வானில் வண்ண ஒளி வெள்ளம்!

0

 

பவள சங்கரி

நறுக்… துணுக்…..(19)

பல ஆண்டுகளுக்குப் பிறகு பூமியை காந்தப் புயல் தாக்கியது. இந்த காந்தப் புயல் ஐரோப்பிய நாடுகளின் வட முனையில் உள்ள அயர்லாந்து, இங்கிலாந்தின் வட பகுதியான ஸ்காட்லாந்து, நார்வே ஆகிய பகுதிகளைத் தாக்கியது. அப்போது வானில் நீலம், பச்சை வண்னங்கள் கலந்த ஒளி வெள்ளம், மின்னல் போல தோன்றியது. நாசாவைச் சார்ந்த விஞ்ஞானிகள் அதிநவீன தொலை நோக்குக் கருவிகள் மூலம் இதனைப் பதிவு செய்துள்ளார்கள். சூரியனில் நேற்று முன் தினம் கரோனா பிளாஸ்மா கதிர்வீச்சு உருவாகி அன்றைய தினமே பூமியின் காந்த மண்டலத்திற்குள் வந்து விட்டதாக உறுதிபடுத்தியுள்ளனர். 2005ஆம் ஆண்டிற்குப்பிறகு இத்தகைய காந்தப் புயல் பூமியைத் தாக்கியுள்ளது. சூரியனில் ஏற்படும் இந்த மின் காந்தப் புயலின் தாக்கம் 2013ஆம் ஆண்டில் அதிகமாக வாய்ப்புள்ளது என்ற அதிர்ச்சியான தகவலும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 1ஆம் தேதி சூரியனின் மேல் பகுதியில் இரண்டு முறை மிகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டு, அதி பயங்கர வெப்பம் கிளம்பி, அது பூமியை நோக்கி மணிக்கு ஒன்பது கோடியே முப்பது மைல் வேகத்தில் வந்ததும் குறிப்பிடத்தக்கது. வாயு மண்டலத்தைத் தாண்டி, பூமிக்கு மேல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்யக் கூடிய இந்த செயற்கை கோள்கள் . சூரியனில் இருந்து வரும் அதிக வெப்பம் காரணமாக தாக்கப்பட வாய்ப்புள்ளதாம்!

 படத்திற்கு நன்றி : சுவையான வீடியோக் காட்சியையும் காண கீழே சொடுக்குங்கள்!

http://baltimore.cbslocal.com/2012/03/08/nasa-monitoring-solar-flares-may-impact-gps-satellite-communications/

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.