தண்டனை
மருத்துவ சேவையில்
மணக்க வேண்டிய …மலரை
மனமில்லா
பாவிகள் பலர்
காமவெறி கொண்டு ….
சிதைத்து ….சேதாரப் படுத்திவிட்டார்கள்
சேதாரத்திற்கு
ஆதாரம் இருந்தும் ..
நாடாளும் அரசு
தண்டிக்காமல்
நாட்களை நகர்த்திக் கொண்டு இருக்கிறது ,……
நாடக காட்சிகளாக .
மறந்தும் அவர் களுக்கு
மரண தண்டனை அளிக்க கூடாது .
காமத்தை …….
கனவிலும் நினைக்கமுடியாதபடி
உடலில் அந்த
உணர்வுகளை தூண்டும் நரம்புகளை
ஊனப்படுத்தி …..
உயிர் உள்ளவரை அந்த ……
உணர்வுக்கு…. ஏங்கி…… ஏங்கி…..
கடைசி வரை காலத்தை கழிக்கவேண்டும் .
அடக்கு முறையில்
காம வெறியை களிப்பவர்களை
அண்டத்திலிருந்தே கழித்துவிடவேண்டும்
படத்துக்கு நன்றி: http://my.englishclub.com/profiles/blogs/silent-of-tears