நெல்பயிராகும் புல்காடுகள்
ஜெ.ராஜ்குமார்
புதியதோர் சட்டம் அமைத்தது…!
நெல் விளைவிக்காமல்
நெஞ்சம் சாய்வதில்லையாம்…!
உழவனை உழச் செய்து…
பழமை மறந்தவனைத் திருந்தச் செய்து…
பசி போக்கும் உயிர் நாடி இது – என்று
பலதை ருசிப்போர்க்கும் சொல்லி உணர்த்தும் இது!
கடமை உணர்ந்தவர்களாய்க்
கட்டாந்தரையில்
படர்ந்த நாள்களை ஒழித்து…
கண்காட்சிப் பொருளாய்
கண்டவர் பார்த்து, மிதித்து, அமர்ந்து, படுத்து
விளையாடியதை நிறுத்தி…
வறுமை வழக்கமான – மனித வாழ்க்கையில்
சிறுமை தந்திடும் புல்காடுகளாய்ப் பிறக்காமல் –
வறுமை ஒழித்தோங்கும் – வளமிக்க
நெல் பயிரின் சுவாசங்களாய் –
மனித உழைப்பில் – மலர்ந்திட
முடிவை எடுத்தது…!
படத்திற்கு நன்றி: http://www.dowagro.com/usag/rice