
வாழ்க்கை ஓடத்தின் ஓட்டத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கும் வேடத்தில்
நிரந்தரம் என்பது ஏதடா?
அதை நினைத்து மாய்வது ஏனடா?
ஆட்டத்தின் நாயகன் அவன்
ஆட்டுவிப்பனும் அவன்
ஆடாது நிற்க முயன்றால்
ஆட்டாது விடுவானோ அவன்
ஆட்டுவதும் அவனே
அரவணைப்பதும் அவனே
அவன் ஆடாத ஆட்டமா?
அவன் இல்லாமல் நாமா?
எல்லாம் அவனே!!!!!!!!
படத்துக்கு நன்றி


Leave a Reply