IMG-20251220-WA0077

சக்தி சக்திதாசன்

கண்ணதாசன் பாடல்களில் ஆன்மீகம் எனும் பார்வையில் இன்று பார்க்கப்போகும் பாடல்

ஆசையே அலை போலே
நாமெல்லா..ம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே
வாழ்நாளிலே

ஆசையே அலை போலே
நாமெல்லா..ம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே
வாழ்நாளிலே…

பருவம் என்னும் காற்றிலே..
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வா..ர்
சுகம் பெறுவா..ர்
அதிசயம் காண்பார்
நாளை உலகின் பாதையை இன்றே
யார் காணுவார்..

ஆசையே அலை போலே..
நாமெல்லா..ம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே
வாழ்நாளிலே..

வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
வடிவம் மட்டும் வாழ்வதே..ன
இளமை மீண்டும் வருமா..
மணம் பெறுமா..
முதுமை..யே சுகமா…
காலம் போகும் பாதையை
இங்கே யார் காணுவார்

ஆசையே அலை போலே
நாமெல்லா..ம் அதன் மேலே
ஓடம் போலேஆடிடுவோமே
வாழ்நாளிலே..

சூறை காற்று மோதினா..ல்
தோணி ஓட்டம் மேவு..மோ
வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு இருப்பது கனவு..
காலம் வகுத்த கணக்கை இங்கே
யார் காணுவார்..

ஆசையே அலை போலே
நாமெல்லா..ம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே
வாழ்நாளிலே..

கண்ணதாசன் பாடல்களில் ஆசை, வாழ்க்கை, காலம், இளமை, முதுமை போன்ற மனித வாழ்வின் அடிப்படை உண்மைகள் மிக எளிய உவமைகளில் வெளிப்படுகின்றன.

“ஆசையே அலை போலே” என்ற பாடலில் அவர் ஆசையை அலைக்கு ஒப்பிட்டு, மனிதனை ஓடமாகக் காட்டுகிறார்.

இது அலைபோல் அசையும் ஆசையின் நிலையற்ற தன்மை மற்றும் அதன் மீது மனிதன் வாழ்நாள் முழுவதும் ஆடிக்கொண்டிருக்கும் நிலையைக் காட்டுகிறது.

இங்கு அவர் ஆன்மீக அறிவின் அடிப்படை உண்மையை ஆசை நிலையற்றது, வாழ்க்கை ஒரு பயணம் மிக எளிமையாக வெளிப்படுத்துகிறார்.

இந்தப் பாடல் கண்ணதாசனின் தத்துவப்பாடல்களில் ஒன்று.

வாழ்க்கையின் சுழற்சியை இளமை, காதல், முதுமை, துன்பம், சுகம், காலம் அனைத்தையும் ஆசையின் அலை என்ற மைய உவமையில் இணைத்து, மனிதன் வாழ்வின் பாதையை ஆராய்கிறார்.

பாடல் சமூகப்பாடல் போலத் தோன்றினாலும், அதன் உள்ளே ஆன்மீக சிந்தனை ஆழமாகப் பதிந்துள்ளது.

“ஆசையே அலை போலே… நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே”

ஆசை என்பது அலை போல நிலையற்றது, எப்போதும் அசையும்.

அதிலே மனிதனி ஓடம் போல ஆசையின் மீது ஆடிக்கொண்டிருப்பவன்.

ஆன்மீகப் பொருளாக இதிலே வாழ்க்கை ஆசையின் அலைகளால் இயக்கப்படுகிறது.

அதிலிருந்து விடுபடுதல் தான் உண்மையான சாந்தி என அழகாக எடுத்துரைக்கிறார்

“பருவம் என்னும் காற்றிலே… பறக்கும் காதல் தேரிலே”

இளமை என்றால் காற்றாகவும் காதல் என்பதை அது அசைக்கும் தேர் என்கிறார்.

ஆணும், பெண்ண மகிழ்ச்சி, சுகம், அதிசயம் எனும் உணர்வுகளினூடாக காலத்தின் ஓட்டத்தோடு பயணிக்கிறார்கள்.

ஆன்மீகப் பொருளாக இளமை, காதல், சுகம் அனைத்தும் தற்காலிகமமானவை அவை நிலையற்றவை என்று சிந்திக்க வைக்கிறார்.

“வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதே”

வாழ்க்கை அது காலத்தோடு தீர்ந்தத ஆனால் அங்கே உடல் வடிவம் மட்டும் வாழ்கிறது.

இளமை அது மீண்டும் வராது அபடியாயின் முதுமை சுகமா? என்கிறார் கவியரசர்.

ஆன்மீகப் பொருள் இங்கே உடல் நிலையற்றது எனவும் ஆன்மா மட்டுமே நிலைத்தது எனவும் வாழ்வின் உண்மை நிலையை எடுத்துரைக்கிறார்.

“சூறை காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ”

வாழ்க்கை என்பதை தோணியாகவு
ம் விதியை சூறை காற்று என்றும் கொண்டால் விளைவு துன்பமே !

இந்நிலையில் சுகம் செலவுவாகவும் துன்பம் வரவாகவும் கொண்ட ஒரு வாழ்க்கை கணக்கின் தத்துவமாகத் தருகிறார்.

ஆன்மீகப் பொருள் இங்கே துன்பம்–சுகம் இரண்டும் வாழ்க்கையின் இயல்பான இரு முகங்கள் அவற்றை சமமாக ஏற்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

கண்ணதாசன் சமூகப்பாடல்கள் மனித வாழ்வின் உண்மைகளை வெளிப்படுத்தும் போது, அவற்றில் ஆன்மீக அடுக்குகள் இயல்பாகவே கலந்து விடுகின்றன.

ஆசை, காதல், சுகம், துன்பம் போன்ற சமூக அனுபவங்களை அவர் ஆன்மீக உவமைகளால் விளக்குகிறார்.

“ஆசையே அலை போலே” பாடலில், ஆசை–அலை, மனிதன்–ஓடம், வாழ்க்கை–தோணி என்ற உவமைகள் சமூக அனுபவத்தையும் ஆன்மீக உண்மையையும் இணைக்கின்றன.

இதன் மூலம் அவர் சமூகப் பாடல்களை ஆன்மீகப் பாடல்களாக மாற்றுகிறார், அதாவது வாழ்க்கை அனுபவம் என்பது ஆன்மீகப் பயணம் என்பதை உணர்த்துகிறார்.

“ஆசையே அலை போலே” என்பது வெறும் சமூகப் பாடல் அல்ல.

அது ஆசையின் நிலையற்ற தன்மை, வாழ்க்கையின் சுழற்சி, சுக–துன்ப சமநிலை, உடலின் நிலையற்ற தன்மை ஆகியவற்றை ஆன்மீகமாக வெளிப்படுத்தும் பாடல்.

கண்ணதாசன் சமூகப்பாடல்களில் கூட ஆன்மீக அறிவை நுட்பமாக இணைத்து, மனிதனை சிந்திக்க வைக்கும் கவிஞராக திகழ்கிறார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.