Author: செழியன்

  • முப்பால் கொடுத்த முனிவரே !

     
    செழியன்
    முப்பால் கொடுத்த முனிவரே ! thiru
    இன்று

    ‘திருவள்ளுவர் தினம்’

    அறிவித்து விட்டது.. அரசு விடுமுறையுடன்
    இரண்டு ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டது.
    உனது குறளுக்கும் – குரலுக்கும்
    இருந்தாலும், புரிந்துகொண்டார்கள்
    உன்னையும், உன் குறளையும்’ – இப்படி
    ‘அறத்துப்பால் தந்தாய் ‘
    அறம்..மறந்து. -.. மறுத்து
    சேவை எனச் சொல்லி, அவரவர்
    தேவைகளுக்காக, கொள்ளை,கூட்டுக்கொள்ளை, ஏமாற்று
    என கோடிகோடியாய் பொருள் சேர்த்து, பாதுகாக்க
    ‘ அற ‘ க்கட்டளை அமைத்துக்கொண்டார்கள் – இது அவர்கள்
    உணர்ந்த ‘ அறத்துப்பால்

    பொருட்பாலில்
    ‘ குடி செயல் வகை ‘ என ஒரு அதிகாரம் தந்தாய்
    ‘ குடி ‘ செயலோ வகை வகையாக நடக்கிறது.
    தெருவுக்குத் தெரு
    பள்ளிக்கருகே… கோவிலுக்கருகே
    தனியார் பார்.. அரசு பார்… அனுமதியுடன்
    வயசு வித்தியாசம் இல்லாமல் அருந்தலாம்
    அவமானப்படாத அரசுக்கு
    வருமானம் பல கோடிகளில்
    இது … இவர்கள் குடித்த ‘ பொருட்பால் ‘

    காமத்துப் பால் தந்தாய் – இதில்
    காமத்தின் மேல் வெறி கொண்டு
    வல்லுறவு- வன்புணர்ச்சி – தனியாக_கூட்டாக
    வயது பேதம் இன்றி
    உறவு பேதம் இன்றி
    வக்கிர உணர்ச்சியில் – மிருகத்தையே மீறினார்கள்.

    திருவள்ளுவரே !
    முப்பால் கொடுத்த உனக்கு
    நாட்டுக்குஅப்பால் – கடலில்
    வானுயர்ந்த உருவச்சிலை..
    நீ கொடுத்த முப்பாலும் வீணானதோ ?
    விரக்தியில்..விட்ட கண்ணீர்தான்
    கடலில் விழுந்து, கடலே பொறுக்காமல்
    சுனாமியாக சுழற்றிஅடித்ததோ ?
    சிலையாய் நின்றுவிட்டாய். – உயிரோடிருந்தால்
    நிலைகுலைந்து
    தலை சாய்ந்து இருப்பாய்…. நல்லவேளை.
    இன்று திருவள்ளுவர் தினம்.
    எழுத்தாணி கொண்டு
    எழுதிய உன் இதயம் கிழித்திட்டாலும்
    இந்த வலி இருக்குமோ உனக்கு !

     

    Share
  • From coco cola plastic bottles

    Chezhian
    20130909_193526 3
    400 units of triangle with 3200 foldings
    400 units of triangle with 3200 foldings

    20130909_193453

    20130909_193750
    Share
  • தண்டனை

    செழியன்

    மருத்துவ சேவையில்
    மணக்க வேண்டிய …மலரை
    மனமில்லா
    பாவிகள் பலர்
    காமவெறி கொண்டு ….
    சிதைத்து  ….சேதாரப்  படுத்திவிட்டார்கள்
    சேதாரத்திற்கு
    ஆதாரம் இருந்தும் ..
    நாடாளும் அரசு
    தண்டிக்காமல்
    நாட்களை  நகர்த்திக் கொண்டு இருக்கிறது ,……
    நாடக காட்சிகளாக .
    மறந்தும் அவர் களுக்கு
    மரண தண்டனை  அளிக்க  கூடாது .
    காமத்தை …….
    கனவிலும்  நினைக்கமுடியாதபடி
    உடலில் அந்த
    உணர்வுகளை  தூண்டும்  நரம்புகளை
    ஊனப்படுத்தி …..
    உயிர் உள்ளவரை  அந்த ……
    உணர்வுக்கு….  ஏங்கி…… ஏங்கி…..
    கடைசி வரை  காலத்தை கழிக்கவேண்டும் .
    அடக்கு முறையில்
    காம வெறியை  களிப்பவர்களை
    அண்டத்திலிருந்தே   கழித்துவிடவேண்டும்

     

    படத்துக்கு நன்றி: http://my.englishclub.com/profiles/blogs/silent-of-tears

     

    Share
  • ஒரு காதல் தோல்வியாகிறது

    செழியன்

    காதலே !
    நீ ஒரு  கானல் நீரே .
    விலையில்லா
    இந்த உயிர்களை
    ஏன் ? விட்டில்    பூச்சி  ஆக்குகிறாய் .

    உனக்கும்
    தோல்விக்கும் ஏன்
    இந்த பற்றுதல்

    முதலில் பசுமை காட்டி
    முன்னேற விட்டு
    முடிவில்
    தோல்விப் பாலைவனத்தில்
    தள்ளும்  நீ
    ஒரு கானல் நீரே.

    விளையாத  நிலத்தில்
    முளையாத
    வித்தாக  விழுந்து
    வெறுப்பேற்றி
    நெஞ்சங்களை  ஏன்?
    வேதனைப்  படுத்துகிறாய் .

    எங்களை  எப்போதும்
    ரோமியோ -ஜூலியட்
    அம்பிகாபதி-அமராபதி
    லைலா -மஜ்னு வாக
    பார்க்கத்தான்  விருப்பமா?
    ஷாஷகான் -மும்தாஜ்  ஆக
    பார்க்க விருப்பமில்லையா?

    தோல்விக்குத் தஞ்சம் அளிக்கும்
    உன்னால்
    துவண்ட  நெஞ்சங்களுக்கு
    வாழ்வு  அளிப்பதில்
    ஏனிந்த  கஞ்சம் .

    பருவக் குளத்தில்
    துள்ளித் திரியும்
    எங்களுக்கு
    நீ
    தூண்டில்  புழுவாகவே
    காட்சி அளிக்கிறாய்

    தேனைத்
    தேடி வரும்  வண்டிற்கு
    திராவகத்தை
    கொடுப்பதிலையே  மலர்கள் .

    தோல்வி
    சரித்திரத்தை  நீ
    தொடர
    எங்கள்  உயிர்தான்
    உனக்கு மையாகுகிறது .
    காதலே !
    உன் தோல்வித் தாகம்
    இன்னுமா  தணியவில்லை.

    உன்
    தோல்வித்  தொடரை
    பல நூறு  ஆண்டுகளாக
    படித்து  கொண்டுதான் இருக்கிறோம் .
    நீயும்  தொடரை  முடிக்கவில்லை .
    நாங்களும்  திருந்த வில்லை .

    காதலே !
    உனக்காக  கோயில்
    கட்ட முனைந்தோம் .
    நீ
    எங்களை
    தோல்விக் கல்லறைக்குள்
    தள்ளுவாய்  என்று  அறியாமல் .

    இளமைப்  பூங்காவில்
    நீ
    தென்றலாய்த்தான்  நுழைகின்றாய் .

    அதை நீ
    கடந்த பின்னர்
    பார்த்தால்
    அது
    புயல்  நுழைந்த
    பூங்காவாக  அல்லவா  இருக்கிறது .

    இது புரியவில்லை
    இந்த  பூஞ்செடிகளுக்கு .

    உன்னால்
    இணைந்த உள்ளங்கள்  சில .
    இடிந்த உள்ளங்களோ  பல .

    படத்துக்கு நன்றி

    http://funtimebirdy.wordpress.com/2010/07/07/lovebirds-in-the-wild/

    Share
  • மனக் கிளியே !

     

    செழியன்

    மனக்  கிளியே !  (மனைவியே)
    புரிதலும் -தெரிதலும்  கொண்ட
    உன்னிடத்தில்
    என்னுடைய  கல்லூரி காதலை
    சொல்லும்  போதெல்லாம்
    எனக்கில்லையே …..
    மன…..கிலியே .!

     

    Share
  • பணத்தை என்ன செய்வது ….

    செழியன்

     

    அவருக்கு பணமுண்டு .
    அதற்கோர்  பெட்டகமுண்டு .
    அந்த பணம் ….
    வந்ததற்கும்  கணக்கில்லை .
    வருவதற்கும்  கணக்கில்லை .
    வேலைக்கோர்  உணவுண்டு .
    விருந்திற்கோர்  ஆளுண்டு .
    அருந்தத்தான் தடை  அவருக்கு.
    ஆம்!…
    அவர் உதிரத்தில்
    மிகையாம்  கொழுப்பு சத்து …..அது
    பகையாம்  அவர் உயிருக்கு .
    மருத்துவர் தடை  இது .
    மறுக்கமுடியவில்லை ,,….அவரால் .
    மனம்  வெதும்புகிறார் .
    இவர் பல்லவி ….
    பணத்தை  என்ன செய்வது .
    அவருக்கோ …
    அடுக்கு மாடியுண்டு .
    அதிலே .அடுக்கிய
    நோட்டு கத்தையுண்டு .
    அதை  எண்ணி  பார்க்க நேரமில்லை .
    கத்தை வந்த
    வித்தையை  எண்ணவும் மனமில்லை .
    கலருக்கொரு  காருண்டு .
    காருக்கொரு  ஓட்டிண்டு.
    இருந்தென்ன ……
    காலார நடக்க வேண்டுகிறார்  மருத்துவர்.
    கொழுத்த உடம்பை
    குறைப்பதற்கு .
    இவர்  பல்லவி ….
    பணத்தை  என்ன பண்ணுவது .
    அவருக்கோ
    ஆலைகள்  பலவுண்டு .
    அதிலே வேலைக்களுமுண்டு பலருக்கு .
    ஆலையில்   வந்ததை
    சாலையில்  போவோருக்கும்
    சார்பு அற்றவருக்கும்
    ஆதரவாய்  அளித்தார் .
    அவர் ஆனந்தம்  கண்டு
    இவர் மகிழ்ந்தார் .
    ஆனால் …
    அள்ளி  அணைத்து..
    கொஞ்சி மகிழ
    அன்பு மனைவிக்கு
    கொடுக்க முடியவில்லை
    குழந்தை  செல்வத்தை .
    கோடி கோடியாய்…
    பணமிருந்தென்ன…..
    கொஞ்சு மொழி  கேட்க
    குழந்தை  இல்லையே .
    இவர் பல்லவி
    பணத்தை  என்ன   செய்வது ?


    Share
  • பணத்துக்கு என்ன செய்வது “

    செழியன்
     

    உழைக்க  மனமுண்டு .

    உடைக்க மரமுண்டு.
    அவனுக்கு கூலி ..ஐம்பது  ரூபா  நோட்டு  இரண்டு .
    அவன் வாழ்வது ……
    ஐந்து  ஜீவன்களோடு .
    கட்டிலில்  மூன்று
    தொட்டிலில்  ஒன்று .
    எட்டிபார்க்கிறது .
     

     

    கட்டியவள்…தங்க ..                                       
    கட்டி’ யவள் .அவனுக்கு .
    கஞ்சி குடித்தபின்
    எஞ்சி  இருப்பது
    நெஞ்சு விடும்
    நிறைவான மூச்சே !
    நிறைவான  உணவு
    அவன் வாழ்வில்
    வளையாத  கேள்விக்குறி  ஒன்று
    வந்தாலே  உண்டு .
    அவன்  பல்லவியோ……
    பணத்திற்கு   என்ன செய்வது…
    அவன் ..
    வெட்டிய   மரம்   பல.

    வெட்டா  மரமும்  உள
    வறுமை  எனும்  மரத்தை
    வாழ்வெனும்  கோடாலியால்
    தினமும் வெட்டுகிறான்
    தின கூலி  பேசி .
    வயது  ஏறுகிறது ..
    வாங்குபவன்  கூலி  ஏறவில்லை
    வெட்டிய பின் மரம் தளைகிறது
    வெட்டியவன்  வாழ்வு  தளையவில்லை
    தட்டி கேட் க
    இவனால்  முடியவில்லை .
    எட்டியே  நிற்கிறான் .
    கட்டி கொள்ள என்று
    உடுப்பு  என்று  ஒன்று  இவன்
    இடுப்பிற்கு  உண்டு .
    அதுவும் கிழிந்தால் ….
    அதையும்  கோவணமாக்குகிறான்..
    அவன் பெற்ற
    அருஞ் செல்வங்களுக்கு ..
    அவன் பல்லவியோ ….
    பணத்துக்கு  என்ன  செய்வது?

    அவன் ….
    இரவிற்கு  குடிசை  உண்டு
    குடிசைக்கு  கூரைஉண்டு
    கூரையில்  பலகணிகள்  பலவுண்டு
    அவைகளில்  சந்திரனின்  ஒளியுண்டு
    நாட்டிலே …பவர்  கட்   உண்டு .
    இதனால்
    பலருக்கு  சங்கட முண்டு
    இவனுக்கு ஏது…அந்த சங்கடம் .
    சிரிக்க மனமுண்டு ..
    சேமிக்க  வறுமை உண்டு
    செலவுக்கு  உடல் உண்டு
    வரவுக்கு குழந்தை  உண்டு
    வந்ததற்கு  நோயுண்டு
    நோய்க்கு மருந்து  உண்டு .
    மருந்துக்கு  பணமுண்டோ ?
    பல்லவிதானே உண்டு.
    அவன் பல்லவி ….
    பணத்துக்கு என்ன செய்வது ?
     

    Share
  • நன்றி

        
    செழியன்

    என்
    புன்னகைக்காக   காதலித்தேன்
    என்றாய்  முதலில் .
    என்னிடத்தில் ……
    பொன் நகை
    இல்லை  என்றதும் ….என்னை
    கை விட்டாய் .
    கேட்டேன் ……..
    கஷ்டம்  என்றால்
    பொன் நகையை   அடகு வைக்கலாம்
    புன்னகையை  வைக்கமுடியாது ….என்றாய் .
    நன்றி…
    உன்னை  அடையாளம்  காட்டியதற்கு .
    நாளை ..
    நகையும்  தீர்ந்தால்
    என்னையே
    அடகு  வைக்க
    தயங்க  மாட்டாய்  என்பது
    என்ன  நிச்சயம் .
     
    படத்துக்கு நன்றி

    http://www.vectorjunky.com/praying-hands—realistic…/71175583.html

    Share
  • தாமரைகளே !…….தளர வேண்டாம்

    செழியன்

    பருவ குளத்தில்
    பூத்திருக்கும்
    இந்த தாமரையை ….
    பார்த்து  ..பார்த்து
    செல்கின்றனர் …பறிக்காமலேயே
    வறுமை  சேற்றில்
    அது இருக்கிறதாம் .
    வரதட்சணை  பாலம்
    இருந்தால்தான்
    வருவார்களாம்  அதனிடம் .
    தாமரைகளே ! தளரவேண்டாம் .
    உம்மை பறிக்கும்
    காலம் தொலைவில் இல்லை .
    பறிக்காமலேயே ,,
    உங்களை  பார்த்து கொண்டிருக்க
    ஆண்கள்  ஒன்றும்
    உங்களை  போல
    பொறுமைசாலிகள் அல்ல .
     
    படத்திற்கு நன்றி

    http://www.naturecultures.com/0020.php

    Share