செழியன்

மருத்துவ சேவையில்
மணக்க வேண்டிய …மலரை
மனமில்லா
பாவிகள் பலர்
காமவெறி கொண்டு ….
சிதைத்து  ….சேதாரப்  படுத்திவிட்டார்கள்
சேதாரத்திற்கு
ஆதாரம் இருந்தும் ..
நாடாளும் அரசு
தண்டிக்காமல்
நாட்களை  நகர்த்திக் கொண்டு இருக்கிறது ,……
நாடக காட்சிகளாக .
மறந்தும் அவர் களுக்கு
மரண தண்டனை  அளிக்க  கூடாது .
காமத்தை …….
கனவிலும்  நினைக்கமுடியாதபடி
உடலில் அந்த
உணர்வுகளை  தூண்டும்  நரம்புகளை
ஊனப்படுத்தி …..
உயிர் உள்ளவரை  அந்த ……
உணர்வுக்கு….  ஏங்கி…… ஏங்கி…..
கடைசி வரை  காலத்தை கழிக்கவேண்டும் .
அடக்கு முறையில்
காம வெறியை  களிப்பவர்களை
அண்டத்திலிருந்தே   கழித்துவிடவேண்டும்

 

படத்துக்கு நன்றி: http://my.englishclub.com/profiles/blogs/silent-of-tears

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *