முப்பால் கொடுத்த முனிவரே !

0

 
செழியன்
முப்பால் கொடுத்த முனிவரே ! thiru
இன்று

‘திருவள்ளுவர் தினம்’

அறிவித்து விட்டது.. அரசு விடுமுறையுடன்
இரண்டு ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டது.
உனது குறளுக்கும் – குரலுக்கும்
இருந்தாலும், புரிந்துகொண்டார்கள்
உன்னையும், உன் குறளையும்’ – இப்படி
‘அறத்துப்பால் தந்தாய் ‘
அறம்..மறந்து. -.. மறுத்து
சேவை எனச் சொல்லி, அவரவர்
தேவைகளுக்காக, கொள்ளை,கூட்டுக்கொள்ளை, ஏமாற்று
என கோடிகோடியாய் பொருள் சேர்த்து, பாதுகாக்க
‘ அற ‘ க்கட்டளை அமைத்துக்கொண்டார்கள் – இது அவர்கள்
உணர்ந்த ‘ அறத்துப்பால்

பொருட்பாலில்
‘ குடி செயல் வகை ‘ என ஒரு அதிகாரம் தந்தாய்
‘ குடி ‘ செயலோ வகை வகையாக நடக்கிறது.
தெருவுக்குத் தெரு
பள்ளிக்கருகே… கோவிலுக்கருகே
தனியார் பார்.. அரசு பார்… அனுமதியுடன்
வயசு வித்தியாசம் இல்லாமல் அருந்தலாம்
அவமானப்படாத அரசுக்கு
வருமானம் பல கோடிகளில்
இது … இவர்கள் குடித்த ‘ பொருட்பால் ‘

காமத்துப் பால் தந்தாய் – இதில்
காமத்தின் மேல் வெறி கொண்டு
வல்லுறவு- வன்புணர்ச்சி – தனியாக_கூட்டாக
வயது பேதம் இன்றி
உறவு பேதம் இன்றி
வக்கிர உணர்ச்சியில் – மிருகத்தையே மீறினார்கள்.

திருவள்ளுவரே !
முப்பால் கொடுத்த உனக்கு
நாட்டுக்குஅப்பால் – கடலில்
வானுயர்ந்த உருவச்சிலை..
நீ கொடுத்த முப்பாலும் வீணானதோ ?
விரக்தியில்..விட்ட கண்ணீர்தான்
கடலில் விழுந்து, கடலே பொறுக்காமல்
சுனாமியாக சுழற்றிஅடித்ததோ ?
சிலையாய் நின்றுவிட்டாய். – உயிரோடிருந்தால்
நிலைகுலைந்து
தலை சாய்ந்து இருப்பாய்…. நல்லவேளை.
இன்று திருவள்ளுவர் தினம்.
எழுத்தாணி கொண்டு
எழுதிய உன் இதயம் கிழித்திட்டாலும்
இந்த வலி இருக்குமோ உனக்கு !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *