொண்ட நாகம் வடிவில் முருகன் தோன்றினார்.

குருவிடம் “எதை வேண்டுகிறாய்?” எனக் கேட்டபோது, அவர் பணமில்லாத, மத எல்லையற்ற ஒரு வழிபாட்டுத் தலம் மேற்கத்திய உலகில் உருவாக வேண்டும் என்ற ஆசையைத் தெரிவித்தார்.

அந்த தரிசனத்தின் பின், ஒரு புனித வேல் மற்றும் முருகன் முர்த்தி அவருக்கு வழங்கப்பட்டது.

இவை ஆன்மீக சக்தியின் களஞ்சியமாக அமைந்தன, பின்னர் உருவான ஆசிரமத்திற்கு ஆதாரமாக இருந்தன.

1973ஆம் ஆண்டு, குரு ஸ்ரீ சுப்ரமணியம், லண்டனில் இருந்த சிறிய கோவிலை வேல்ஸ் நாட்டின் Carmarthen அருகே உள்ள Llanpumsaint கிராமத்திற்கு மாற்றினார்.

இங்கு 22 ஏக்கர் நிலத்தில் அமைந்த ஒரு பழைய பண்ணை வீட்டை வாங்கி, அதனை “ஸ்கந்தவேல்” எனப் பெயரிட்டார்.

அங்கு முதலில் முருகன் ஆலயம் உருவாக்கப்பட்டது. பி

இவை அனைத்தும் பல்லின ஒற்றுமையை, தியானத்தை, மற்றும் சாத்வீக சேவையை மையமாகக் கொண்டவை.

இவரின் தத்ஜ்துவங்களாக

மத எல்லைகள் இல்லாமல், தெய்வீக அனுபவத்தை நேரடியாக உணர வேண்டும்
பணமில்லாத சேவை, தியானம், மற்றும் பக்தி
அனைத்து உயிர்களும் தெய்வீகத்தின் பிரதிபலிப்புகள்
பசுமை, பரிவு, மற்றும் கருணை

என்பன அமைந்தன.

ஸ்கந்தவேல் ஆசிரமம் இன்று 100,000க்கும் மேற்பட்ட பக்தர்களை ஆண்டுதோறும் வரவேற்கிறது.

இது மதம் கடந்த ஆன்மீக மார்க்கத்தின் ஒரு புனிதக் கதவாக விளங்குகிறது.

13.07.2025 அன்று, என் மனைவியுடன் மீண்டும் அந்த ஆலய வாசலை அடைந்த போது, கடந்த காலங்கள் புறப்பட்டு வந்தன.

பூஜையின் ரீதிகள், பக்தர்களின் ஒத்த ஒலி, குரல்களில் நின்ற மந்திரங்கள்—இவை அனைத்தும் ஆவி தொடும் அனுபவமாக அமைந்தன.

அந்த நாள் ஒரு சாதாரண ஞாயிறு இல்லை, அது ஆன்மாவின் கொண்டாட்டம்.

பழமையான தமிழ் பஜனைகள், வேத மந்திரங்கள், மற்றும் மேற்கத்திய இசைத் தொனிகளுடன் கலந்த பஜனைகள்—இவை அனைத்தும் ஒரு ஆன்மிக இசைத் திருவிழாவாகவே உணரப்படுகின்றன.

முருகன் பூஜையின் போது, அர்ச்சகர்கள் பாடும் பஜனைகள் மனதைக் கவரும் வகையில் அமைந்துள்ளன.

வார இறுதிகளில், முருகன் பூஜை நேரடி ஒலிபரப்பாக நடைபெறுகிறது,

இதில் பஜனை, மந்திரங்கள், ஆரத்தி அனைத்தும் மனதைக் கவர்ந்திழுக்கும் மந்திரங்கள்.

இந்த பல்லின பஜனை அனுபவம், முருகனின் “அறம் வளர்த்த நாயகன்” என்ற தன்மையை உலகமெங்கும் பரப்பும் ஒரு பாலமாக உள்ளது.

பூஜைக்குப் பின் வழங்கப்படும் உணவு, சாத்வீக முறையில் தயாரிக்கப்பட்ட எளிமையான உணவாக அமைகிறது.

சாதம், பருப்பு, காய்கறிகள், பழங்கள்—இவை அனைத்தும் பசுமை உணவாக, பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

உணவின் எளிமை, அதன் தூய்மை, மற்றும் பக்தி உணர்வுடன் கூடிய பரிமாற்றம், அந்த நாள் முழுவதும் ஆன்மிகத் தூய்மையை நிலைநிறுத்துகிறது.

இங்கு அமைந்துள்ள மகா சக்தி ஆலயம், பக்தர்களின் உள்ளங்களை ஆழமாகத் தொட்டும் ஒரு புனிதத் தலம்.

ஸ்கந்தவேல் ஆசிரமம், மலையெழுச்சிகளும், பசுமை வனங்களும் சூழ்ந்த ஒரு தனிமையான பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.

நகரக் களத்திலிருந்து விலகி, இயற்கையின் அமைதியை உணரச் செய்யும் இந்த இடம், ஆன்மிகத் தேடலுக்கும், மன அமைதிக்கும் ஏற்ற ஒரு சூழலை வழங்குகிறது.

அலங்காரமில்லாத இயற்கை பாதைகள், பறவைகளின் இசை, மழைநீரின் வாசனை
இவை அனைத்தும் தெய்வீக சக்தியின் நெருக்கத்தை உணரச் செய்கின்றன.

சக்தி ஆலயத்திற்கு செல்ல, 15 நிமிடங்கள் உயரமான நடைபாதை கடக்க வேண்டும். இது ஒரு பயணத்தின் பக்தி வடிவம் போலவே உணரப்படுகிறது.

1991ஆம் ஆண்டு, குரு ஸ்ரீ சுப்ரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், தெய்வீக தாயின் நேரடி அருளால் இந்த ஆலயம் உருவாக்கப்பட்டது.

ஆலயத்தின் மையத்தில், ஆறு அடி உயரமுள்ள மகா காளி மூர்த்தி பக்தர்களை ஆழமான ஆன்மிக அனுபவத்திற்கு அழைக்கின்றார்.

இங்கு லட்சுமி, சரஸ்வதி, பட்டினி, மற்றும் மேரி மாதா போன்ற பல தெய்வங்களுக்கான சன்னதிகள் உள்ளன, இது பல்லின ஒற்றுமையின் பிரதிபலிப்பாகவும் அமைந்துள்ளது.

ஆலயத்தில் தினமும் நடைபெறும் பூஜைகள், ஆரத்திகள், மற்றும் பஜனைகள், பக்தர்களின் உள்ளங்களை தூய்மைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

பூஜைக்குப் பின் வழங்கப்படும் சாத்வீக உணவு, பக்தி உணர்வுடன் கூடிய பரிமாற்றமாக அமைகிறது.

இங்கு 1999ஆம் ஆண்டு, குரு ஸ்ரீ சுப்ரமணியம் அவர்களின் தெய்வீகக் காட்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம்.

நீர்நிலையின் மத்தியில் விஷ்ணுவின் தரிசனம் போன்றே அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தின் மையத்தில், ஒரு பெரிய நீர்நிலையின் மத்தியில் ஸ்ரீ ரங்கநாதர் (விஷ்ணு) பெருமான் படுத்திருக்கும் நிலையில் அமைந்துள்ள மூர்த்தி பக்தர்களை ஆழமான தியான அனுபவத்திற்கு அழைக்கின்றது.

அவரைச் சுற்றி ஹனுமான், பிரம்மா, மகாலட்சுமி ஆகிய தெய்வங்களின் சன்னதிகள் அமைந்துள்ளன.

அதே நீர்நிலையின் அருகில், மஹிஷாசுர மர்தினி, நாகராஜா, மற்றும் தத்தாத்திரேயர் ஆகிய தெய்வங்களுக்கான சிறப்பு சன்னதிகளும் உள்ளன.

மேலும், ஈசன் (சிவன்) ஒரு சிறிய நீர்வீழ்ச்சியின் கீழ் அமர்ந்திருக்கும் அழகிய வடிவத்தில் காணப்படுகிறார்.

இந்த ஆலயம், இஸ்லாம், கிறித்துவம், புத்தம், மற்றும் ஹிந்து மதம் ஆகியவற்றின் தெய்வங்களையும் உள்ளடக்கியது.

யேசு, புத்தர், மற்றும் பிற தெய்வங்களின் சின்னங்கள் இங்கு காணப்படுகின்றன. இது “அனைத்து மதங்களும் ஒரே தெய்வத்தை நோக்குகின்றன” என்ற ஸ்கந்தவேல் ஆசிரமத்தின் தத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

இந்த ஆலயத்தின் கட்டமைப்பு, குரு ஸ்ரீ சுப்ரமணியம் அவர்களுக்கு விஷ்ணு பெருமான் நேரடியாகக் காட்டிய வடிவமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

அதற்கேற்ப, மூர்த்தி இந்தியாவில் சிற்பமாக்கப்பட்டு, தானமாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுகள் தெய்வீகத் திட்டத்தின் அற்புதத்தைக் காட்டுகின்றன.

தினமும் காலை 9:30 மணிக்கு பூஜை நடைபெறுகிறது.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு மஹாபிஷேகம் நடைபெறுகிறது.
ஆலயம் தினமும் காலை 4:30 முதல் இரவு 10:30 வரை திறந்திருக்கும்.

ஸ்கந்தவேல் ஆசிரமத்தின் மையத்தில், ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ளது சாய்பாபா ஆலயம்.

இது ஷிர்டி சாய்பாபாவின் தெய்வீக வடிவத்தை பிரதிபலிக்கும் ஒரு தியானக் கோவில், பக்தர்களின் உள்ளங்களை ஆழமாகத் தொட்டும் இடமாக அமைந்துள்ளது.

சாய்பாபாவின் தத்துவம் எல்லா மதங்களுக்கும் ஒரே தெய்வம்

ஷிர்டி சாய்பாபா, இஸ்லாம் மற்றும் இந்து மதத்தின் ஒற்றுமையை எடுத்துரைத்த ஒரு துறவி. அவர் கூறிய முக்கியமான வரிகள்:

“மதம் என்பது உடம்பின் ஆடையல்ல; ஆன்மா ஒன்றே.”

அவர் மசூதியில் வாழ்ந்தும், ஹிந்து வழிபாடுகளை மேற்கொண்டும், எல்லா மதங்களையும் ஒரே தெய்வீக ஒளியாகக் கண்டார்.

ஸ்கந்தவேல் ஆசிரமத்தின் பல்லின தத்துவத்துடன் இது முழுமையாக ஒத்துப்போகிறது.

ஆலயத்தின் அமைப்பு இயற்கையின் மடியில் அமைந்த அமைதி

மரச்சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆலயம், ஆசிரமத்தின் மரங்களிலிருந்து பெறப்பட்ட மரங்களால் கட்டப்பட்டது.

மசூதி வடிவ வளைவுகள், சுவரோவியங்கள், மற்றும் தியானத்திற்கு ஏற்ற அமைதி சூழல்.

– தினசரி ஆரத்தி காலை 9:30 மணிக்கு நடைபெறுகிறது, பக்தர்களுக்கு நேரடி தரிசன அனுபவம் கிடைக்கிறது.

ஆலயத்தின் மகிமை தியானம், சேவை, மற்றும் பக்தியை முன்னிலைப் படுத்துகிறது.

பக்தர்கள் சாய்பாபாவின் முர்த்தியை சுற்றி தியானம் செய்கிறார்கள்.

அவரின் தத்துவங்களை மனதில் பதிக்கிறார்கள்.

ஆலயத்தின் திறப்பு விழா, 2023 ஜூன் 9–12 வரை நடைபெற்றது.

இதில் ஷிர்டி ஆலயத்திலிருந்து வந்த அர்ச்சகர்கள் புனிதக் கும்பாபிஷேகம் செய்தனர்.

ஆலயம், பழமையான ஆன்மிகத் தலமாக உணரப்படுகின்றது, அதில் நிலவும் அமைதி, பக்தியின் ஆழமாகத் திகழ்கிறது.

ஸ்கந்தவேல் ஆசிரமம், மத வேறுபாடுகளை நீக்கிய ஒரு ஆன்மீகக் கதவாக விளங்குகிறது.

இங்கு ஒவ்வொருவரும் தத்தம் உள்ளத்தின் உண்மையைச் சந்திக்கும் பயணத்தில் தடையற்ற வெளியில் மெதுவாக நடக்கிறார்கள்.

தியானத்தின் அமைதியில், பிரபஞ்ச சக்தி துலங்கும்.

அந்த மௌனத்துக்குள் தோன்றும் ஒளி, மனதில் பரந்த அருளோவியத்தை வரைந்து, “நான்” என்ற எல்லையை ஒழிக்கும் தருணமாகிறது.

ஒரு நாளின் பயணம் ஒரு ஜீவனின் புரிதலின் ஆரம்பம்.

ஸ்கந்தவேல் ஆசிரமத்தில் பிறந்த சுயவிமர்சனக் கனங்கள் என்னை அழுத்தின.

அருமையான மலைநெடுகளியில் அமைந்த ஸ்கந்தவேல் ஆசிரமம், என் மனதில் நீண்ட காலமாக பசுமையாக இருந்த ஆன்மீக இடம்.

என் மனைவியுடன் மேற்கொண்ட அந்த ஒருநாள் பயணம், பழக்க வழக்கங்களுக்கு ஓர் நினைவெச்சம் மட்டுமல்ல, என் அந்தரங்கப் பிரபஞ்சத்தின் கதவுகளைத் திறந்த ஒரு விசையான அனுபவமாக மாறியது.

ஒளியிலிருந்து ஊக்கம்தேடல் எனும் நிலைப்பாட்டை புரிய வைத்தது.

ஆலயத்தின் அமைதியை மையமாகக் கொண்டு, பூஜைகளின் ஒலியில், பஜனைகளின் இசையில், சாமியார்களின் சிந்தனைகளில்… என் உள்ளம் தன்னைத் தேடத் தொடங்கியது.

சங்கடங்களை மீறிய ஓர் “நான்” யார்? என்பதற்கான மௌனப் புதிர்கள், தியானத்தின் பசுமை அமைதியில் விழக்க ஆரம்பித்தன.

நீண்ட காலமாக நான் தவிர்த்து வந்த பக்கங்களை அந்த ஒரு நாள் புரட்டியபோது, அதன் ஓரங்களில் பழைய சிந்தனைகள், மறந்துவிட்ட விழிப்புகள், சிற்றுணர்வுகள், எல்லாம் கோவில் வாசல் போல காத்திருந்தன.

தியானத்தில் தேடல்  எனது நிஜம் எனும் உண்மையை உணர வைத்தது.

ஆலயத்தின் மரச்சாயத்தில் அமைந்த சாய்பாபா கோவில் வாசலில் அமைதியாக அமர்ந்த தியானத் தருணங்கள், “சொற்கள் இல்லாமல் சொல்லும் உள் உரையாடல்களை” தூண்டின.

மதம் மீறும் பரந்த உணர்வுகள்,
நீளும் பசுமை,
சுத்தமான அமைதி
இவை அனைத்தும் என் உள் பாதைகளை ஒளியுற வழிகாட்டின.

அந்த சுடுகாடான மௌனம், என் மனக் கோபங்களை பசுமையாக்கியது.

நான் யாராக இருந்தாலும், அதுவும் ஒரு நிலை, ஆனால் நான் யாராக மாற வேண்டும் என்பதற்கான அந்த விசை, ஸ்கந்தவேல் தரிசனம் அன்றே தொடங்கியது.

வழித்தடம் மாற்றிய ஓர் நாள் அமைதியான உணர்வுகளின் நாள்

பயணங்களும் பூஜைகளும் நமக்குள் ஓர் பாதையை உருவாக்கும்.

ஆனால் இந்தப் பயணம், அந்த பாதையை துடைத்து, புதியதொன்றை வரையியது.

இது ஒரு நாளில் நிகழ்ந்த ஆன்மீக எழுச்சி. என் பெற்றோர், என் மனைவி, என் நண்பர்கள் எல்லோரும் ஒவ்வொரு காலகட்டத்தில் என்னோடு இங்கு இணைந்திருந்தார்கள் எனும் அனுபவம் என் ஆன்மாவோடு இணைந்திருக்கும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.