இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 308

0
PhotoCollage_1754328373116

சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

இதோ அடுத்தொரு இங்கிலாந்தின் நிலவரங்களோடு மீண்டும் ஒரு மடலுடன் உங்களுடன் இணைகிறேன்.

ஜூலை 2025 இங்கிலாந்து அரசியலில் ஒரு முக்கியமான கட்டமாக இருந்தது.

இப்போதைய இங்கிலாந்து அரசியல் நிலப்பரப்பில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நைஜல் வெராஜ்  தலைமையிலான ரீபோர்ம் கட்சி குடியேற்றக் கொள்கை தவிர்ந்த ஏனைய கொள்கைகள் பற்றி விளக்கத் தொடங்கியுள்ளது.

இங்கிலாந்தினுள் சட்டவிரோதமாக சிறு படகுகள் மூலம் வருவோருக்கெதிரான ஆதரவின் அனுகூலத்துடன் தன்னை அரசியலுக்குள் தக்க வைத்த ரீவோர்ம் கட்சி த்ஜம்மை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

குடியேற்றக் கொள்கைகள், மற்றும் NHS மீதான நிதி குறைபாடுகள் குறித்து நாடாளுமன்றம் மற்றும் ஊடகங்களில் தீவிர விவாதங்கள் நடைபெற்றன.

லண்டன் நகரில், சமூக நீதி மற்றும் இன ஒற்றுமையை வலியுறுத்தும் பேரணிகள் பல அமைப்புகளால் நடத்தப்பட்டன.

இவை, இளைய தலைமுறையின் அரசியல் விழிப்புணர்வை தூண்டியதோடு, பன்முக சமூகத்தின் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலித்தன.

இஸ்ரேல்–ஹமாஸ் மோதல் தொடர்ந்து தீவிரமடைந்த நிலையில், காசா பகுதியில் ஏற்பட்ட மனிதாபிமான பேரழிவுக்கு எதிராக, இங்கிலாந்து அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகக் காட்டியது.

60,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, பசியால் வாடும் குழந்தைகள் குறித்து பிரதமர் கியர் ஸ்டாமர் உருக்கமான அறிக்கையை வெளியிட்டார்.

இஸ்ரேல், காசாவுக்குள் மருத்துவ உதவிகள் மற்றும் உணவுப் பொருட்கள் நுழைவதை தடுக்கும் நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால், பிரித்தானிய அரசு செப்டம்பர் மாதம் பாலஸ்தீனத்தை ஒரு அரசாக அங்கீகரிக்கும் என அவர் எச்சரித்தார்.

இது, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடருக்கு முன்னதாக சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்கும் முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், ஜூலை 2025-இல் ஸ்கொட்லாந்து விஜயத்தில் ஈடுபட்டார்.

எடின்பரோவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே, அவரது வருகைக்கு எதிராக நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்க குடியேற்றக் கொள்கைகள், காசா போரில் அவரது நிலைப்பாடு, மற்றும் சர்வதேச மனித உரிமை விவகாரங்கள் குறித்து எதிர்ப்பு முழக்கங்கள் எழுந்தன.

இங்கிலாந்து அரசியல் சூழ்நிலையை இந்த விஜயம் மேலும் பரபரப்பாக்கியது.

இது உள்ளூர் அரசியல் விவாதங்களை சர்வதேச அரசியல் தாக்கங்களுடன் இணைக்கும் ஒரு முக்கிய தருணமாக அமைந்தது.

லண்டனின் ஈலிங் பகுதியில் அமைந்துள்ள கனக துர்க்கை அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி திருவிழா இந்த ஆண்டும் மிகுந்த பக்தி மற்றும் பாசத்துடன் கொண்டாடப்பட்டது.

மலர் அலங்காரங்கள், தீமிதி விழா, மற்றும் பஞ்சமி, சஷ்டி, ஆடிப்பூரம் நாட்களில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

இளம் தலைமுறையினர் பாரம்பரிய நடனங்கள், பஜனை, மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தமிழர் கலாச்சாரத்தின் உயிரோட்டத்தை மேடையில் வெளிப்படுத்தினர்.

இந்த விழா, தமிழர் ஆன்மிக ஒற்றுமையை வலுப்படுத்தும் ஒரு அரிய வாய்ப்பாக அமைந்தது.

இலண்டன் ஶ்ரீ விம்பிள்டன் கணபதி ஆலயத்தில் தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

பக்தர்கள் தேரை வடம் பிடித்து நகர்வலமாக இழுத்தனர்.

கணபதி ஹோமம், அபிஷேகம், மற்றும் பஜனை நிகழ்ச்சிகள் பக்தி உணர்வை தூண்டின.

சிறுவர், பெரியோர் பங்கேற்ற இந்த விழா, சமுதாய ஒற்றுமையை வலுப்படுத்தியது.

தேரோட்டம் என்பது வெறும் ஆன்மிக நிகழ்வாக மட்டுமல்ல அது ஒரு சமூக உறவின் வெளிப்பாடாகவும், தமிழர் அடையாளத்தின் ஊர்வலமாகவும் விளங்குகிறது.

இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது.

இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றியைப் பெற்றது.
இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி, சீனியர்கள் இல்லாமலும், எதிர்பாராத வெற்றியைப் பெற்றது.

முகமது சிராஜ் 5 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடரின் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றி, இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமுறையின் தைரியத்தையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தியது.

ஜூலை 2025 இங்கிலாந்தில், தமிழர் ஆன்மிக உற்சாகம், இந்திய கிரிக்கெட் வீரர்களின் வீரத்தன்மை, மற்றும் சமூக அரசியல் விவாதங்களை ஒருங்கிணைக்கும் ஒரு பன்முகத் திரைபடமாக அமைந்தது.

இது, உலகத் தமிழர்களின் கலாச்சார, ஆன்மிக, மற்றும் விளையாட்டு பங்களிப்பை வெளிப்படுத்தும் ஒரு அரிய மாதமாக இருந்தது.

இங்கிலாந்து, தமிழர் அடையாளம், இந்திய வீரத்தன்மை, மற்றும் சமூக மாற்றத்தின் மேடையாக தொடர்ந்து விளங்கட்டும்.

2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மந்தநிலைக்குச் சென்ற இங்கிலாந்து பொருளாதாரம், 2025-இல் சற்று மேம்படும் என நிதி அமைச்சகம் மற்றும் OBR (Office for Budget Responsibility) கணித்துள்ளது.

2025 வளர்ச்சி விகிதம்: 1.4% → 1.9% என உயர்வு

இருப்பினும், உணவுப் பொருட்கள், எரிபொருள், மற்றும் உள்நாட்டு உற்பத்தி குறைவால், இறக்குமதி சார்பு அதிகரித்து, விலை உயர்வும், வேலைவாய்ப்பு சிக்கலும் தொடர்ந்தன.

உக்ரைன்–ரஷ்யா போர், சீனாவின் விலை போட்டி, மற்றும் உற்பத்தி செலவுகள் காரணமாக, தொழிற்துறைக்கு பின்னடைவு ஏற்பட்டது.

2018 வரை, சட்டவிரோத குடியேற்றம் பெரும்பாலும் லொறிகளின் பின்னால் பதுங்கி பிரித்தானியாவுக்குள் நுழைவதன் மூலம் நடந்தது.

ஆனால், 2020–2025 காலப்பகுதியில், சிறுபடகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் வழிமுறை மூன்று மடங்காக அதிகரித்தது.

இது, பாதுகாப்பு சிக்கல்கள், மனிதாபிமான பிரச்சனைகள், மற்றும் உள்நாட்டு அரசியல் விவாதங்களை தூண்டியது.

இங்கிலாந்து அரசு, இந்த குடியேற்றவர்களை தற்காலிகமாக ஹோட்டல்கள், விடுதிகள், மற்றும் பழைய இராணுவ முகாம்களில் தங்கவைத்தது.

இவை பெரும்பாலும் மாநகர எல்லைகளில், அல்லது சிறிய கிராமப்புற பகுதிகளில் அமைக்கப்பட்டன.

