ஜெ.ராஜ்குமார் 

பூக்கள் மிதக்கும் குளங்கள்!

ஊஞ்சல் விழுதுகள்!

காக்கை , அணில், குருவிக் கூடுகள்!

நிழல் தரும்; கனி தரும்; குடை தரும்

மா பலா தென்னை மேகங்கள்!

நெல் முளைத்த தரைத் தளங்கள்!

கடந்து செல்லும் காடுகள்!

மலை இறங்கும் அருவி அற்புதம்!

மலை அருகே வீசும் இதமான தென்றல்!

 மண்ணை முகர்ந்தால் மணக்கும் சந்தனம்!

மனை உள்ளே இருக்கும் மகிழ்ச்சியெனும் பொக்கிஷம்!

மனதுள்ளே நிம்மதி பெருமூச்சின் லப்டப்!

லப்டப் கிராமத்தைத்  தேடி வாருங்கள்

பட படவென இதயம்

பட்டாம்பூச்சியாய்ப்

பறப்பதை உணருங்கள்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.