வைப்போமே!
செழியன்
முப்பாலுக்கு ….
மூன்று விரல் காட்டி
உப்பு காற்றில்
உயரமாக நிற்குமாறு வள்ளுவனுக்கு
குமரியிலே
கடற்கரைக்கு அப்பால்
கடலில் வானுயர சிலை
அங்கு ……
வானம்தான் கோபுரம் .
மழை நீர்தான் அபிசேக நீர் .
ஆர்ப்பரிக்கும் அலைகளின் ஓசைதான்
அர்ச்சனை மந்திரம் .. அவனுக்கு .
இயற்கையே அவனை
இப்படி வணங்குகிறது .
படையலும் – பழியும் கேட்கும்
சாமி படங்களை
வீட்டில் வைத்து இருக்கும்போது
வாழ்வியல் வழங்கிய வள்ளுவனுக்கு
வாழும் இல்லத்தில் நாம்
வைப்போமே அவன் உருவப்படத்தை!
நன்றாகச் சொன்னீர்கள் செழியன்!
வள்ளுவர் படமும் திருக்குறள் புத்தகம் ஒன்றும் தமிழர்கள்
வீட்டில் அவசியம் இருக்க வேண்டியவை. அடியேன் அவைகளை
வைத்திருப்பதோடு என் வீட்டிற்கு ” திருவள்ளுவர் இல்லம் ” என்றே
பெயர் சூட்டியுள்ளேன். “வள்ளுவருக்கு தாடி உண்டா? யார் அவரைப்
பார்த்துள்ளார்கள்?” என்ற கேள்வியை என்னிடம் ஒருவர் கேட்டார்.
அவரிடம், ” இப்போது உள்ள சுவாமிகளின் உருவங்கள் அதாவது
முருகன், கிருஷ்ணன், சிவன், விநாயகர் போன்ற உருவங்களை
யார் பார்த்துள்ளார்கள்? அந்த உருவங்களை எப்படி நம்புகிறீர்கள்?
அதைப் போல இதையும் நம்புங்கள்!” என்று சொன்னேன்.
இரா. தீத்தாரப்பன், ராஜபாளையம்.