இதனால், உள்ளூர் மக்களுக்கு சில கவலைகள் எழுந்தன:

பாதுகாப்பு மற்றும் சமூக அமைதி குறித்த பயம்

உள்ளூர் வசதிகள் மீது அழுத்தம் (மருத்துவம், கல்வி, போக்குவரத்து)

தகவல் இல்லாமை மற்றும் அரசின் செயல்முறை பற்றிய நம்பிக்கையின்மை

2025 ஜூலை மாதத்தில், பல இடங்களில் மக்கள் விடுதிகள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இவை சமூக ஊடகங்கள், உள்நாட்டு ஊடகங்கள், மற்றும் அரசியல் கட்சிகள் மூலம் தூண்டப்பட்டன.

போராட்டங்களின் முக்கிய காரணங்கள்:

அரசின் செயல்முறை பற்றிய தெளிவின்மை

உள்நாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வசதிகள் குறைவாகும் பயம்

சமூக கலாச்சார மாற்றம் குறித்த எதிர்ப்பு

சில ஊடகங்கள் மற்றும் அரசியல் பிரிவுகள் இந்த குடியேற்றத்தை அச்சுறுத்தலாக சித்தரித்தது

இங்கிலாந்து அரசுக்கு, மக்கள் நலனும், குடியேற்றவர்களின் மனித உரிமையும் சமநிலையாகக் கவனிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தகவல் பரவல், உள்ளூர் மக்களுடன் கலந்தாய்வு, மற்றும் நீடித்த தீர்வுகள் தேவைப்படுகிறது.

இங்கிலாந்து அரசாங்கம் இன்று (ஆகஸ்ட் 4, 2025) எல்லைப் பாதுகாப்புக்கான £100 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது,

இது சிறுபடகுகள் வழியாக சட்டவிரோத நுழைவுகளை தடுக்கும் முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது.

இது, புதிய அரசின் (கியர் ஸ்டாமர் தலைமையில்) முக்கிய சவாலாகவும், நாடாளுமன்ற விவாதங்களில் முக்கிய அம்சமாகவும் மாறியுள்ளது.

£100 மில்லியன் நிதி ஒதுக்கீடு:
300 புதிய அதிகாரிகள் National Crime Agency-இல் சேர்க்கப்படுவர்

உயர்தர கண்டறிதல் தொழில்நுட்பம் மற்றும் AI ஆதரித்த உளவுத்துறை கருவிகள்

சமூக ஊடகங்களில் சட்டவிரோத நுழைவுகளை விளம்பரப்படுத்தும் புதிய குற்றச்சாட்டு – 5 ஆண்டுகள் சிறை வரை தண்டனை

“One in, One out” ஒப்பந்தம்:

பிரான்ஸுடன் புதிய ஒப்பந்தம்  சட்டவிரோதமாக வந்தவர்கள் பிரான்ஸுக்கு திருப்பி அனுப்பப்படுவர்

அதற்குப் பதிலாக, பிரிட்டனுடன் தொடர்புடைய அகதிகள் ஏற்கப்படுவர்.

சர்வதேச ஒத்துழைப்பு:
ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா ஆகிய பகுதிகளில் ஆட்கடத்தல் மன்னர்களை குறிவைக்கும் நடவடிக்கைகள்

ஐரோப்பிய பொலிசாருடன் ஒப்பந்தங்கள்,
எல்லைப் பாதுகாப்புப் பிரிவை வலுப்படுத்தல்

அரசியல் எதிர்வினைகள்

உள்துறை அமைச்சர் இவெட் கூப்பர் கூற்றுப்படி

“இது ஒரு முழுமையான திட்டம் – நம்முடைய எல்லைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில்.”   உள்ளது என்கிறார்.

ஆனால் கன்சத்வேடி கட்சியோ “இது ஒரு தலைப்புச் செய்திக்காகச் செய்யப்படும் முயற்சி உண்மையான தீர்வு இல்லை” என விமர்சனம் செய்துள்ளது.

இப்படியாக இங்கிலாந்து நிகழ்வுகளை மடல் மூலம் வலம் வந்தோம்.

” அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா ” என்று ஒரே வரியில் முடித்து விடலாமா?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.