நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (3)
தி.சுபாஷிணி
ஓங்கி உலக ளந்த உத்தமனின்
ஒல்காப் புகழ் பாடிப் போற்றியவளே!
வான் சிலிர்த்து வரப்பு உயர்த்தி
வையம் வாழ வழங்கிய வாசுதேவனைப்
பாட வந்து நிற்கின்றோம் வாசலில்!
பள்ளி எழுவாயே! திறவாயே நாச்சியாரே!
படத்திற்கு நன்றி : http://photos.templesonnet.com/may-2011/sri-andal.shtml