தொல்லை காட்சி – விஜய் டிவி யும் புது படங்களும்

0

 

 

விஜய் டிவி யும் புது படங்களும் 

 

ஒரு புது படம் டிவி யில் போட்டால் எவ்வளவு நாள் கழித்து மறுபடி அதே படத்தை போடலாம்? ஆறு மாசம்? ஒரு மாசம்? ஒரு வாரம்? போட்ட மறு நாளே போடுறாங்க சார் விஜய் டிவி யில் ! மெரீனா படம் இந்த ஆயுத பூஜை அன்று போட்டனர். மறுபடி அடுத்த நாளே வேறு புரோகிராம் இல்லாமல் மீண்டும் மெரினாவை ஓட விட்டார்கள் ! அம்மா – ஐயா இருவர் சார்பின்றி இருக்கு என விஜய் டிவி பக்கம் ஒதுங்கினால் அங்கும் இப்படி ஒரு கொடுமை நடக்குது !!

 

இதே விஜய் டிவியில் போட்ட இன்னொரு புது படம்: தோனி ! இதுக்கு என் பெண்ணோட கமன்ட்: விஜய தசமி அன்னிக்கு படிக்கணும்ன்னு சொல்லுவாங்க. இவங்க என்னா படிக்க  வேண்டாம்னு மெசேஜ் சொல்ற படத்தை  இன்னிக்கு போடுறாங்க !” 

 

“வா பெண்ணே வா.. வருங்கால ப்ளாகர் ஆகி சமூக பங்காற்று ! அந்த கெப்பாசிட்டி உன்கிட்டே இருக்கு” என்று சொல்லி, வாங்கி கட்டி கொண்டேன் !

 

ஜெயா டிவியில் மின் பற்றாக்குறை

 

முதல்வர் அம்மா ஜெயா டிவியில் வந்து “மின் பற்றாக்குறை” (மின்வெட்டு இல்லிங்களாம்;மின் பற்றாக்குறையாம் ) பற்றி நிறைய பேசினார். இதற்கு முந்தைய தி.மு.க மற்றும் இப்போதைய மத்திய அரசு தான் காரணம். மேலும் தாங்கள் எடுக்கும் அனைத்து முயற்சியும் பலிக்காமல் போக என்னென்ன காரணம், etc, etc

 

சென்னை தாண்டி மற்ற ஊர்களில் இதை பார்த்திருப்பார்களா என்றே தெரியலை (கரண்ட் இருந்தால் தானே பார்க்க? இருக்கும் நேரம் மற்ற உருப்படியான வேலை பார்ப்பார்களா? ஜெயா டிவி போடுவார்களா)

 

நிற்க அம்மா பேசிய விஷயத்துக்கு வருவோம்

 

” பிரசவ வலி எவ்ளோ கஷ்டம் என்பதை கேட்க யாரும் தயாராய் இல்லை. குழந்தை எப்படி இருக்கு; அதை சொல்லுங்கள்” என்று ஒரு பழமொழி உண்டு.

 

மக்களுக்கு தேவை மின்சாரம். விளக்கங்கள் கேட்க, நம்ப யாரும் தயாராய் இல்லை.

 

சீரியல் பக்கம் – ஜான்சி ராணி 

 

ஜீ (Zee )  டிவி மிக பாப்புலர் ஆகா விட்டால் கூட, அதில் வந்த நல்லதொரு சீரியல் ஜான்சி ராணி. 

ஜான்சி என்கிற ஊருக்கு ராணியாக இருந்த ஜான்சி ராணி கதையை சற்று மசாலா தூவி எடுத்துள்ளனர். ஹிந்தி டப்பிங் சீரியலான இது முன்பு தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி முடிந்தது. அதன் பெரும் வெற்றியை அடுத்து மீண்டும் மாலை ஐந்தரை மணிக்கு மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. எத்தனை கஷ்டங்களை தாண்டி எடுத்த குறிக்கோளில் உறுதியாய் நிற்கும் இந்த நிஜ கதை நிச்சயம் inspitrational story  !

 

மனதோடு மனோ 

 

ஜெயா டிவியில் ” மனதோடு மனோ ” நிகழ்ச்சி பாடகர் அல்லது இசை அமைப்பாளர் ஒருவரின் திரை உலக அனுபவங்கள் பற்றி ஜாலியாய் பேசுகிறது. 

 

இதில் சமீபத்தில் LR ஈஸ்வரி  வந்து பேசினார்/ பாடினார். “மாலை நேரத்து மயக்கம் “,  ” பட்டத்து ராணி பார்க்கும் பார்வை” போன்ற சில மறக்க முடியாத பாடல்கள் பாடினாலும் ஆடி மாதம் ஸ்பீக்கரில் இவர் பாட்டுகளை கேட்டு கேட்டே மிரண்டு போன தலைமுறையை சேர்ந்தவர்கள் நாங்கள். என் நண்பன் வழக்கறிஞர் பாலா இவர் பாட்டு கேட்டாலே டென்ஷன் ஆகிடுவான். இப்படி இவரை முழுசாய் வெறுப்போரும் உண்டு. 

 

குறிப்பிட்ட நிகழ்ச்சியில் தெரிய வந்த ஆச்சரிய விஷயம்: பல மகமாயி பாட்டுகள் பாடி பெரும் புகழடைந்த, எப்போதும் பெரிய அளவு குங்குமம் வைக்கும் ஈஸ்வரி நிஜத்தில் ஒரு கிருத்துவர் ! ஈஸ்வரி என்பதே சினிமாவிற்கு மட்டும் தான் போலும் !  

 

 

 

மாற்றான் பற்றி  KV ஆனந்தும் சூர்யாவும் 

 

KV ஆனந்தும் சூர்யாவும் வெவ்வேறு சானல்களில் மாற்றான் பற்றி மாய்ந்து மாய்ந்து பேசினார்கள். (நம்ம பதிவர்கள் பார்த்தா போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆகுது என கமன்ட் அடித்திருப்பர்; பின்னே அனைவரும் இணையத்தில் துவைத்து காய போட்ட படம் ஆயிற்றே ) 

 

படம் பார்த்து விட்டாலும், மிக சுமார் என்றாலும், அதனை எடுக்க எவ்ளோ கஷ்டப்பட்டுள்ளனர் என்று பார்க்க பாவமாய் தான் உள்ளது. ஒவ்வொரு காட்சியையும் இரண்டு முறை (வெவ்வேறு தினங்களில்) நடிக்கும் சூர்யா, லொகேஷன் சிரமங்கள், சண்டையில் உள்ள பிரச்சனை என ரொம்ப உருக்கமாய் பேசினார்கள். திரைக்கதையிலும் அதே மாதிரி மெனக்கேட்டிருக்கலாமே  சார் !

 படங்களுக்கு நன்றி :

http://www.in.com/l-r-eswari/profile-167679.html

http://tamil.oneindia.in/movies/review/2012/10/maatran-movie-review-163139.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *