தஞ்சாவூரில் தென் மண்டல கலாச்சார மையம்

0

பாரம்பரிய கலைகளைப் போற்றிப் பாதுகாக்கவும் பரவலாக்கவும் தஞ்சாவூரில் மண்டல கலாச்சார மையத்தை இந்தியாவின் மத்திய அரசு அமைத்துள்ளது. நாடு தழுவிய அளவில் மத்திய அரசு அமைத்துள்ள ஏழு மண்டல கலாச்சார மையங்களுள் தஞ்சாவூரும் அடங்கும். தஞ்சாவூருடன் சேர்த்து பாட்டீயாலா, உதய்பூர், அலகாபாத், கொல்கத்தா, திம்மாப்பூர், நாக்பூர் ஆகிய ஏழு இடங்களில் இந்த மண்டல கலாச்சார மையங்களின் தலைமை அலுவலகங்களை அமைத்துள்ளது.

நாட்டின் பாரம்பரிய கலைகளைப் பாதுகாத்தல், வளர்த்தல் மற்றும் பரவலாக்குதல் ஆகியவை இந்த மண்டல கலாச்சார மையங்களின் நோக்கமாகும்.

தஞ்சாவூரைத் தலைமையிடமாகக் கொண்டு அமையும் கலாச்சார மையம் தென் மண்டல கலாச்சார மையமாகும். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களும், அந்தமான் நிக்கோபார் தீவுகள், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்கள் தென் மண்டல கலாச்சார மையத்தின் கீழ் செயல்படும்.

=============================================
தகவல்: பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.