ராஜராஜேஸ்வரி ஜெகமணி


யா தேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண சம்ஸ்திதா:
நமஸ் தஸ்மை! நமஸ் தஸ்மை! நமஸ் தஸ்மை! நமோ நம:                  

அன்னையின் அன்பிற்கு ஈடாக ஏதும் இல்லை என்பதனாலேயே பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து இறைவன் அருள்வதாக இறைவனின் அடியார்கள் இறைவனைத் தாய்க்கு நிகராகக் கொண்டு வழிபட்டனர்.

தாயின் வடிவில் அருள் புரியும் அன்னை பராசக்தி
மதுரையில் மீனாட்சியாகஅருள் பாலிக்கிறாள்.

அன்னை மீனாக்ஷி சின்னஞ்சிறு பெண்போல சிற்றாடை இடையுடுத்து பொற்றாமரைக்குளத்தருகில் கோவில் கொண்டு ஆட்சிபுரியும் மதுரையில் நவராத்ரி உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

பகல்- இரவு இரு வேளைகளிலும் ஒன்பது நாட்கள் பூஜை செய்வது நவராத்திரி விரதம் என்றும்; ஒன்பது இரவுகள் மட்டும் பூஜை செய்வது நவராத்திரி பூஜை என்றும்  அழைக்கிறோம்…

முதல் மூன்று நாட்கள் அன்னை சக்தியையும்; அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியையும்; கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வீடுகளிலும் கோவில் களிலும் கொலுப்படி அமைத்து வழிபடுகிறோம்..பத்தாவது நாளான விஜயதசமியை வெற்றித் திருநாளாகக் கொண்டாடி வருகிறோம்.

சக்தி, செல்வம், ஞானத்தைத் தருவதாக  நவராத்திரி பூஜை அமைந்துள்ளது.

மதுரை வீதிகளில் நடந்தாலே முக்தி.காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையில் வாழ்ந்தால் முக்தி

தடாதகை, கோமளவல்லி, அங்கயற்கண்ணி, பாண்டிய ராஜகுமாரி, மாணிக்க வல்லி, சுந்தர வல்லி  என்றெல்லாம் அழைக்கப்படும் அன்னை மீனாட்சியின் விகரகம் சுத்தமான மரகத்தால் செதுக்கியது தேவலோகச்சிற்பியான மயன் !.

மரகதவல்லி என்றும் அருமையாய் அழைக்கப்படுகிறாள் அன்னை !

அன்னை மீனாட்சி கருணையே வடிவானவள் என்பதை அவளது நிறம் உணர்த்துகிறது…

பொற்றாமரைக்குளம்  இறைவன் சோமசுந்தரேஸ்வரரால்  உருவாக்கப்பட்டது…
பொற்றாமரைக்குளத்தில் தினமும் மலர்ந்த தங்கத்தாமரைகளால் சப்த ரிஷிகளும் அன்னை மீனாட்சியை ஆராதித்து வந்தார்களாம்.

சங்கப்பலகைகொண்டு தமிழ்ப்புலவர்களை சோதித்த இடம் !

மீன் , புழு , பூச்சிகள் என்று எந்த உயிரினமும்  வாழமுடியாத வரம் பெற்ற குளம் !

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதாடிய தமிழ்ப்புலவர்  நக்கீரர் இறைவனின் நெற்றிக்கண் வெப்பம் தாளாமல் குதித்த குளம் !

மந்திரமாவது நீறு என்று கூண்பாண்டியனின் தீராத வயிற்றுவலியை  கோவில் பிரசாதம் சமைக்கும் அடுப்பின் சாம்பல் தீர்த்துவைத்து  உணர்த்தியது !

மற்றவர்களின் கண்கள் இமைக்க வாய்ப்புண்டு; ஆனால், மீனின் கண்கள் இமைப்பதில்லை.

மீன் இமைக்காமல், தன் குஞ்சுகளைப் பாதுகாக்கும் தன்மையுடையது. அதுபோல், கயற்கண்ணியான மீனாட்சியும், தன் பக்தர்களை இரவும், பகலும் விழித்திருந்து பாதுகாக்கிறாள்.

அவளது கண்கள் இமைப்பதில்லை என்பதால் தான், மதுரையும் தூங்கா நகராக விளங்குகிறது.

மீன்தன் கண் பார்வையாலேயே தன் முட்டைகளை  போஷித்து  காத்து வளர்ப்பதைப்போல் தன் கண் இமையாமல் நம்மையையும் உ;லகத்து உயிர்களைப் பாதுகாத்து ரட்சிப்பதால் அன்னைக்கு மீனாட்சி என்று பெயர் …

அன்னை மீனாக்ஷி தன் அருட்கண்களின் பார்வை பட்ட மாத்திரத்தில் அவளது சகல குழந்தைகளுமான புல்- பூண்டிலிருந்து ஆரம்பித்து பிரம்மாதி தேவர்கள்வரை எல்லோரையும் தனது கருணா கடாக்ஷத்தால் நனைத்து அறிவை, உயிரை வளர்த்து உய்வித்து விடுகிறாள்.

.மதுரையில் மீனாக்ஷி தினமும் 8 விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுவது கண்கொள்ளாக்காட்சி.

 மீனாட்சி அம்மனின் அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக மீனாட்சி அம்மனுக்கு புதிதாக ஒரு வைர கிரீடம் தயாரிக்கப்பட்டுள்ளது. 11/2 கிலோ தங்கத்தால் செய்யப்பட்டு, 300 காரட் எடையுள்ள வைரக்கற்கள், 154 காரட் எடை கொண்ட மரகத, மாணிக்க, கற்கள் பதிக்கப்பட்டுள்ள வைரகீரிடம் அணிந்து அலங்காரமாய் காட்சி அளிக்கிறாள் அன்னை !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *