திருவாரூர் ரேவதி
கள்ளமில்லா சிரிப்பும்
கருணை பார்வையும்
நெஞ்சை உலுக்கிய 
நேச வார்த்தைகளுமாய்
உதறவும் முடியாமல்
உணர்த்தவும் முடியாமல்
நெருப்பில் வலம் வந்த – நம்
நேரங்கள் மாறியது 
காலம் பரிசளித்த 
பிரிவின் கடைசி 
நிமிடங்களில் 
 
உன் கண்கள் 
வாசித்த கவிதைகள்
இதம் தரும் குளிராய் 
என்னுள் வாழும் 
இறுதி வரை
 
படத்துக்கு நன்றி
 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “உன் கண்கள் வாசித்த கவிதைகள்

  1. நெருப்பில் நின்றாலும்….நீரில் மூழ்கினாலும்….சிதையில் எரிந்தாலும் மறக்க முடியாத சில பார்வைகள் எல்லோர் வாழ்க்கையிலும் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *